கூடல் | Tamil Koodal https://koodal.com/ Latest Tamil News and Tamil Movie Reviews Online in Tamil Entertainment Website - Koodal.com Sun, 13 Apr 2025 04:40:38 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://i0.wp.com/koodal.com/wp-content/uploads/2021/12/cropped-koodal-logo.jpg?fit=32%2C32&ssl=1 கூடல் | Tamil Koodal https://koodal.com/ 32 32 201197430 பாமக தலைவராக நானே தொடர்ந்து செயல்படுவேன்: அன்புமணி ராமதாஸ்! https://koodal.com/news/2025/04/13/i-will-continue-to-act-as-pmk-leader-anbumani-ramadoss/ Sun, 13 Apr 2025 04:39:06 +0000 https://koodal.com/?p=82930 “பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக நான் தொடர்ந்து செயல்படுவேன். எந்த நோக்கத்திற்காக கட்சியின் தலைவராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டேனோ, எந்த நோக்கத்திற்காக ராமதாஸ் பாட்டாளி மக்கள் கட்சியை தொடங்கினாரோ, அந்த நோக்கத்தை நோக்கி உங்களின் ஆதரவுடன் இன்னும் தீவிரமாக பயணிக்க நான் உறுதி…

The post பாமக தலைவராக நானே தொடர்ந்து செயல்படுவேன்: அன்புமணி ராமதாஸ்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
“பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக நான் தொடர்ந்து செயல்படுவேன். எந்த நோக்கத்திற்காக கட்சியின் தலைவராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டேனோ, எந்த நோக்கத்திற்காக ராமதாஸ் பாட்டாளி மக்கள் கட்சியை தொடங்கினாரோ, அந்த நோக்கத்தை நோக்கி உங்களின் ஆதரவுடன் இன்னும் தீவிரமாக பயணிக்க நான் உறுதி பூண்டிருக்கிறேன்” என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் பதவி குறித்து எதிர்பாராத குழப்பங்கள் நிலவி வருகின்றன. அதன் காரணமாக, கட்சி வளர்ச்சிக்கும், மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாட்டு பணிகளுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதை மனதில் கொண்டு, உங்களின் ஐயங்களைப் போக்கவே இந்த மடல்.

ஊமை சனங்களுக்கு சமூகநீதியும், அரசியல் அதிகாரமும் பெற்றுத் தர வேண்டும் என்பதற்காகவே 1989&ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் நாள் சென்னை சீரணி அரங்கில் ராமதாஸால் பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்டது. அப்போது பாட்டாளி மக்கள் கட்சியால் உருவாக்கப்பட்ட கொள்கை விதிகளின் படி பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரை கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் தான் தேர்வு செய்ய முடியும். அதனடிப்படையில் 2022ஆம் ஆண்டு மே மாதம் 28ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் ராமதாஸின் வாழ்த்துகளுடனும் உங்களின் ஆதரவுடனும் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவன் நான். அதை இந்திய தேர்தல் ஆணையமும் அங்கீகரித்திருக்கிறது.

கட்சியின் தலைவராக நான் முறைப்படி பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதை தேர்தல் ஆணையமும் அங்கீகரித்திருக்கும் நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக நான் தொடர்ந்து செயல்படுவேன்.எந்த நோக்கத்திற்காக கட்சியின் தலைவராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டேனோ, எந்த நோக்கத்திற்காக ராமதாஸ் பாட்டாளி மக்கள் கட்சியை தொடங்கினாரோ, அந்த நோக்கத்தை நோக்கி உங்களின் ஆதரவுடன் இன்னும் தீவிரமாக பயணிக்க நான் உறுதி பூண்டிருக்கிறேன். எனது பணிகளுக்கு பாட்டாளி சொந்தங்களாகிய உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும் தொடரும் என்று உறுதியாக நம்புகிறேன்.

நம்முன் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டிய இரு இலக்குகள் உள்ளன. முதலாவது, வரும் மே 11 ஆம் தேதி மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாட்டை வெற்றிகரமாக நடத்திக் காட்டுவது. இரண்டாவது, 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் கடந்த காலங்களை விட அதிக இடங்களில் வெற்றி பெற்று நமது வலிமையை நிலை நிறுத்துவது.

மாமல்லபுரத்தில் சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு மிகச்சிறப்பாக நடத்தப்பட வேண்டும் என்பது நமது பாட்டாளி சொந்தங்களின் 12 ஆண்டு கனவு. அந்தக் கனவை நிறைவேற்றும் வகையில் சித்திரை முழுநிலவு மாநாட்டை வெற்றிகரமாக நடத்தும் பொறுப்பை என்னிடம் வழங்கிய ராமதாஸ், அதற்காக மாநாட்டுக்குழு தலைவராக என்னை நியமித்திருக்கிறார்.

ராமதாஸ் இட்ட இந்தப் பணியை வெற்றிகரமாக முடிக்கும் கடமை நம் அனைவருக்கும் உண்டு. மாநாட்டுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் திட்டமிடப்பட்டவாறு முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அனைத்து பணிகளையும் நான் ஒருங்கிணைத்து வருகிறேன். அதே போல் மாநாட்டுக்கு பாட்டாளி சொந்தங்களை அழைத்து வருவதற்கான களப்பணிகளை அனைத்து நிலை நிர்வாகிகளும் தொடர்ந்து முழு வீச்சில் மேற்கொள்ள வேண்டும்.

2026 சட்டப்பேரவை தேர்தலைப் பொறுத்தவரை பாட்டாளி சொந்தங்கள் விரும்பும் வலிமையான கூட்டணியை ராமதாஸ் வழிகாட்டுதலுடன் அமைக்க வேண்டியது எனது பெரும் கடமையாகும். அந்தக் கடமையை அனைவரும் மகிழ்ச்சியடையும் வகையில் சரியான நேரத்தில் செய்து முடிப்போம். பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் என்ற முறையில் அது தான் என் தலையாய பணியாகும். மாநாட்டுப் பணிகளையும் சட்டப்பேரவை தேர்தலுக்காக கட்சியை வலுப்படுத்தும் பணிகளையும் கட்சியின் அனைத்து நிலை நிர்வாகிகளும் களத்தில் மேற்கொள்ள வேண்டும்.

மீண்டும் சொல்கிறேன்.. அரசியல் களத்தில் ராமதாஸின் லட்சியங்களை வென்றெடுப்பதும், அவருக்கு புகழ் சேர்க்கும் வகையில் பாட்டாளி மக்கள் கட்சியை வழிநடத்திச் செல்வதும் எனது முழு முதல் கடமை. அதற்காக உங்களை சந்திக்க விரைவில் உங்களை தேடி வருவேன். இவ்வாறு அன்புமணி கூறியுள்ளார்.

The post பாமக தலைவராக நானே தொடர்ந்து செயல்படுவேன்: அன்புமணி ராமதாஸ்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
82930
தமிழகத்திற்கு நல்ல காலம் பிறந்துவிட்டது: ஆர்.பி.உதயகுமார்! https://koodal.com/news/2025/04/13/good-times-have-arrived-for-tamil-nadu-r-p-udayakumar/ Sun, 13 Apr 2025 04:37:14 +0000 https://koodal.com/?p=82928 தமிழகத்திற்கு நல்ல காலம் பிறந்துவிட்டது. மக்கள் விரோத ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்று ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரையில் நடைபெற்ற அதிமுக பூத் கமிட்டி கிளை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:- தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் உள்ள 68,500 வாக்குச்சாவடிகளுக்கும்…

The post தமிழகத்திற்கு நல்ல காலம் பிறந்துவிட்டது: ஆர்.பி.உதயகுமார்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
தமிழகத்திற்கு நல்ல காலம் பிறந்துவிட்டது. மக்கள் விரோத ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்று ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மதுரையில் நடைபெற்ற அதிமுக பூத் கமிட்டி கிளை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் உள்ள 68,500 வாக்குச்சாவடிகளுக்கும் பூத் கமிட்டி கிளை பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். 3 பெண்கள் உள்பட 9 பேர் இடம் பெறுவார்கள். தற்போது தமிழகத்திற்கு நல்ல காலம் பிறந்துவிட்டது. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அற்புதமான கூட்டணி உருவாகிவிட்டது. இந்த கூட்டணி தமிழக உரிமையை நிலைநாட்டும் கூட்டணியாகும்.

திமுக அமைச்சர்கள் பொதுவெளியில் சபை நாகரிகம் இல்லாமல் பேசுகிறார்கள். பெண்களை அதிமுக தெய்வமாக வணங்கும். ஆனால் பெண்களை திமுக இழிவாக பேசி வருகிறது. வரும் சட்டமன்ற தேர்தலில் பெண்களின் ஒருவாக்குகள் கூட திமுகவுக்கு போட மாட்டோம் என்று உறுதிமொழி ஏற்க வேண்டும். இந்த மக்கள் விரோத ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post தமிழகத்திற்கு நல்ல காலம் பிறந்துவிட்டது: ஆர்.பி.உதயகுமார்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
82928
பா.ஜ.க.வில் எந்தப் பொறுப்பும் இல்லை: விஜயதாரணி ஏமாற்றம்? https://koodal.com/news/2025/04/13/no-responsibility-in-bjp-vijayadharani-disappointed/ Sun, 13 Apr 2025 04:36:23 +0000 https://koodal.com/?p=82926 தற்போது வரையில் பா.ஜனதாவில் விஜயதாரணிக்கு பொறுப்புகள் ஏதும் வழங்கப்படவில்லை. காங்கிரஸ் கட்சியின் கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு தொகுதியில் தொடர்ந்து 3-வது முறையாக எம்.எல்.ஏ-வாக தேர்வான விஜயதாரணி, தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பா.ஜ.கவில் இணைந்தார். தற்போதுவரை அவருக்கு கட்சியில் பதவி…

The post பா.ஜ.க.வில் எந்தப் பொறுப்பும் இல்லை: விஜயதாரணி ஏமாற்றம்? appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
தற்போது வரையில் பா.ஜனதாவில் விஜயதாரணிக்கு பொறுப்புகள் ஏதும் வழங்கப்படவில்லை.

காங்கிரஸ் கட்சியின் கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு தொகுதியில் தொடர்ந்து 3-வது முறையாக எம்.எல்.ஏ-வாக தேர்வான விஜயதாரணி, தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பா.ஜ.கவில் இணைந்தார். தற்போதுவரை அவருக்கு கட்சியில் பதவி வழங்கப்படாத நிலையில், விஜயதாரணி அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் விஜயதாரணி பா.ஜனதாவில் தன்னை இணைத்து கொண்டார். இதனால், அவரின் சட்டசபை உறுப்பினர் பதவி பறிபோனது. இதன்பிறகு, தமிழக பா.ஜனதாவில் அவருக்கு பொறுப்புகள் வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. சமீபத்தில், மத்திய மந்திரி அமித்ஷாவை டெல்லிக்கு சென்று, விஜயதாரணி நேரில் சந்தித்தார். கட்சி பொறுப்பு தொடர்பாக அவர் அமித்ஷாவிடம் வலியுறுத்தியாக அப்போது பேசப்பட்டது. ஆனால், தற்போது வரையில் பா.ஜனதாவில் விஜயதாரணிக்கு பொறுப்புகள் ஏதும் வழங்கப்படவில்லை.

இந்த நிலையில், சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், விஜயதாரணியும் கலந்து கொண்டார்.
தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பெயர்கள் நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டன. அதிலும், விஜயதாரணியின் பெயர் இடம் பெறவில்லை. இதனால், அவர் ஏமாற்றம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய விஜயதாரணி, “விரைவில் பதவியோ பொறுப்போ வழங்கப்படும் என்று, மேலிடமும், கட்சியும் உறுதி அளித்திருக்கிறது. நிச்சயமாக அதற்கு உண்டான செய்தி உங்களை வந்து சேரும். ஏற்கனவே அதிருப்தி தெரிவித்திருந்தேன். இனிமேல் அதிருப்தி வராத அளவுக்கு உறுதி அளித்திருக்கிறார்கள். உறுதியாக, நிச்சயமாக நல்ல பதவி வழங்குவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். அவரது நீண்டகால அனுபவம் வாய்ந்த அரசியல் பயணம் பா.ஜ.க.வை வழிநடத்தக்கூடிய பொறுப்பு அவர் முன் வைக்கப்பட்டுள்ளது. 2026 தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்று தருவார் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை” என்று அவர் கூறினார்.

The post பா.ஜ.க.வில் எந்தப் பொறுப்பும் இல்லை: விஜயதாரணி ஏமாற்றம்? appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
82926
மேற்கு வங்கத்தில் வக்பு சட்டத்தை எதிர்த்து வன்முறை: 3 பேர் உயிரிழப்பு! https://koodal.com/news/2025/04/13/violence-against-waqf-act-in-west-bengal-3-people-killed/ Sun, 13 Apr 2025 04:35:08 +0000 https://koodal.com/?p=82923 வக்பு சட்​டத்தை எதிர்த்து நடை​பெற்ற வன்​முறை, போராட்ட சம்​பவங்​களில் மேற்கு வங்க மாநிலத்​தில் 3 பேர் உயி​ரிழந்​துள்​ளனர். வக்பு சட்​டத்​திருத்த மசோ​தா, நாடாளு​மன்​றத்​தின் 2 அவை​களி​லும் நிறைவேற்​றப்​பட்டு குடியரசுத் தலை​வர் ஒப்​புதலுக்கு அனுப்​பப்​பட்​டது. அதற்கு குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்​மு​வும் ஒப்​புதல்…

The post மேற்கு வங்கத்தில் வக்பு சட்டத்தை எதிர்த்து வன்முறை: 3 பேர் உயிரிழப்பு! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
வக்பு சட்​டத்தை எதிர்த்து நடை​பெற்ற வன்​முறை, போராட்ட சம்​பவங்​களில் மேற்கு வங்க மாநிலத்​தில் 3 பேர் உயி​ரிழந்​துள்​ளனர்.

வக்பு சட்​டத்​திருத்த மசோ​தா, நாடாளு​மன்​றத்​தின் 2 அவை​களி​லும் நிறைவேற்​றப்​பட்டு குடியரசுத் தலை​வர் ஒப்​புதலுக்கு அனுப்​பப்​பட்​டது. அதற்கு குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்​மு​வும் ஒப்​புதல் அளித்​து​விட்​டார். இதைத் தொடர்ந்து வக்பு சட்​டம் நாடு முழு​வதும் அமலுக்கு வந்​துள்​ளது. இந்​நிலை​யில், இந்த சட்​டத்தைஏற்க மறுத்து பல்​வேறு முஸ்​லிம் அமைப்​பு​கள் நாடு முழு​வதும் தொடர்ந்து போராட்​டங்​களை நடத்தி வரு​கின்​றன. குறிப்​பாக மேற்கு வங்​கத்​தில் இந்​தச் சட்​டத்தை எதிர்த்து போராட்​டங்​கள் நடை​பெற்று வரு​கின்​றன.

இந்​நிலை​யில் மேற்கு வங்​கத்​தில் நடை​பெற்ற போராட்​டத்​தின்​போது வன்​முறை வெடித்​துள்​ளது. குறிப்​பாக முர்​ஷி​தா​பாத்மாவட்​டத்​தில் நடை​பெற்ற போராட்​டம் வன்​முறை​யாக மாறியது. இங்கு போராட்​டத்​தில் ஈடு​பட்ட ஒரு கும்​பல், அங்​குள்ள வாக​னங்​களை தீயிட்டு கொளுத்​தி​யது. மேலும் போலீ​ஸார் மீதும் கல்​வீசி தாக்​குதல் நடத்​தி​யுள்​ளது. இதைத் தொடர்ந்து அந்த கும்​பல் முர்​ஷி​தா​பாத்​தின் நிம்​ரிட்டா ரயில் நிலை​யத்​தை சூறை​யாடி விட்டு தப்​பியது.

இதனிடையே ஜாங்​கிபூர் பகு​தி​யில் நடை​பெற்ற போராட்​டத்​தில் குதித்த ஒரு கும்​பல் திரிண​மூல் காங்​கிரஸ் கட்சி எம்​பி​யான காலிலுர் ரஹ்​மான் அலு​வல​கத்தை சூறை​யாடி​யுள்​ளது.முர்​ஷி​தா​பாத்​தில் நடந்த வன்​முறைச் சம்​பவங்​களின்​போது தந்​தை, மகன் ஆகிய 2 பேர் உயி​ரிழந்​துள்​ளனர். ஜாப்​ரா​பாத்​தைச் சேர்ந்த அவர்​களது உடல்​கள் கத்​திக்​குத்து காயங்​களு​டன் காணப்​பட்​டன. வன்​முறைச் சம்​பவங்​களின்​போது அவர்​களது வீட்​டுக்​குள் புகுந்த வன்​முறை கும்​பல் வீட்டை கொள்​ளை​யடித்த பின்​னர் இரு​வரை​யும் கத்​தி​யால் குத்​தி​விட்டு தப்​பியோடி​யுள்​ளது.

இதனிடையே வன்​முறைச் சம்​பவங்​களில் ஈடு​பட்​ட​தாக 118 பேரை போலீ​ஸார் இது​வரை கைது செய்​துள்​ளனர். வன்​முறைச் சம்​பவத்​தைத் தொடர்ந்து முர்​ஷி​தா​பாத், ஜாங்​கிபூர் பகு​தி​களில் போலீ​ஸார் குவிக்​கப்​பட்​டுள்​ளனர். அங்​குள்ள முக்​கிய பகு​தி​களில்​ போலீ​ஸார்​ ரோந்​து சுற்​றி வருகின்​றனர்​

வன்முறையில் 3 பேர் உயி​ரிழந்​த​தாக​வும், போலீஸ் துப்​பாக்​கிச்​சூட்​டில் ஒரு​வர் உயி​ரிழந்​த​தாக​வும் மாநில கூடு​தல் போலீஸ் டிஜிபி (சட்​டம் ஒழுங்​கு) ஜாவேத் ஷமிம் தெரி​வித்​தார். இந்​நிலை​யில் வன்​முறை நடந்த முர்​ஷி​தா​பாத், ஜாங்​கிபூர் பகு​தி​களில் மத்​திய படைகளை அனுப்​பு​மாறு கொல்​கத்தா உயர் நீதி​மன்​றத்​தி​லுள்ள சிறப்பு அமர்வு உத்​தர​விட்​டுள்​ளது.

The post மேற்கு வங்கத்தில் வக்பு சட்டத்தை எதிர்த்து வன்முறை: 3 பேர் உயிரிழப்பு! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
82923
சரத்குமாருக்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் பொறுப்பு! https://koodal.com/news/2025/04/13/sarathkumar-has-been-appointed-as-a-member-of-the-bjp-national-general-committee/ Sun, 13 Apr 2025 04:33:32 +0000 https://koodal.com/?p=82920 அண்ணாமலை, வானதி சீனிவாசன், தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோரை தொடர்ந்து தற்போது சரத்குமாருக்கும் பாஜகவில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த 17 ஆண்டுகளாக தான் நடத்தி வந்த சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் கடந்த ஆண்டு சரத்குமார் இணைத்திருந்தார். இதற்கு…

The post சரத்குமாருக்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் பொறுப்பு! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
அண்ணாமலை, வானதி சீனிவாசன், தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோரை தொடர்ந்து தற்போது சரத்குமாருக்கும் பாஜகவில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

கடந்த 17 ஆண்டுகளாக தான் நடத்தி வந்த சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் கடந்த ஆண்டு சரத்குமார் இணைத்திருந்தார். இதற்கு பலனாக தேசிய ஜனநாயக கூட்டணியில் ராதிகா சரத்குமாருக்கு எம்பி சீட் வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் 12ம் தேதி யாரும் எதிர்பார்க்காத அந்த அறிவிப்பு வந்தது. அதாவது 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி இடம் பெறும் என்று ஏற்கெனவே சரத்குமார் அறிவித்திருந்தார். ஆனால் 12ம் தேதி திடீரென கட்சியை பாஜகவுடன் இணைத்துக்கொள்வதாக கூறி தொண்டர்களுக்கு ஷாக் கொடுத்தார். சரத்குமாரின் அரசியல் வாழ்க்கையில் இது முக்கிய திருப்பமாக பார்க்கப்பட்டது. இந்த செய்தி வெளியான அடுத்த 10 நாட்களில், அதாவது மார்ச் 22ம் தேதி, விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் என்டிஏ கூட்டணி சார்பில் ராதிகா சரத்குமார் போட்டியிடுவார் என்று அறிவிப்பு வெளியானது. தேர்தலும் நடந்தது. ஆனால் ராதிகா தோல்வியுற்றார். எதிர்பார்த்த அளவுக்கு கூட வாக்குகள் கிடைக்கவில்லை. எனவே பாஜகவில் முக்கிய பொறுப்பு வேண்டும் என்று சரத்குமார் தரப்பிலிருந்து கோரிக்கை வைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இக்கோரிக்கை மீது தலைமை செவி சாய்க்காமல் இருந்து வந்த நிலையில், சட்டப்பேரவை தேர்தல் நேரத்தில் சரத்குமார் தரப்பிலிருந்து அழுத்தம் கொடுத்ததாகவும், இதனையடுத்து தற்போது சரத்குமாருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும் விவரமறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

The post சரத்குமாருக்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் பொறுப்பு! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
82920
நயி​னார் நாகேந்​திரன் வேண்டுகோளை ஏற்று ​மீண்டும் காலணி அணிந்த அண்ணாமலை! https://koodal.com/news/2025/04/13/annamalai-accepts-nainar-nagendhirans-request-and-wears-shoes-again/ Sun, 13 Apr 2025 04:32:01 +0000 https://koodal.com/?p=82917 மாநிலத் தலைவரின் கட்டளையை ஏற்று, அவர் வாங்கிக் கொடுத்த காலணியை மேடையில் அணிந்துகொண்டேன் என்று அண்ணாமலை கூறினார். கடந்த 2024 டிசம்​பரில், அண்ணா பல்​கலைக்​கழக மாணவி பாலியல் வன்​கொடுமை தொடர்​பான முதல் தகவல் அறிக்கை (எஃப்​ஐஆர்), பொது வெளி​யில் வெளி​யானது. அப்​போது,…

The post நயி​னார் நாகேந்​திரன் வேண்டுகோளை ஏற்று ​மீண்டும் காலணி அணிந்த அண்ணாமலை! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
மாநிலத் தலைவரின் கட்டளையை ஏற்று, அவர் வாங்கிக் கொடுத்த காலணியை மேடையில் அணிந்துகொண்டேன் என்று அண்ணாமலை கூறினார்.

கடந்த 2024 டிசம்​பரில், அண்ணா பல்​கலைக்​கழக மாணவி பாலியல் வன்​கொடுமை தொடர்​பான முதல் தகவல் அறிக்கை (எஃப்​ஐஆர்), பொது வெளி​யில் வெளி​யானது. அப்​போது, கோவை​யில் டிசம்​பர் 26-ம் தேதி செய்​தி​யாளர்​களை சந்​தித்​த​ அண்​ணா​மலை ‘‘தி​முக ஆட்​சியை அகற்​றும் வரை காலணி அணிய மாட்​டேன்’’ என்று சபதம் எடுத்​துக்​கொண்​டார்.

இந்​நிலை​யில், தமிழக பாஜக தலை​வ​ராக நேற்று பொறுப்​பேற்ற நயி​னார் நாகேந்​திரன் விழாமேடை​யில், ‘‘திமுக ஆட்​சியை அகற்​றும் வரை காலணி அணிய மாட்​டேன் என்று அண்​ணா​மலை சபதம் ஏற்​றார். ஆட்சி மாற்றத்​துக்​காக அமித் ஷா நேற்றே அடிக்​கல் நாட்​டி​விட்​டார். அதனால், அண்ணா​மலை மீண்​டும் காலணி அணிந்​து​கொள்ள வேண்​டும்’’ என்று வேண்​டு​கோள் விடுத்​து, புதி​தாக வாங்கி வந்த காலணியை அண்​ணா​மலை​யிடம் கொடுத்​தார்.

இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அண்ணாமலை, “2026-ம் ஆண்டு தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. இன்று முதல் நான் பா.ஜ.க.வின் சாதாரண தொண்டன். மாநிலத் தலைவர் சொல்வதை கேட்பது எங்கள் கடமை. மாநிலத் தலைவரின் கட்டளையை ஏற்று, அவர் வாங்கிக் கொடுத்த காலணியை மேடையில் அணிந்துகொண்டேன். நிச்சயமாக தமிழகத்தில் 2026ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சி அகற்றப்படும் என்ற நம்பிக்கை உள்ளது” என்று தெரிவித்தார்.

The post நயி​னார் நாகேந்​திரன் வேண்டுகோளை ஏற்று ​மீண்டும் காலணி அணிந்த அண்ணாமலை! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
82917
வக்பு மசோதா குறித்து ராகுல் பேசாதது ஏன்?: மாயாவதி கேள்வி! https://koodal.com/news/2025/04/13/why-didnt-rahul-speak-about-the-waqf-bill-mayawati-questions/ Sun, 13 Apr 2025 04:30:00 +0000 https://koodal.com/?p=82915 மக்களவையில் நடைபெற்ற வக்பு சட்டதிருத்த மசோதா மீதான நீண்ட விவாதத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பங்கேற்று பேசாதது ஏன்? என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கேள்வி எழுப்பியுள்ளார். வக்பு சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு…

The post வக்பு மசோதா குறித்து ராகுல் பேசாதது ஏன்?: மாயாவதி கேள்வி! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
மக்களவையில் நடைபெற்ற வக்பு சட்டதிருத்த மசோதா மீதான நீண்ட விவாதத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பங்கேற்று பேசாதது ஏன்? என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கேள்வி எழுப்பியுள்ளார்.

வக்பு சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கடந்த 5-ம் தேதி ஒப்புதல் அளித்தார். வக்பு சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மாயாவதி கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் எக்ஸ் தளத்தில் மாயாவதி கூறியிருப்பதாவது:-

வக்பு சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்க்கட்சி கண்டனம் தெரிவித்தாலும், அவையில் இந்த மசோதா குறித்து நீண்ட விவாதம் நடைபெற்றபோது, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் இது குறித்து பேச வேண்டாம் என முடிவு எடுத்தது நியாயமா?

எது எப்படியோ, இட ஒதுக்கீடு உரிமையை பயனற்றதாக்கி, பட்டியலின மக்களின் நலன், அரசு வேலைகள், கல்வி ஆகியவற்றை பறித்த குற்றம் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் உள்ளது. இந்த இரு கட்சிகளின் வஞ்சனையிலிருந்து தப்பிக்க வேண்டிய தேவையை சிறுபான்மையினர் உணர்வது முக்கியம். இந்த கட்சிகளின் உத்திகளால், பட்டியலின மக்கள், சிறுபான்மையினர், அனைத்து வகையிலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு மாயாவதி கூறியுள்ளார்.

The post வக்பு மசோதா குறித்து ராகுல் பேசாதது ஏன்?: மாயாவதி கேள்வி! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
82915
மசோதாக்கள் தொடர்பாக குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் கெடு! https://koodal.com/news/2025/04/13/supreme-court-slams-delay-in-presidential-assent-to-bills/ Sun, 13 Apr 2025 04:28:56 +0000 https://koodal.com/?p=82913 மாநில ஆளுநர்​கள் அனுப்பி வைக்​கும் மசோ​தாக்​கள் மீது குடியரசுத் தலை​வர் 3 மாதங்​களுக்​குள் முடிவு எடுக்க வேண்​டும் என்று உச்ச நீதி​மன்​றம் கடந்த 8-ம் தேதி பிறப்பித்த தீர்ப்பில் காலக்​கெடு விதித்து உத்​தர​விட்​டுள்​ளது. தமிழக அரசின் மசோ​தாக்​களுக்கு ஆளுநர் ஒப்​புதல் அளிக்​காமல்…

The post மசோதாக்கள் தொடர்பாக குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் கெடு! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
மாநில ஆளுநர்​கள் அனுப்பி வைக்​கும் மசோ​தாக்​கள் மீது குடியரசுத் தலை​வர் 3 மாதங்​களுக்​குள் முடிவு எடுக்க வேண்​டும் என்று உச்ச நீதி​மன்​றம் கடந்த 8-ம் தேதி பிறப்பித்த தீர்ப்பில் காலக்​கெடு விதித்து உத்​தர​விட்​டுள்​ளது.

தமிழக அரசின் மசோ​தாக்​களுக்கு ஆளுநர் ஒப்​புதல் அளிக்​காமல் கிடப்​பில் போட்​டதை எதிர்த்​தும், மசோ​தாக்​களுக்கு ஒப்​புதல் அளிக்க கால​வரம்பு நிர்​ணயம் செய்ய கோரி​யும் உச்ச நீதி​மன்​றத்​தில் தமிழக அரசு சார்​பில் கடந்த 2023-ம் ஆண்​டில் வழக்கு தொடரப்​பட்​டது. இந்த வழக்கை விசா​ரித்த நீதிப​தி​கள் ஜே.பி.பர்​தி​வாலா, ஆர்​.ம​காதேவன் அமர்வு கடந்த 8-ம் தேதி தீர்ப்பு வழங்​கியது.

‘‘தமிழக அரசின் 10 மசோ​தாக்​களுக்கு ஒப்​புதல் அளிக்​காமல் அவற்றை குடியரசுத் தலை​வருக்கு ஆளுநர் பரிந்​துரை செய்​தது சட்ட​ விரோதம். அந்த 10 மசோ​தாக்​களும் ஆளுநருக்கு அனுப்​பப்​பட்​ட​போதே சட்​ட​மாகி அமலுக்கு வந்​து​விட்டன என்று உச்ச நீதி​மன்​றத்​தின் தனிப்​பட்ட அதி​காரத்தை பயன்​படுத்தி அறிவிக்​கிறோம். தன்​னிச்​சை​யாக செயல்​பட்டு அவற்றை தடை செய்​வதற்​கான ‘வீட்​டோ’ அதி​காரமோ, நிறைவேற்ற விடா​மல் தடுப்​ப​தற்​கான ‘பாக்​கெட் வீட்டோ’ அதி​காரமோ ஆளுருக்கு கிடை​யாது. மாநில அமைச்​சர​வை​யின் ஆலோ​சனை​ப்​படி நடக்க அவர் கடமைப்​பட்​ட​வர். மாநில அரசின் மசோதா குறித்து ஒரு மாதத்​துக்​குள் ஆளுநர் முடிவு எடுக்க வேண்​டும்” என்று தீர்ப்​பில் தெரிவிக்​கப்​பட்​டது.

இதைத் தொடர்ந்​து, அனைத்து உயர் நீதி​மன்​றங்​கள், அனைத்து மாநில ஆளுநர் அலு​வல​கங்​களுக்​கும் உச்ச நீதி​மன்​றத்​தின் இந்த 415 பக்க தீர்ப்பு நகல் அனுப்பி வைக்​கப்​பட்​டது. உச்ச நீதி​மன்​றத்​தின் இணை​யதளத்​தில் நேற்று முன்​தினம் நள்​ளிர​வில் முழு​மை​யான தீர்ப்பு விவரம் பதிவேற்​றம் செய்​யப்​பட்​டது. இதன்​மூலம் தீர்ப்​பில் இடம்​பெற்​றுள்ள மேலும் சில முக்​கிய அம்​சங்​கள் தெரிய​வந்​துள்​ளன. அதன் விவரம்:

மாநில ஆளுநர்​கள் அனுப்பி வைக்​கும் மசோ​தாக்​கள் விவ​காரத்​தில் குடியரசுத் தலை​வருக்கு ‘வீட்​டோ’ அதி​காரமோ, ‘பாக்​கெட் வீட்​டோ’ அதி​காரமோ கிடை​யாது. மசோதா தொடர்பான குடியரசுத் தலை​வரின் முடிவு நீதி​மன்ற ஆய்​வுக்கு உட்​பட்​டது. அரசி​யல் சாசன பிரிவு 201-ன்​படி, ஒரு மாநில சட்​டப்​பேர​வை​யில் மசோதா நிறைவேற்​றப்​பட்​டால், அந்த மசோதா ஆளுநருக்கு அனுப்​பப்பட வேண்​டும். அதை குடியரசுத் தலை​வருக்கு ஆளுநர் அனுப்பி வைக்​கலாம். மாநில ஆளுநர்​கள் அனுப்​பும் மசோ​தாக்​கள் குறித்து 3 மாதங்​களுக்​குள் குடியரசுத் தலை​வர் முடிவு எடுக்க வேண்​டும். ஒரு​வேளை தாமதம் ஏற்​பட்​டால், அதற்​கான காரணத்தை தெளிவுபடுத்த வேண்​டும்.

ஒரு மசோ​தாவை மறுஆய்வு செய்ய அல்​லது திருத்​தம் செய்ய கோரி சட்​டப்​பேர​வைக்கு குடியரசுத் தலை​வர் திருப்பி அனுப்​பலாம். சட்​டப்​பேர​வை​யில் அந்த மசோ​தா மீண்​டும் நிறைவேற்​றப்​பட்டு குடியரசுத் தலை​வருக்கு அனுப்பி வைக்​கப்​படும்​போது, மசோதா குறித்து இறுதி முடிவு எடுக்​கப்பட வேண்​டும். மாநில அரசுகளின் மசோ​தாக்​களை தொடர்ச்​சி​யாக திருப்பி அனுப்ப கூடாது. மாநில அரசின் மசோ​தா, அரசி​யல் சாசனத்​துக்கு எதி​ராக இருக்​கும் பட்​சத்​தில், குடியரசுத் தலை​வர் சட்ட ஆலோ​சனை​களை கேட்​கலாம்.

அதே​போல, மசோ​தாக்​கள் விவ​காரத்​தில் மாநில அரசுகள் முழு ஒத்​துழைப்பு வழங்க வேண்​டும். குடியரசுத் தலை​வரின் கேள்வி​களுக்கு மாநில அரசுகள் உரிய பதில்​கள், விளக்​கங்​களை அளிக்க வேண்​டும். நாட்​டின் முதல் குடியரசுத் தலை​வர் ராஜேந்​திர பிர​சாத் காலத்​தில் நிகழ்ந்த சம்​பவத்தை சுட்​டிக் காட்ட விரும்​பு​கிறோம். இந்து சட்ட மசோதா விவ​காரத்​தில் அப்​போதைய குடியரசுத் தலை​வர் ராஜேந்​திர பிர​சாத் பல்​வேறு ஆட்​சேபங்​களை எழுப்​பி​னார். இதுதொடர்​பாக அன்​றைய அட்​டர்னி ஜெனரல் எம்​.சி.சீதல்​வாட்​டின் ஆலோ​சனையை அவர் கோரி​னார். அப்​போது தெளி​வாக விளக்​கம் அளித்த சீதல்​வாட், ‘‘மத்​திய அமைச்​சர​வை​யின் ஆலோ​சனைப்​படியே குடியரசுத் தலை​வர் செயல்பட வேண்​டும். இது​தான் அரசி​யலமைப்பு சட்​டத்​தின் விதி’’ என்று உறு​திபட தெரி​வித்​தார். இதை குடியரசுத் தலை​வர் ராஜேந்​திர பிர​சாத்​தும் ஏற்​றுக் கொண்​டார். இதன்​மூலம் பிரதமர் – குடியரசுத் தலை​வர் இடையே ஏற்​பட்ட பிரச்​சினைக்கு சுமுக தீர்வு காணப்​பட்​டது.

அரசி​யலமைப்பு சட்​டத்தை காப்​பாற்ற அனை​வரும் உறு​தி​யேற்று செயல்பட வேண்​டும். குறிப்​பாக, அரசின் உயர் பதவி​களை வகிப்​பவர்​கள் அரசி​யலமைப்பு சட்​டத்​தின்​படிமட்​டுமே நடக்க வேண்​டும். மாநில அரசின் நல்ல நண்​ப​ராக, ஆலோ​சக​ராக, வழி​காட்​டி​யாக ஆளுநர் செயல்பட வேண்​டும். மக்​களின் நலனை மட்​டுமே முன்​னிறுத்த வேண்​டும். பதவி​யேற்​கும்​போது எடுத்த உறு​தி​மொழிகளை கண்​டிப்​புடன் பின்​பற்ற வேண்​டும். மாநில மக்​களின் நலனுக்​காக ஆளுநரும், மாநில அரசும் இணக்​க​மாக செயல்பட வேண்​டும். இவ்​வாறு தீர்ப்​பில் கூறப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்து சட்ட நிபுணர்​கள் கூறும்​போது, ‘‘வழக்கு விசா​ரணை​யின்​போது, மசோதா குறித்து முடி​வெடுக்க ஆளுநர், குடியரசுத் தலை​வருக்கு காலக்​கெடு நிர்​ண​யம் செய்ய கூடாது என்று மத்​திய அரசின் அட்​டர்னி ஜெனரல் வா​திட்​டார். ஆனால், அவரது கருத்தை உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் நிராகரித்​துள்​ளனர். நாட்​டின் வரலாற்​றில் முதல்​முறை​யாக, மசோ​தா குறித்​து முடிவு எடுக்​க கால நிர்​ண​யம்​ செய்​யப்​பட்​டுள்​ளது’’என்​று தெரிவித்​தனர்​.

The post மசோதாக்கள் தொடர்பாக குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் கெடு! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
82913
வலி தான் வெற்றியின் ரகசியம்: ரஜிஷா விஜயன்! https://koodal.com/movies/2025/04/13/pain-is-the-secret-to-success-rajisha-vijayan/ Sun, 13 Apr 2025 04:27:51 +0000 https://koodal.com/?p=82910 2021ம் ஆண்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த கர்ணன் திரைப்படத்தின் மூலம் ரஜிஷா விஜயன் தமிழ் சினிமாவிலும் காலடி எடுத்து வைத்தார். ஜெய்பீம் மற்றும் சர்தார் உள்ளிட்ட படங்களில் நடித்த ரஜிஷா விஜயன் தெலுங்கில் ராமராவ் ஆன் ட்யூட்டி படத்தில்…

The post வலி தான் வெற்றியின் ரகசியம்: ரஜிஷா விஜயன்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
2021ம் ஆண்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த கர்ணன் திரைப்படத்தின் மூலம் ரஜிஷா விஜயன் தமிழ் சினிமாவிலும் காலடி எடுத்து வைத்தார். ஜெய்பீம் மற்றும் சர்தார் உள்ளிட்ட படங்களில் நடித்த ரஜிஷா விஜயன் தெலுங்கில் ராமராவ் ஆன் ட்யூட்டி படத்தில் நடித்து டோலிவுட்டிலும் அறிமுகமானார். தான் சற்று பருமனாக இருப்பதாக நினைத்து ஃபீல் பண்ணி வந்த ரஜிஷா விஜயன் கடந்த ஆண்டு உடற்பயிற்சியின் மூலம் உடல் எடையை குறைக்க முடிவெடுத்து ஒரு வருடத்தில் நல்ல ரிசல்ட் கிடைத்திருப்பதாக தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மலையாள திரையுலகில் இருந்து தமிழ் சினிமாவுக்கு பல நல்ல திறமையான நடிகைகள் வந்து கொண்டிருக்கின்றனர். அதில், ரஜிஷா விஜயனும் தனது நடிப்புத் திறமையால் ஏகப்பட்ட ர்சிகர்களின் மனங்களை கவர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் உடன் இணைந்து கர்ணன் படத்தில் அறிமுகமான ரஜிஷா விஜயன் துருவ் விக்ரமை வைத்து மாரி செல்வராஜ் இயக்கி வரும் பைசன் படத்திலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும், சர்தார் படத்தைத் தொடர்ந்து சர்தார் 2 படத்திலும் அப்பா கார்த்திக்கு இவர் தான் ஜோடி. ராஷி கன்னா, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் சர்தார் 2 படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு அடுத்தடுத்து தமிழில் 2 பெரிய படங்கள் ரஜிஷா விஜயன் ரசிகர்களுக்காக வரப்போகின்றன. சர்

திடீரென தனது உடல் எடையை கட்டுக்கோப்பாக வைக்க இப்படியொரு டிரான்ஸ்பர்மேஷனை ரஜிஷா விஜயன் செய்ய முக்கிய காரணமே சர்தார் 2 படத்தில் நடிக்கத்தானா என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். பைசன் படத்திலும் இவருக்கு என்ன மாதிரியான கதாபாத்திரத்தை மாரி செல்வராஜ் கொடுத்துள்ளார் என்பதை அறிந்து கொள்ளவும் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

வெயிட் லிப்டிங்கை தூக்கிக் கொண்டு கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபட்ட வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் போஸ்ட்டில் ஷேர் செய்துள்ளார் ரஜிஷா விஜயன். மேலும், ஒரு வருடத்தில் சுமார் 15 கிலோ வரை எடையை தான் குறைத்ததாகவும் அவர் கூறியிருப்பது ஃபிட்னஸ் பிரியர்களுக்கும் இளைஞர்களுக்கும் நல்ல மோடிவேட் செய்யும் பதிவாக மாறியிருக்கிறது. ரஜிஷா விஜயன் காலில் ஏற்பட்டுள்ள காயங்களையும் புகைப்படத் தொகுப்பாக எடுத்து பதிவிட்டுள்ள நிலையில், வலி தான் வெற்றியின் ரகசியம் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

வரும் மே 16ம் தேதி துருவ் விக்ரம், ரஜிஷா சஜயன் நடிப்பில் உருவாகியுள்ள பைசன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றன. அதனை தொடர்ந்து இந்த ஆண்டு தீபாவளிக்கு கார்த்தியின் சர்தார் 2 வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு படங்களுமே மிகப்பெரிய வெற்றியை பெறும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

The post வலி தான் வெற்றியின் ரகசியம்: ரஜிஷா விஜயன்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
82910
நடிகர் ஸ்ரீயின் பரிதாப நிலைக்கு காரணம் இதுதானா? https://koodal.com/movies/2025/04/13/is-this-the-reason-for-actor-sris-miserable-condition/ Sun, 13 Apr 2025 04:25:46 +0000 https://koodal.com/?p=82907 விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியலின் மூலம் பிரபலமடைந்த நடிகர் ஸ்ரீ, வில்லம்பு, மாநகரம், ஓநாயும் ஆட்டுக்குட்டியும் போன்ற பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். ஆனால் அவருடைய தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.…

The post நடிகர் ஸ்ரீயின் பரிதாப நிலைக்கு காரணம் இதுதானா? appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியலின் மூலம் பிரபலமடைந்த நடிகர் ஸ்ரீ, வில்லம்பு, மாநகரம், ஓநாயும் ஆட்டுக்குட்டியும் போன்ற பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். ஆனால் அவருடைய தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. இந்த நிலையில் அவருடைய பரிதாப நிலைக்கு காரணம் என்ன என்பது குறித்து தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

ஸ்ரீராம் நடராஜன் என்ற தன்னுடைய பெயரை சினிமாவிற்காக தான் ஸ்ரீ என்று மாற்றி இருக்கிறார். இவர் கனா காணும் காலங்கள் சீரியல் மூலம் 90ஸ் ஹிட்ஸ்களில் ஃபேவரிட் நடிகராக வலம் வந்தார். அந்த சீரியல் மூலமாக ஒரு சிலருக்கு தான் சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது. அதில் ஸ்ரீயும் ஒருவர் கனா காணும் காலங்கள் சீரியலைத் தொடர்ந்து அவருக்கு வழக்கு எண் 18 என்ற திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த திரைப்படத்தில் அவருடைய வித்தியாசமான நடிப்பு மற்றும் பாவமான முகம் பலரையும் கவர்ந்து விட்டது. ஸ்ரீ நடித்த திரைப்படங்கள் முதல் படத்தில் ஐயோ பாவம் என்று சொல்ல வைத்த ஸ்ரீ அடுத்த திரைப்படத்தில் மிரட்டலாக நடித்திருந்தார். ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம், இறுகப்பற்று போற்ற பல திரைப்படத்தை நடித்திருந்தார்.

அதுபோல பிக் பாஸ் தமிழ் சீசன் 1 நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டார். ஆனால் நான்காவது நாளிலேயே நிகழ்ச்சியில் இருந்து விலகி விட்டார். ஆனால் சில வருடங்களாக எந்த திரைப்படங்களிலும் காணவில்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஸ்ரீயின் சோசியல் மீடியா அக்கவுண்டில் அவருடைய புகைப்படம் மற்றும் ரிங்ஸ் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதற்கு பிறகு சோசியல் மீடியாவில் இந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவருக்கா இந்த நிலைமை? இவருக்கு என்ன ஆச்சு என்று பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில் ஸ்ரீ யின் இந்த பரிதாப நிலை குறித்து அவருடைய உறவினர் ஒருவர் இன்ஸ்டாகிராமில் இருந்து விளக்கம் கொடுத்து இருக்கிறார்.

ஸ்ரீயின் நிலைமைக்கு காரணம் என்று அதில் அவர் கூறும்போது, “ஸ்ரீ என்னுடைய ரிலேட்டிவ் அண்ணா தான். அவர் நடிச்ச படத்திற்கு அவருக்கு பணத்தை கொடுக்கவில்லை. இதனால் அவர் ரொம்ப டிப்ரசனில் இருந்தார். அப்போது குடும்பத்திலும் பிரச்சினை ஏற்பட்டது. அதனால் அவர் தனியாக போய்விட்டார். இப்போ எங்கேயோ இருக்காரு. ஆனா குடும்பத்தினர் எல்லோரும் கூப்பிட்டும் வரமாட்டேங்கிறாரு. புகைப்படங்கள் வெளியாகும் ஐடி அவருடைய ரியல் ஐடி தானா என்பது பலருக்கு சந்தேகம் இருக்கும் நிலையில் அது அவருடைய ரியல் ஐடி தான் லைஃப்ல நிறைய நடிச்சும் அவருக்கு பணம் கிடைக்கவில்லை, நிறைய பேரு அவரை ஏமாத்திட்டாங்க. அதனால இப்போ எல்லாரையும் விட்டுட்டு சிங்கிளா இருக்கிறார்” என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்.

கடந்த ஒரு வருடங்களாக ஸ்ரீ ஒரே வீட்டிற்குள் ஒரு அறைக்குள் தானே சமைத்து சாப்பிடுவது போன்று புகைப்படங்கள் மற்றும் ரிலீஸ் வீடியோக்கள் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். ஒரு சில உடைகளை மட்டுமே மீண்டும் மீண்டும் போட்டுக்கொண்டு அவர் ரிலீஸ் எடுத்திருக்கிறார். அதுபோல சில நாட்களாக அவர் போடும் போஸ்ட்டுகள் ஆபாசமாக இருக்கிறது. அந்த போஸ்டர்களுக்கு கீழே லேடி பாய் என்று டேக் செய்திருக்கிறார். இது ரசிகர்களுக்கு மேலும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

இந்நிலையில் ஸ்ரீயின் சோசியல் மீடியா பக்கத்தில் அதிகமான ரசிகர்கள் இயக்குனர் லோகேஷ் இதற்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் வைத்து வருகிறார்கள். இயக்குனர் லோகேஷ் முதல் முறையாக இயக்கிய மாநகரம் திரைப்படத்தில் ஸ்ரீ தான் கதாநாயகனாக நடித்திருந்தார். அந்த நேரத்தில் ப்ரோமோஷனில் கூட ஸ்ரீ லோகேஷ் குறித்து பெருமையாக பேசி இருப்பார். அதனால் ஸ்ரீயின் இந்த நிலைமைக்கு லொகேஷ் ஏதாவது ஆலோசனைகள் மற்றும் உதவிகள் செய்ய வேண்டும், ஸ்ரீயை மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும் என்று ரசிகர்கள் வேண்டுகோள் வைத்து இருக்கிறார்கள். சில வருடங்களாகவே சரியான வாய்ப்புகளும் தான் உழைத்ததற்கு சரியான பணமும் கிடைக்காததால் மன அழுத்தத்தில் போதை பழக்கத்திற்கு அடிமையாகி இவர் இப்படி மாறிவிட்டாரா? என்று ரசிகர்கள் தங்களுடைய வருத்தங்களை தெரிவித்து வருகிறார்கள்.

The post நடிகர் ஸ்ரீயின் பரிதாப நிலைக்கு காரணம் இதுதானா? appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
82907