முதல் பக்கம் » கவிதை » மரபுக் கவிதை
மரபுக் கவிதை -

Tamil Poem - Tamil Kavithaigal

நந்தலாலா

பாரதியார்
காக்கைச் சிறகினிலே நந்தலாலா - நின்றன்
கரியநிறந் தோன்றுதையே நந்தலாலா;

பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா - நின்றன்
பச்சைநிறந் தோன்றுதையே நந்தலாலா;

கேட்கு மொலியிலெல்லாம் நந்தலாலா - நின்றன்
கீத மிசைக்குதடா நந்தலாலா;

தீக்குள் விரலைவைத்தால் நந்தலாலா - நின்னைத்
தீண்டுமின்பந் தோன்றுதடா நந்தலாலா.

மரபுக் கவிதை

Site Meter