(20 Mar 2010)56வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் உள்ள விஞ்ஞான பவனில் நேற்று நடந்தது. ஜனாதிபதி பிரதீபா பட்டீல் விருதுகளை வழங்கினார். நான் கடவுள் படத்தை இயக்கிய இயக்குனர் பாலாவுக்கு சிறந்த இயக்குனருக்கான விருது வழங்கப்பட்டது. இந்திய சினிமா உலகின் மூத்த கலைஞரும், சிறந்த ஒளிப்பதிவாளருமான வி.கே.மூர்த்திக்கு, நாட்டின் மிக உயர்ந்த திரைப்பட விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. 87 வயதான இவர்தான் இந்தியாவின் முதல் சினிமாஸ்கோப் படமான காகஸ் கி பூல் இந்திப் படத்தின் கேமராமேன் ஆவார். நிகழ்ச்சியில் ஜோக்வா என்ற மராத்தி மொழிப் படத்தில் நடித்த உபேந்திராவுக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது. பேஷன் என்ற இந்திப் படத்தில் நடித்த பிரியங்கா சோப்ராவுக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. இதே படத்தில் நடித்த கங்கனா ரனாவத்துக்கு சிறந்த துணை நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. சாம்ஸ் பட்டேல் (தேங்க்ஸ் மா) சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருது பெற்றார். ஜோக்வா படத்தில் பாடிய ஹரிஹரன், சிறந்த பாடகருக்கான விருதை பெற்றார். சிறந்த பிராந்திய மொழி படங்களில் தமிழில் வாரணம் ஆயிரம் படம் தேர்வு செய்யப்பட்டது. இதற்கான விருதை இயக்குனர் கௌதம் மேனன் பெற்றார். விழாவில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அம்பிகா சோனி, இணையமைச்சர் ஜெகத்ரட்சகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
(20 Mar 2010)பல்வேறு நாடுகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறார் ஏ.ஆர்.ரகுமான். இதுபற்றி அவர் கூறியது: இந்த வருடம் முழுவதும் பிசியாக உள்ளேன். வெளிநாடுகளிலேயே 5 மாதங்களை கழிக்க உள்ளேன். ஐரோப்பிய நாடுகள், தென் அமெரிக்கா உட்பட பல நாடுகளில் இசை நிகழ்ச்சிகள் உள்ளன. இசைக்காக நேரம் ஒதுக்குவது போல, ஆன்மிகம், குடும்பத்துக்கும் அதிக நேரம் ஒதுக்குகிறேன். எனது குடும்பம் எப்போதும் என்னுடன் இருப்பதையே விரும்புகிறேன். இல்லையென்றால் வெளிநாட்டுக்கு சென்று வந்து பார்க்கும்போது குழந்தைகள் என்னை அங்கிள் என அழைக்கும் நிலை வரலாம். வாழ்க்கை நிரந்தரம் இல்லை. 43 வயதாகிறது. இப்போது வயதானவன். அதையும் நல்லதாகவே உணர்கிறேன். இன்று என்ன செய்ய விரும்புகிறேனோ அதை மட்டும் செய்கிறேன். நாளை பற்றி யோசிப்பதில்லை. நல்லவற்றை நிறைவேற்றுவதிலேயே கவனம் செலுத்துகிறேன் என்று கூறினார்.
(20 Mar 2010)மிகக் குறுகிய காலத்தில் வளர்ந்து நிற்கும் முன்னணி ஆடியோ நிறுவனம் திங்க் மியூசிக். தமிழ்த் திரையுலகின் முக்கியமான படத்தின் பாடல்கள் கடந்த இரண்டு வருடங்களாக இவர்கள் கையில்தான்! பையா இந்த நிறுவனத்தின் ஐம்பவதாது படம். இந்த சந்தோஷத்தை பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்து கொள்வதற்காக யூத் ஏரியாவின் டாப் மியூசிக் டைரக்டர்களை அழைத்திருந்தார்கள். யுவன் சங்கர் ராஜா, கார்த்திக்ராஜா, ஜேம்ஸ் வசந்தன், தமண், தரண் ஆகியோர் வந்திருந்தார்கள். என்னுடைய சுப்ரமணியபுரம் படத்தை திங்க் மியூசிக்தான் வாங்கியிருந்திச்சு. எப்பவும் முதல் காதல், முதல் முத்தத்திற்கு மனசில ஒரு முக்கியமான இடம் இருக்கும். அதுபோல என்னோட முதல் படமான சுப்ரமணியபுரம் ஆடியோவை இந்த நிறுவனம் வாங்கியிருந்ததால் இந்த கம்பெனி மேல் எனக்கு தனி அன்பு உண்டு என்றார் ஜேம்ஸ் வசந்தன். யுவன் பேச்சு அற்புதம். சற்றே பொதுநலன் சார்ந்த பேச்சு அது. எங்களை மாதிரி இசையமைப்பாளர்களின் ஆடியோவை வெளியிடுறீங்க. சந்தோஷம். அதே நேரத்தில் வளர துடிக்கிற அறிமுக இசையமைப்பாளர்களுக்கும் நீங்க வாய்ப்பு கொடுக்கணும். இதுபோன்ற இளம் திறமைசாலிகளுக்கு தயாரிப்பாளர் சிக்கி, அவங்க படம் எடுத்து, அது வெளியே வந்து ஹிட் ஆனால்தான் வாழ்க்கை. ஆனால் நீங்க நினைச்சா இந்த மாதிரி இசையமைப்பாளர்களை வச்சு ஆல்பங்கள் தயாரிச்சு வெளியிடலாம் என்றார். நிகழ்ச்சியில் பாடகர் ஹரிசரண், பாடகி மதுமிதா, திங்க் மியூசிக் இயக்குனர் ஸ்வரூப் ரெட்டி, சிஇஓ ப்ரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.
(19 Mar 2010)கச்சேரி ஆரம்பம் படம் தெலுங்கில் வெளியிடப்படுகிறது. இது குறித்து படத்தின் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி கூறியது: 3 வருட இடைவெளிக்கு பிறகு தமிழில் கச்சேரி ஆரம்பம் படத்தை சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. ஜீவா நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் தயாரான படம். எல்லா அம்சங்களும் கலந்த கமர்ஷியல் படமாக உருவாக்கப்பட்டுள்ளது. 220 பிரின்ட்டுகள் போடப்பட்டுள்ளது. இதுவரை குடும்ப பட ரசிகர்களுக்காக சென்டிமென்ட் படங்களைத்தான் தயாரித்து வந்தோம். இப்போது அந்த டிரண்ட் மாறிவிட்டதால் நாங்களும் மாறிவிட்டோம். இதே படத்தை தெலுங்கிலும் வெளியிட இருக்கிறோம். அதில் வடிவேலு காமெடிக்கு பதில் பிரம்மானந்தம் காமெடியை இணைக்க இருக்கிறோம். இதற்காக ஐதராபாத்தில் 15 நாட்கள் படப்பிடிப்பு நடத்த இருக்கிறோம் என்று கூறினார்.
(19 Mar 2010)அஞ்சாதே படத்துக்குப் பிறகு தமிழில் நரேனுக்கு படங்கள் எதுவும் இல்லை. மலையாள படத்துக்கு மட்டும் முக்கியத்துவம் தருவதாக குற்றச்சாட்டு நிலவி வருகிறது. ஆனால், இல்லை என்று மறுக்கிறார் நரேன். இதுகுறித்து நரேன் கூறியது: தமிழில் பெரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது உண்மைதான். பூக்கடை ரவியில் நடிக்கிறேன். இப்போது தம்பிக்கோட்டையில் நடித்து வருகிறேன். அதில் எனக்கு பூனம் பஜ்வா ஜோடியாக நடிக்கிறார். அக்காவாக மீனா நடிக்கிறார். மலையாளப் படங்களுக்கு நான் முக்கியத்துவம் தருவதாக சொல்வது தவறு. தமிழில் அதிகப் படங்களில் நடிப்பதற்காகவே, மலையாளத்தில் புதுப்படம் ஒப்புக்கொள்ளவில்லை. தம்பிக்கோட்டை படத்தில் அனுபவம் வாய்ந்த நட்சத்திரங்களான பிரபு, மீனா, சங்கீதாவுடன் இணைந்து நடிக்கிறேன் என்றார் நரேன்.









