முதல் பக்கம் » கவிதை » புதுக் கவிதை
புதுக் கவிதை -

Tamil Poem - Tamil Kavithaigal

பருவம்

ராசை நேத்திரன்

உன்னை பார்க்கும்போதெல்லாம்
என் உயிர் மூச்சி வரை
உள்ளே சென்று திரும்பும்
உனக்கு ஏன் புரியவில்லை
என் உயிர் மூச்சே
நீ தான் என்று...

உன் நினைவலைகளின்
நிதர்சனத்தில் நிரம்பி
போகின்றன என் அன்றாட 
நிஜ வாழ்க்கை

என் பருவ காலத்தின்
உணர்ச்சி வேகத்தில்
பார்த்தது எல்லாம்
அழகாய் தெரியும்
பட்சத்தில் நீ மட்டும்
என் உயிரின் அழகாய்
தெரிந்தாய்...

புதுக் கவிதை

Site Meter