Place Your Ads - Contact ads@Koodal.com Tamil Movie Special - News, Reviews, Previews, Gallery and more


30
Fri
Naresh Gupta turns nostolgicc - Tamilnadu News Headlines in Tamil தேர்தல் அதிகாரியாக நடுநிலையுடன் பணிபுரிந்தது எனக்கு திருப்தி அளிக்கிறது: நரேஷ் குப்தா
சென்னை, ஜூலை. 30-

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா நாளை ஓய்வு பெறுகிறார்.

இதையொட்டி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். நரேஷ் குப்தா கூறியதாவது:-
 
கடந்த 26-ந்தேதிவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது நீடிக்கப்பட்டது. இதில் மொத்தம் 31 லட்சத்து 12 ஆயிரத்து 665 பேர் மனு கொடுத்து உள்ளனர். இந்த பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும். சில நாட்களுக்கு முன் நைஜீரியா சென்று வந்தேன். அங்கு அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. அவர்களுக்கு இந்திய தேர்தல் முறைப்பற்றி விளக்கம் அளித்துள்ளேன். பல்வேறு தகவல்களை அனுப்பி உள்ளேன்.
 
நான் பல்வேறு அரசு துறைகளில் 37 ஆண்டுகள் பணிபுரிந்து இருக்கிறேன். 8 வருடங்கள் தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்து இருக்கிறேன். பொதுத்தேர்தலும், இடைத்தேர்தல்களும் சவாலானவை. இதில் 2009 பாராளுமன்ற தேர்தல் மிகுந்த சவால் உள்ளதாக அமைந்தது. என்றாலும் பொதுத் தேர்தலை விட இடைத்தேர்தல்களில் அதிக கவனம் செலுத்த வேண்டி இருந்தது. எனது பணிக்காலத்தில் நான் ஒரு நடுநிலையாளனாக பணிபுரிந்தேன். அந்த திருப்தி எனக்கு இருக்கிறது. பணத்துக்காக ஓட்டுப்போடும் பிரச்சினை குறித்து பலமுறை செய்தியாளர்கள் கேள்வி கேட்டு இருக்கிறார்கள். பணம் கொடுப்பதை தடுக்க என்ன செய்யலாம் என்பதற்கு நான் பதில் சொல்வதை விட புதிதாக வரும் தலைமை தேர்தல் அதிகாரி பதில் சொன்னால் சரியாக இருக்கும்.
 
கேள்வி: நீங்கள் ஒரு நேர்மையான தேர்தல் அதிகாரி மற்றவர்களுக்கு பயன்படும் வகையில் உங்கள் அனுபவத்தை புத்தகமாக எழுதுவீர்களா?
 
பதில்:- 37 ஆண்டுகள் அரசு ஊழியராக பணிபுரிந்த எனக்கு தற்போது சிறிது ஓய்வு தேவை. நான் புத்தகம் எழுதினாலும் மற்றவர்கள் படிப்பார்களா? என்று தெரியவில்லை. என்றாலும் என் அனுபவங்களை மற்றவர்களிடம் நடைமுறையில் பகிர்ந்து கொள்ள தயாராக இருக்கிறேன். ஓய்வுக்கு பிறகு நான் அரசியலில் ஈடுபடும் எண்ணம் எதுவும் இல்லை. முக்கியமான கட்டத்தில் ஓய்வு பெறுகிறேன். தமிழக மேல்-சபை ஏற்பாடு புதிய வாக்காளர் பட்டியல் போன்ற கூடுதலான பொறுப்புகளை புதிய தேர்தல் அதிகாரி செய்ய வேண்டியது இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

 
DMK-Cong alliance will continue, says Tha.Pandian - Tamilnadu News Headlines in Tamil திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடரும்: தா.பாண்டியன்
மதுரை, ஜூலை. 30-

திமுக-காங்கிரஸ் உறவு பலமாக உள்ளது. இது எதிர்காலத்திலும் தொடரும் என்று அதிமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் கூட்டணிகள் மாறும் என்றும், காங்கிரஸ் கட்சி அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் என்ற ரீதியிலும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா  பேசி வருகிறார். இந்நிலையில் அதிமுக கூட்டணியில் உள்ள முக்கியக் கட்சியின் தலைவரான தா.பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

நாளை முதல் ஆகஸ்ட் 2ம் தேதி சிவகங்கையில், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுக் கூட்டம் நடைபெறும். இக் கூட்டத்தில் மத்திய மற்றும் மாநில அரசியல் நிலவரம் குறித்து மாநிலக் குழு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்படும். எண்ணெய் நிறுவனங்கள் ரூ.3,996 கோடி லாபம் ஈட்டியுள்ள நிலையில் பெட்ரோல்-டீசல் விலை உயர்வு கண்டிக்கத்தக்கது. விலை உயர்வுக்கு நந்டம் என்பதை காரணமாக கூற முடியாது.

திமுக-காங்கிரஸ் கூட்டணி பலமாக இருக்கிறது. இது எதிர்காலத்திலும் தொடரும். எனவே இந்த இரு கட்சிகளுக்கு எதிரான ஒத்த கருத்துக்கள் கொண்ட கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தலைப்புச் செய்திகள் (

Top Stories in Tamil

)

மேலும் செய்திகள் (More)