(05 Mar 2010)ராதமாமோகனின் பயணம் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடர்ந்து நடந்து வருகிறது. படத்தின் முக்கியமான வேடங்களில் நடிப்பவர்கள் நாகார்ஜுன் மற்றும் பிரகாஷ்ராஜ். நாகார்ஜுன் தெலுங்கு நடிகர். பிரகாஷ்ராஜ், தெலுங்கு நடிகர் என்று சொல்லும் அளவுக்கு ஆந்திராவில் பிரபலமானவர். இதன் காரணமாக பயணம் தமிழில் தயாராகும் அதேநேரம் தெலுங்கிலும் தயாராகிறது. பயணத்தின் தெலுங்குப் பெயர் வான்டட். பயணத்தை பிரகாஷ்ராஜின் டூயட் மூவிஸ் தயாரிக்கிறது. வான்டடை தயாரிப்பவர் தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு. கே.வி.குகன் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். இவர் ராதாமோகனின் மொழி படத்துக்கு ஒளிப்பதிவு செய்தவர். மேலும் டூயட் மூவிஸின் தயாரிப்பில் இனிது இனிது என்ற படத்தையும் இயக்கியுள்ளார். விமானக் கடத்தலை மையமாக வைத்து பயணம் தயாராகி வருகிறது.
(05 Mar 2010)கேரளாவில் நடிகர், நடிகைகளின் அம்மா நடிகர் சங்கத்தில் இருந்து விலக்கப்பட்ட நடிகர் திலகன் புதிய போட்டி அமைப்பை உருவாக்க முடிவு செய்துள்ளார். இதுகுறித்து திலகன் கூறியது: நான் தொடங்க உள்ள அமைப்பு ஒரு போட்டி சங்கம் அல்ல, மாறாக அது ஒரு திரைப்பட அமைப்பாக இருக்கும். போட்டி சங்கம் அமைத்தால் மேலும் இதுபோன்ற பிரச்சினைகள் தோன்ற வாய்ப்புகள் உண்டு. அதை தடுக்கவே ஒரு புதிய திரைப்பட அமைப்பை உருவாக்க முடிவு செய்துள்ளேன். புதிய அமைப்பு குறித்தான அறிவிப்பு அடுத்த மாதம் வெளியிடப்படும். 1995- ம் ஆண்டு வரை சங்கங்கள் இல்லை. இருந்த போதும் கேரள திரைப்படங்களுக்கு அப்போது எந்த அசம்பாவித சம்பவங்களும் நடக்கவில்லை. சிறந்த இளைய தலைமுறை நடிகர்கள் இன்று இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் சூப்பர் ஸ்டார்கள் என்று கருதப்படும் சில நடிகர்களின் கீழ் அவர்கள் நசுக்கப்படுகிறார்கள். இந்த சூழ்நிலையில் முன்னேற துடிக்கும் இளைய நடிகர் சமுதாயத்தை திரட்டி புதிய அமைப்பை உருவாக்க உள்ளேன் என்று கூறினார்.
(04 Mar 2010)சிம்பு-த்ரிஷாவின் முத்தக்காட்சி விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் இடம் பெற்றுள்ளது. தொடர்ந்து முத்தக்காட்சிகளில்
நடிப்பீர்களா என்று த்ரிஷாவிடம் கேட்டபோது அவர் கூறியது:-முத்தக்காட்சிகளில் நடிப்பதில் எனக்கு எந்த பிரச்சினையும்
இல்லை. கதைக்கு தேவை என்பதால் சிம்புவை முத்தமிட்டேன். அதில் தவறல்ல. இது போன்ற காட்சிகள் கதையை பொறுத்தும் இயக்குனர் விருப்பத்தை பொறுத்தும் அமைகின்றன. இயக்குனர் சொல்படி நான் நடிக்கிறேன். திரையுலகில் ஒரு நிலையை எட்டி விட்டேன். முத்த காட்சிகள், நீச்சல் உடை காட்சிகளில் நடிக்க மறுத்தால் தகுதி குறைவாக ஆகிவிடும். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் என் கதாபாத்திரத்தை பாராட்டி மெயிலில் வாழ்த்துகள் குவிகின்றன. அவர்களுக்கெல்லாம் பதில் அனுப்பி வருகிறேன். நிறைய படங்களில் நடித்துள்ளேன். இதற்கு முன் இவ்வளவு பாராட்டுகள் வந்ததில்லை. ஜெஸ்சி போன்ற கதாபாத்திரங்கள் அமைவது அபூர்வமானது என்று கூறினார்.
(04 Mar 2010)ரவி தேஜா, நயன்தாரா நடித்த துபாய் சீனு ஆந்திராவில் பெரிய வெற்றியைப் பெற்றது. நயன்தாரா நடித்திருந்ததால் இந்தப் படத்தை துபாய் ராணி என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டனர். படம் ரொம்ப சுமாராகவே போனது. தெலுங்கில் ரவி தேஜா டான் சீனு என்ற படத்தில் நடிக்கிறார். துபாய் சீனுவுக்கு கிடைத்த வெற்றியை மனதில் வைத்து டான் சீனுவை உருவாக்குகிறார்கள். இந்தப் படத்தில் நடிக்க முதலில் த்ரிஷாவிடம் கால்ஷீட் கேட்கப்பட்டது. அவர் இந்தி, தமிழ் என்று பிஸியாக இருப்பதால் கால்ஷீட் இல்லையென கைவிரிக்க ஸ்ரேயாவை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். தெலுங்கில் பல வருடங்களாக ஸ்ரேயா நடிக்கவில்லை. இப்போதுதான் புலி படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார். அந்த ராசியா என்று தெரியவில்லை அதற்குள்ளே ரவி தேஜாவின் ஜோடியாகியிருக்கிறார். தமிழிலும் டான் சீனுவை எதிர்பார்க்கலாம்.
(04 Mar 2010)இந்தி திரையுலகின் பிரபல நடிகையான காத்ரினா கைஃப், போஜ்பூரி மொழி படத்தில் நடிக்கவுள்ளார். பிரபல இந்தி படத்
தயாரிப்பாளரான பிரகாஷ் ஜா உருவாக்கும் படத்தில் காத்ரினா கைஃப் நடிக்கிறார். பிரபல நடிகர்களான மனோஜ் பாஜ்பாய், ரவிகிஷன் ஆகியோரும் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். இதற்கிடையே முதன் முறையாக ஐட்டம் கேர்ள் வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் காத்ரினா கைஃப். டீஸ் மார் கான் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை பாராகான் இயக்குகிறார். படத்தை பாராகானின் கணவர் ஷிரிஷ் கண்டர் தயாரிக்கும் இந்த படத்தில் காத்ரினா கைஃப்க்கு ஜோடியாக நடிப்பது அக்ஷய்குமார். இருவரும் ஏற்கனவே நமஸ்தே லண்டன், வெல்கம், சிங் இஸ் கிங் மற்றும் தீ தனா தன் ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. படம் குறித்து தயாரிப்பாளர் கண்டர் கூறுகையில், இதுவொரு வித்தியாசமான படம். இந்தப் படத்தில் ஐட்டம் கேர்ள் கதாபாத்திரத்தில் காத்ரினா கைஃப் நடிக்கிறார். இதுகுறித்து வேறு எதுவும் கூற முடியாது என்றார். காத்ரினா கைஃப் முதன் முறையாக ஐட்டம் கேர்ள் கதாபாத்திரத்தில் நடிப்பதால் இந்தி திரையுலகமே இப்படத்தை மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.









