ஆழிப் பேரலை
யுகபாரதி
அலைகடலென அனைவரும்
எழுத முடியுமா இனிமேல்
பொதுக்கூட்ட சுவரொட்டியில்
கிளிஞ்சல் பொறுக்கிய
கடற்கரையில்
ஏன் பொறுக்க வைத்தார்
குழந்தைகளை?
எமனாய் வந்த கடலை
எதிர்கொண்ட பிறகு
எவனைப் புகழ்வது
கருணைக் கடலென்று?
எங்கு போய்க்
கரைப்பது கடலால் இறந்தவர்களின்
அஸ்தியை....
நன்றி: செம்பருத்தி இதழின் தமிழினி கட்டுரை.