இந்த வெள்ளை மலர்களை கொண்டு
நான் உன் மீது வைத்திருக்கும்
கொள்ளை பிரியத்திற்கு எல்லை இல்லை
என்பதை சொல்லி சந்தோஷத்தில்
துள்ளி குதிக்கும் என் மனதையும்
சேர்த்து கொடுக்கிறேன் உனக்கு...
அள்ளி முடிந்துகொள்
இந்த மலர்களோடு சேர்த்து என்னையும்
பூவுக்குள் மனமாய் என்றும் இருப்போம்
இந்த பாருக்குள் பிரியாமல் ஒன்றாய்