Fri
தேர்தல் அதிகாரியாக நடுநிலையுடன் பணிபுரிந்தது எனக்கு திருப்தி அளிக்கிறது: நரேஷ் குப்தா
சென்னை, ஜூலை. 30-
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா நாளை ஓய்வு பெறுகிறார்.
இதையொட்டி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். நரேஷ் குப்தா கூறியதாவது:-
கடந்த 26-ந்தேதிவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது நீடிக்கப்பட்டது. இதில் மொத்தம் 31 லட்சத்து 12 ஆயிரத்து 665 பேர் மனு கொடுத்து உள்ளனர். இந்த பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும். சில நாட்களுக்கு முன் நைஜீரியா சென்று வந்தேன். அங்கு அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. அவர்களுக்கு இந்திய தேர்தல் முறைப்பற்றி விளக்கம் அளித்துள்ளேன். பல்வேறு தகவல்களை அனுப்பி உள்ளேன்.
நான் பல்வேறு அரசு துறைகளில் 37 ஆண்டுகள் பணிபுரிந்து இருக்கிறேன். 8 வருடங்கள் தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்து இருக்கிறேன். பொதுத்தேர்தலும், இடைத்தேர்தல்களும் சவாலானவை. இதில் 2009 பாராளுமன்ற தேர்தல் மிகுந்த சவால் உள்ளதாக அமைந்தது. என்றாலும் பொதுத் தேர்தலை விட இடைத்தேர்தல்களில் அதிக கவனம் செலுத்த வேண்டி இருந்தது. எனது பணிக்காலத்தில் நான் ஒரு நடுநிலையாளனாக பணிபுரிந்தேன். அந்த திருப்தி எனக்கு இருக்கிறது. பணத்துக்காக ஓட்டுப்போடும் பிரச்சினை குறித்து பலமுறை செய்தியாளர்கள் கேள்வி கேட்டு இருக்கிறார்கள். பணம் கொடுப்பதை தடுக்க என்ன செய்யலாம் என்பதற்கு நான் பதில் சொல்வதை விட புதிதாக வரும் தலைமை தேர்தல் அதிகாரி பதில் சொன்னால் சரியாக இருக்கும்.
கேள்வி: நீங்கள் ஒரு நேர்மையான தேர்தல் அதிகாரி மற்றவர்களுக்கு பயன்படும் வகையில் உங்கள் அனுபவத்தை புத்தகமாக எழுதுவீர்களா?
பதில்:- 37 ஆண்டுகள் அரசு ஊழியராக பணிபுரிந்த எனக்கு தற்போது சிறிது ஓய்வு தேவை. நான் புத்தகம் எழுதினாலும் மற்றவர்கள் படிப்பார்களா? என்று தெரியவில்லை. என்றாலும் என் அனுபவங்களை மற்றவர்களிடம் நடைமுறையில் பகிர்ந்து கொள்ள தயாராக இருக்கிறேன். ஓய்வுக்கு பிறகு நான் அரசியலில் ஈடுபடும் எண்ணம் எதுவும் இல்லை. முக்கியமான கட்டத்தில் ஓய்வு பெறுகிறேன். தமிழக மேல்-சபை ஏற்பாடு புதிய வாக்காளர் பட்டியல் போன்ற கூடுதலான பொறுப்புகளை புதிய தேர்தல் அதிகாரி செய்ய வேண்டியது இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடரும்: தா.பாண்டியன்
மதுரை, ஜூலை. 30-
திமுக-காங்கிரஸ் உறவு பலமாக உள்ளது. இது எதிர்காலத்திலும் தொடரும் என்று அதிமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் கூட்டணிகள் மாறும் என்றும், காங்கிரஸ் கட்சி அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் என்ற ரீதியிலும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பேசி வருகிறார். இந்நிலையில் அதிமுக கூட்டணியில் உள்ள முக்கியக் கட்சியின் தலைவரான தா.பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
நாளை முதல் ஆகஸ்ட் 2ம் தேதி சிவகங்கையில், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுக் கூட்டம் நடைபெறும். இக் கூட்டத்தில் மத்திய மற்றும் மாநில அரசியல் நிலவரம் குறித்து மாநிலக் குழு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்படும். எண்ணெய் நிறுவனங்கள் ரூ.3,996 கோடி லாபம் ஈட்டியுள்ள நிலையில் பெட்ரோல்-டீசல் விலை உயர்வு கண்டிக்கத்தக்கது. விலை உயர்வுக்கு நந்டம் என்பதை காரணமாக கூற முடியாது.
திமுக-காங்கிரஸ் கூட்டணி பலமாக இருக்கிறது. இது எதிர்காலத்திலும் தொடரும். எனவே இந்த இரு கட்சிகளுக்கு எதிரான ஒத்த கருத்துக்கள் கொண்ட கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Top Stories in Tamil
)- திருச்சியில் நடைபெற உள்ள அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் 14-ந் தேதிக்கு மாற்றம்
- காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணியில் பிரிவு ஏற்படும்: நாஞ்சில் சம்பத்
- ஹார்லிக்ஸ் கொள்ளைக்கு சி.பி.ஐ. விசாரணை தேவை: ஜெயலலிதா
- வன்னியர் சங்கத்துக்கு சீல் வைத்த அதிகாரிகள் மீது பா.ம.க.வினர் திடீர் தாக்குதல்
- வன்னியருக்கு தனி ஒதுக்கீடு: ராமதாசுக்கு கருணாநிதி அறிவுரை
- சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு கட்டாய கணினி வழி பயிற்சி
- மேலும் தமிழகச் செய்திகள்
- காஷ்மீர் குழுக்களுடன் பேச்சு நடத்த தயார்: ப.சிதம்பரம்
- ஆலடி அருணா கொலை வழக்கில் எஸ்.ஏ.ராஜாவை விடுதலை செய்தது உச்ச நீதிமன்றம்
- பேட்மிண்டன் வீராங்கனை சாய்னாவுக்கு கேல் ரத்னா விருது
- இந்திய தலைமை தேர்தல் ஆணையராக குரைசி பொறுப்பேற்பு
- தெலுங்கானா பகுதி இடைத்தேர்தலில் டி.ஆர்.எஸ். 6 இடங்களில் வெற்றி
- விலைவாசி உயர்வு பிரச்சினை: பாராளுமன்றம் 4-வது நாளாக முடங்கியது
- மேலும் இந்தியச் செய்திகள்
- இந்தியாவை அதிக அச்சுறுத்தலாக கருதும் பாகிஸ்தானியர்கள்
- விக்கிலீக்ஸ் உளவாளிகளை தண்டிப்போம்: தலிபான் மிரட்டல்
- பரமேஸ்வரனின் வழக்கு வெற்றி! நட்ட ஈடாக 80 ஆயிரம் பவுண்டஸ் செலுத்துமாறு உத்தரவு!
- என் பேச்சை கேட்டிருந்தால் பிரபாகரன் இறந்திருக்க மாட்டார்: கே.பி.
- இந்தியா - இலங்கை 2வது டெஸ்ட் கிரிக்கெட் டிராவில் முடிந்தது
- 8 குழந்தைகளை கொலை செய்த பெண் கைது
- மேலும் உலகச் செய்திகள்
மேலும் செய்திகள் (More)
- இலங்கையில் டி.வி. அலுவலகம் மீது தாக்குதல்
- கிராமங்களில் வீடு வீடாக சென்று சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் பரிசோதனை செய்ய புதிய திட்டம்
- பதிவுத்துறையில் மின்னணு கைரேகை பதிவுமுறை அறிமுகம்
- சென்னை மின்வாரிய ஊழியர் கொலை: கள்ளக்காதலனுடன் பெண் போலீஸ் கைது
- சுதந்திர தினத்தில் மதுவிலக்கை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும்: டாக்டர் ராமதாஸ்
- கர்நாடக அணைகளில் இருந்து 19 ஆயிரம் கனஅடி தண்?ணீர் வெளியேற்றம்
- தமிழக தலைமை தேர்தல் ஆணையர் பிரவீன்குமார்
- ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளுக்கு அரசு விதித்த புதிய நிபந்தனைகளை எதிர்த்த மனு தள்ளுபடி
- போலி டாக்டர்கள் என்று கைது செய்யப்பட்ட சித்த மருத்துவர்கள் மீதான வழக்கை கைவிட உத்தரவு
- 4 வயது சிறுவனை கொலை செய்ததாக வழக்கு: பூவரசி ஜாமீன் மனு தள்ளுபடி
- சீமான், வைகோ, நெடுமாறன் கைது செய்யப்பட்ட செயலுக்கு ஈழவேந்தன் கண்டனம்
- ஆப்கானிஸ்தானில் சாலையோரத்தில் கிடந்த குண்டு மீது பஸ் மோதியதில் 25 பேர் பலி
- ராஜபக்சே சொல்லியே இந்திய பிரதிநிதி வருகிறார்: இலங்கை
- கொல்லம் அருகே ரூ.2 கோடி போதைப் பொருளுடன் 4 பேர் கைது
- சொத்து குவிப்பு வழக்கு: கர்நாடக ஐகோர்ட்டில் ஜெயலலிதா மனு









