கூடல் | Tamil Koodal https://koodal.com/ Latest Tamil News and Tamil Movie Reviews Online in Tamil Entertainment Website - Koodal.com Fri, 30 May 2025 16:37:19 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://i0.wp.com/koodal.com/wp-content/uploads/2021/12/cropped-koodal-logo.jpg?fit=32%2C32&ssl=1 கூடல் | Tamil Koodal https://koodal.com/ 32 32 201197430 நகைக் கடன் விதிகளை தளர்த்தும் அரசின் பரிந்துரைகள் போதாது: அன்புமணி! https://koodal.com/news/2025/05/30/governments-recommendations-to-relax-jewelry-loan-rules-are-not-enough-anbumani/ Fri, 30 May 2025 16:37:19 +0000 https://koodal.com/?p=86629 “ரூ.2 லட்சம் வரையிலான நகைக் கடன்களுக்கு விதிகளில் இருந்து விலக்களிக்கப்பட வேண்டும் என்ற மத்திய அரசின் பரிந்துரைகள் போதுமானவை அல்ல” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-…

The post நகைக் கடன் விதிகளை தளர்த்தும் அரசின் பரிந்துரைகள் போதாது: அன்புமணி! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
“ரூ.2 லட்சம் வரையிலான நகைக் கடன்களுக்கு விதிகளில் இருந்து விலக்களிக்கப்பட வேண்டும் என்ற மத்திய அரசின் பரிந்துரைகள் போதுமானவை அல்ல” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் நகைக் கடன் வழங்குவதற்கான 9 வழிகாட்டுதல்கள் அடங்கிய புதிய வரைவு விதிகளை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டிருந்த நிலையில், அவற்றில் இரு தளர்வுகளை செய்யும்படி மத்திய நிதியமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. புதிய விதிகள் நடைமுறைக்கு 2025-ம் ஆண்டு வரை செயல்படுத்தக் கூடாது. ரூ.2 லட்சம் வரையிலான நகைக் கடன்களுக்கு இந்த விதிகளில் இருந்து விலக்களிக்கப்பட வேண்டும் என்பதுதான் அந்த பரிந்துரைகள். இவை போதுமானவை அல்ல.

இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வரைவு விதிகளுக்கு இன்னும் ஒப்புதல் அளிக்கப்படவில்லை. அவை இன்னும் இறுதி செய்யப்படவில்லை. அவை எப்போது நடைமுறைக்கு வரும் என்பது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இத்தகைய சூழலில் 2026 ஜனவரி ஒன்றாம் தேதி முதல் புதிய விதிகளை செயல்படுத்தலாம் என்பது சலுகை அல்ல. அதேபோல், கிராமப்புறங்களில் கல்வி, குடும்பத் தேவைகள் மற்றும் வங்கிக் கடன் பெற முடியாத பல தேவைகளுக்கு நிதி ஈட்டுவதற்கான ஒரே வாய்ப்பு நகைக்கடன் தான். அவ்வாறு கடன் பெறும் போது ரூ.2 லட்சம் வரையிலான கடன்களுக்கு மட்டும் புதிய விதிகளில் இருந்து விலக்கு என்பது பயனளிக்காது.

இவை அனைத்தையும் விட பாமக எழுப்ப விரும்பும் வினா என்னவென்றால், புதிய விதிகளை நடைமுறைப்படுத்துவதற்கான தேவை எங்கிருந்து வந்தது? ஒவ்வொரு தனிநபரும் எவ்வளவு நகைக்கடன் பெறுகிறாரோ, அதை விட குறைந்தது 40% கூடுதல் மதிப்பு உள்ள நகைகளையே ஈடாக வைக்கிறார். நகைக்கடனை குறித்த காலத்தில் செலுத்தத் தவறினால் அவற்றை ஏலத்தில் விட்டு பணமாக்கவும் விதிகளில் வகை செய்யப்பட்டிருக்கிறது. அவ்வாறு இருக்கும் போது புதிய விதிகள் தேவையற்றவை. அதனால், எந்த பயனும் இல்லை, பாதிப்புகள் தான் அதிகம்.

தங்க நகைக்கடன் என்ற தத்துவமே நடைமுறை சிக்கல்கள் இல்லாமல் எளிதாக கடன் வாங்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டது தான். புதிய விதிகளின் மூலம் அதை சிக்கலாக்கக்கூடாது. எனவே, நகைக்கடன்கள் தொடர்பாக இப்போதுள்ள நடைமுறைகளே தொடர வேண்டும். அது சாத்தியமில்லை என்றால், வரைவு விதிகளின் பிரிவுகள் 2, 4, 6 ஆகியவற்றை ரிசர்வ் வங்கி திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post நகைக் கடன் விதிகளை தளர்த்தும் அரசின் பரிந்துரைகள் போதாது: அன்புமணி! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
86629
ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாமல் உயர் கல்வியை திமுக சீரழிக்கிறது: ஓ.பன்னீர்செல்வம்! https://koodal.com/news/2025/05/30/dmk-is-ruining-higher-education-by-not-filling-teaching-posts-o-panneerselvam/ Fri, 30 May 2025 16:35:41 +0000 https://koodal.com/?p=86627 பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாமல் உயர் கல்வியை திமுக சீரழித்துக் கொண்டிருப்பதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியுள்ளதாவது:- உயர் கல்வியால்தான் நாட்டின் வளர்ச்சியை உருவாக்க முடியும். அனைத்துத் துறைகளின் வளர்ச்சிக்கு ஆதாரமாக அமைவது…

The post ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாமல் உயர் கல்வியை திமுக சீரழிக்கிறது: ஓ.பன்னீர்செல்வம்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாமல் உயர் கல்வியை திமுக சீரழித்துக் கொண்டிருப்பதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

உயர் கல்வியால்தான் நாட்டின் வளர்ச்சியை உருவாக்க முடியும். அனைத்துத் துறைகளின் வளர்ச்சிக்கு ஆதாரமாக அமைவது உயர் கல்வியே இப்படிப்பட்ட உயர் கல்வி உன்னத நிலையை அடைய வேண்டுமென்றால் பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசுக் கல்லூரிகளில் ஆசிரியர் பணியிடங்கள் உடனுக்குடன் நிரப்பப்பட வேண்டும், கட்டமைப்பு வசதிகள் அவ்வப்போது மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால், கடந்த நான்கு ஆண்டு கால திமுக ஆட்சியில், பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசுக் கல்லூரிகளில் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாத அவல நிலை நிலவுகிறது.

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் மட்டும் 50 விழுக்காடு ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், இந்தப் பணியிடங்களில் முப்பது விழுக்காடு பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்குமாறு பல்கலைக்கழக பதிவாளர்களை அரசு உயர் கல்வித் துறை கேட்டுக் கொண்டுள்ளதாகவும் செய்தி வந்துள்ளது. இந்த முப்பது விழுக்காடு பணியிடங்களை நிரப்பும்போது, பத்து விழுக்காடு பணியிடங்கள் ஒய்வு பெற்ற பேராசிரியர்களைக் கொண்டும், பத்து விழுக்காடு பணியிடங்கள் தொழில் வல்லுநர்களைக் கொண்டும், பத்து விழுக்காடு பணியிடங்கள் வெளிநாட்டு பேராசிரியர்களைக் கொண்டும் நிரப்ப வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதிலிருந்து, பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள உதவி பேராசிரியர். இணை பேராசிரியர் மற்றும் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப கடந்த நான்கு ஆண்டு காலமாக திமுக அரசு அக்கறை செலுத்தவில்லை என்பது தெள்ளத் தெளிவாகிறது. ஐம்பது விழுக்காட்டிற்கு மேல் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கிறது என்றால். அங்கு தரமான கல்வியை எப்படி அளிக்க முடியும் என்ற கேள்வி இயற்கையாக எழுகிறது.

இது ஒருபுறம் என்றால், மறுபுறம் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. முதுநிலைப் பட்டம், முனைவர் பட்டம் ஆகியவற்றைப் பெற்று அரசு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர்களாக வேண்டும் என்ற கனவில் உள்ள இளைஞர்களின் எதிர்காலம் திமுக அரசின் இந்த முடிவினால் சிதைந்து போயிருக்கிறது. மொத்தத்தில், உயர் கல்வியிலும் அக்கறை இல்லாத, இளைஞர்களின் எதிர்காலத்திலும் அக்கறை இல்லாத அரசாக கொண்டிருக்கிறது. திமுக அரசின் மக்கள் கண்டனத்திற்குரியது.

முதல்வர் ஸ்டாலின் இதில் தனிக் கவனம் செலுத்தி, பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை முறையாக உடனுக்குடன் நிரப்பி, அதன் மூலம் இளைஞர்களுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாமல் உயர் கல்வியை திமுக சீரழிக்கிறது: ஓ.பன்னீர்செல்வம்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
86627
தமிழகத்துக்கான என் குரல் மாநிலங்களவையில் முதல்முறையாக ஒலிக்கப்போகிறது: கமல்ஹாசன்! https://koodal.com/news/2025/05/30/my-voice-for-tamil-nadu-is-going-to-be-heard-in-the-rajya-sabha-for-the-first-time-kamal-haasan/ Fri, 30 May 2025 16:34:27 +0000 https://koodal.com/?p=86624 முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், “தற்போது தமிழகத்துக்கான என் குரல் மாநிலங்களவையில் முதல்முறையாக ஒலிக்கப்போகிறது அவ்வளவுதான்” என்றார். மநீம தலைவர் கமல்ஹாசன் இன்று (மே 30) அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினை சந்தித்தார்.…

The post தமிழகத்துக்கான என் குரல் மாநிலங்களவையில் முதல்முறையாக ஒலிக்கப்போகிறது: கமல்ஹாசன்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், “தற்போது தமிழகத்துக்கான என் குரல் மாநிலங்களவையில் முதல்முறையாக ஒலிக்கப்போகிறது அவ்வளவுதான்” என்றார்.

மநீம தலைவர் கமல்ஹாசன் இன்று (மே 30) அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினை சந்தித்தார். அப்போது மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட மநீம கட்சிக்கு இடம் ஒதுக்கியதற்காக முதல்வருக்கு அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார். அப்போது, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, பி.கே.சேகர்பாபு, மநீம கட்சியின் பொதுச் செயலாளர் ஆ.அருணாச்சலம், துணை தலைவர்கள் ஏ.ஜி.மவுரியா, தங்கவேல் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் கமல்ஹாசன் கூறியதாவது:-

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான முன்னேற்பாடுகளை செய்யுமாறு முதல்வர் கூறினார். அதேபோல், திமுக மூத்த நிர்வாகிகள் தங்கள் அறிவுரைகளையும் அனுபவங்களையும் எங்களிடம் கூறினார்கள். வேட்புமனு தாக்கல் எப்போது தாக்கல் செய்யலாம் என்பது குறித்து அவர்களிடம் கலந்தாலோசிக்கப்படும்.

நான் எப்போதுமே தமிழகத்துக்காகப் பேசிக்கொண்டிருக்கிறேன். தற்போது தமிழகத்துக்கான என் குரல் மாநிலங்களவையில் முதல்முறையாக ஒலிக்கப்போகிறது அவ்வளவுதான். ஆரம்பத்தில் திமுகவை எதிர்த்த நீங்கள் இப்போது இணைந்து செயல்படுகிறீர்களே என்று கேட்கிறீர்கள். நாட்டுக்கு தேவை என்பதால் திமுகவுடன் இணைந்து செயல்படுகிறேன்.

கன்னட மொழி தொடர்பாக நான் தெரிவித்த கருத்தால் எழுந்துள்ள சர்ச்சை குறித்தும், நான் மன்னிப்பு கேட்காவிட்டால் எனது படத்துக்கு தடை விதிக்கப்படும் என்று மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது குறித்தும் கேட்கிறீர்கள். இதற்கு முன்பும் இதுபோன்று நான் மிரட்டப்பட்டிருக்கிறேன். எனது கருத்து தவறாக இருந்தால் நான் மன்னிப்பு கேட்பேன். தவறாக இல்லாவிட்டால் நான் மன்னிப்பு கேட்க மாட்டேன். இது எனது வாழ்வியல் முறை.

இது ஜனநாயக நாடு. நான் சட்டத்தையும் நியாயத்தையும் நம்புகிறேன். எப்போதும் அன்புதான் வெற்றிபெறும். கன்னடம் மீதும், தெலுங்கு மீதும், கேரளம் மீதும் நான் வைத்திருக்கும் அன்பு உண்மையானது. ஏதோ ஒரு மறைமுக செயல்திட்டத்தோடு செயல்படுபவர்களைத் தவிர வேறு யாரும் என்னை சந்தேகிக்க மாட்டார்கள். இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

அப்போது செய்தியாளர் ஒருவர், “மக்கள் நீதி மய்யத்தை தொடங்கிய காலகட்டத்தில் குடும்ப அரசியலில் ஈடுபட்டு தமிழகத்தை குழி தோண்டி புதைக்கிறது திமுக என்று எதிர்ப்பு அரசியல் செய்தீர்கள். இன்றைக்கு உறவு என்று வந்திருக்கிறீர்களே” என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு கமல்ஹாசன், வேண்டாம் என தலையை ஆட்டியபடி நடக்க ஆரம்பித்தார். பிறகு என்ன நினைத்தாரோ திரும்பவும் மைக் முன்பாக வந்து நின்று, “நாட்டுக்கு தேவை என்பதால் திமுகவுடன் கூட்டணிக்கு வந்துள்ளேன்.” என முகத்தை கடுமையாக வைத்தபடி பதில் அளித்தார். அப்போது உடன் இருந்த நிர்வாகிகள், ஜனநாயகத்திற்காக கமல் கைகோர்த்துள்ளார் என்று மைக்கில் பேசியபடி கிளம்பினர்.

மதுரையில் பிரம்மாண்ட மாநாடு நடத்தி அரசியல் பிரவேசம் செய்தார் கமல்ஹாசன். இடதும் இல்லை வலதும் இல்லை மய்ய அரசியல் என்ற முழக்கத்தோடு மக்கள் நீதி மய்யம் கட்சியை ஆரம்பித்தார். கட்சி ஆரம்பித்த சமயத்தில் பிரபலங்கள் பலர் அவரது கட்சியில் சேர்ந்தனர். தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அடிக்கடி ஆலோசனை என அதிரடி காட்டினார்.

2019 நாடாளுமன்றத் தேர்தலில் முதன் முறையாக தேர்தல் களம் கண்ட மநீம ஓரளவுக்கு சொல்லிக்கொள்ளும்படியான வாக்குகளைப் பெற்றது. 2019 மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் 3.72% வாக்குகளைப் பெற்றது. மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் டெபாசிட் இழந்திருந்தாலும், பல நகர்ப்புற தொகுதிகளில் நாதக, அமமுகவை முந்தி மூன்றாவது இடத்தைப் பிடித்தனர்.

2021 சட்டமன்றத் தேர்தலில் 182 இடங்களில் போட்டியிட்ட மநீம 2.62 சதவீத வாக்குகளைப் பெற்றது. கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜகவின் வானதி சீனிவாசனிடம் 1,728 வாக்குகள் வித்தியாசத்தில் கமல்ஹாசன் தோல்வியடைந்தார். அத்தனை இடங்களிலும் தோல்வி அடைந்ததன் காரணமாக கட்சியினர் சோர்வடைந்தனர். கமல்ஹாசனும் படங்களில் நடிப்பதில் பிஸி ஆனதால் பலர் கட்சியை விட்டு விலகினர். இதையடுத்து கமல்ஹாசனும் கட்சிப் பணிகளில் கவனம் செலுத்தாமல் சினிமாவில் தீவிரம் காட்டினார்.

‘விக்ரம்’ படத்தின் போது உதயநிதி ஸ்டாலின் உடன் நெருக்கம் காட்டினார் கமல். அதைத்தொடர்ந்து, திமுக உடன் இணக்கம் காட்டத் தொடங்கினார் கமல்ஹாசன். ராகுல் காந்தி நடத்திய பாரத் ஜோடோ யாத்திரையின் போது அவரை சந்தித்து பேசினார். மேலும், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். அப்போதே திமுக – காங்கிரஸ் அணியில் கமல் இணைவது உறுதியானது.

2024 மக்களவைத் தேர்தல் வந்த போது பத்து தொகுதிகளில் திமுக கூட்டணிக்காக பிரச்சாரம் செய்தார். அதற்கு ஈடாக மாநிலங்களவை தேர்தலில் கமலஹாசனுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என உறுதி அளித்தது. இந்த அடிப்படையில் தற்போது ஜூன் 19ஆம் தேதி நடைபெற இருக்கும் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் நான்கில் ஒரு சீட்டை கமல்ஹாசனுக்கு கொடுத்துள்ளது. இதன் மூலம் ராஜ்யசபாவுக்குள் அடியெடுத்து வைக்கிறார் கமல்ஹாசன்.

The post தமிழகத்துக்கான என் குரல் மாநிலங்களவையில் முதல்முறையாக ஒலிக்கப்போகிறது: கமல்ஹாசன்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
86624
ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகளைத் தளர்த்த நடவடிக்கை எடுத்திருப்பது மகிழ்ச்சி: முதல்வர் ஸ்டாலின்! https://koodal.com/news/2025/05/30/happy-that-the-reserve-bank-has-taken-steps-to-relax-restrictions-chief-minister-stalin/ Fri, 30 May 2025 16:31:38 +0000 https://koodal.com/?p=86622 “நகைக் கடன் தொடர்பான ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகளைத் தளர்த்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக” முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியுள்ளதாவது:- தங்க நகைக்கடன் பெறுவதற்காக ரிசர்வ் வங்கியால் முன்மொழியப்பட்டுள்ள…

The post ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகளைத் தளர்த்த நடவடிக்கை எடுத்திருப்பது மகிழ்ச்சி: முதல்வர் ஸ்டாலின்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
“நகைக் கடன் தொடர்பான ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகளைத் தளர்த்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக” முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியுள்ளதாவது:-

தங்க நகைக்கடன் பெறுவதற்காக ரிசர்வ் வங்கியால் முன்மொழியப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைத் தளர்த்தக் கோரி நான் மத்திய நிதியமைச்சருக்கு எழுதிய கடிதம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. சிறிய தொகைகளை, குறிப்பாக ரூ. 2 லட்சத்துக்கு கீழ், கடன்பெறும் உழவர்கள், தினக்கூலித் தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்குத் தக்க நேரத்தில், எளிதில் கடன் கிடைக்க வேண்டும் என்பதைத்தான் தொடர்ந்து நான் வலியுறுத்தி வந்துள்ளேன்.

அந்த வகையில், நான் கடிதம் எழுதிய விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதைப் பாராட்டும், அதேவேளையில், ஏழை எளிய மக்கள் மீது பெரும் தாக்கம் செலுத்தும் இதுபோன்ற கொள்கை முடிவுகளை மாநிலங்களுடன் உரிய முறையில் கலந்தாலோசித்த பிறகே, இனி முடிவுசெய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, தங்க நகைக்கடன் வழங்குவது தொடர்பாக புதிதாக 9 கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்த வரைவை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்த கட்டுப்பாடுகளை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும், ரிசர்வ் வங்கி ஆளுநருக்கும் கடிதம் எழுதினார்.

இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகளை தளர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ரூ.2 லட்சத்துக்கும் குறைவாக கடன் வாங்குவோருக்கு புதிய விதிமுறைகளில் இருந்து விலக்கு அளிக்கலாம் என நிதி அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. மேலும், இதுபோன்ற புதிய விதிமுறைகளை கள அளவில் செயல்படுத்துவதற்கு கால அவகாசம் தேவைப்படும். அதனால் ஜனவரி 1, 2026 முதல் இந்த விதிமுறைகளை செயல்படுத்தலாம் என நிதி அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

The post ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகளைத் தளர்த்த நடவடிக்கை எடுத்திருப்பது மகிழ்ச்சி: முதல்வர் ஸ்டாலின்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
86622
பாகிஸ்தான் ஹபீஸ் சயீத், மசூத் அசாரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும்: ராஜ்நாத்சிங்! https://koodal.com/news/2025/05/30/pakistan-should-hand-over-hafiz-saeed-masood-azhar-to-india-rajnath-singh/ Fri, 30 May 2025 16:30:03 +0000 https://koodal.com/?p=86619 பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்துவதில் உறுதியாக இருந்தால், ஹபீஸ் சயீத், மசூத் அசார் போன்ற பயங்கரவாதிகளை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார். கோவா கடற்கரையில் இந்தியாவின் முதல் உள்நாட்டு விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தில் இன்று (மே…

The post பாகிஸ்தான் ஹபீஸ் சயீத், மசூத் அசாரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும்: ராஜ்நாத்சிங்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்துவதில் உறுதியாக இருந்தால், ஹபீஸ் சயீத், மசூத் அசார் போன்ற பயங்கரவாதிகளை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார்.

கோவா கடற்கரையில் இந்தியாவின் முதல் உள்நாட்டு விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தில் இன்று (மே 30) நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:-

ஆபரேஷன் சிந்தூரின்போது இந்திய கடற்படையின் அமைதியான சேவை பாராட்டுக்குரியது. பாகிஸ்தான் கடற்படை வெளியேறாமல் இருந்ததை அது உறுதி செய்தது. பாகிஸ்தான் தீய எண்ணத்துடன் செயல்பட முயன்றால், இந்திய கடற்படை மூலம் மத்திய அரசு பதில் அளிக்கும். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை வெறும் ராணுவ நடவடிக்கை மட்டுமல்ல, பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நேரடித் தாக்குதலாகும்.

சுதந்திரம் அடைந்ததிலிருந்து தான் நடத்தி வரும் பயங்கரவாதம் ஆபத்தான விளையாட்டு என்பதை பாகிஸ்தான் புரிந்து கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது. தற்போது, இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் ஏதேனும் பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொண்டால், அதன் விளைவுகளை அது ஏதிர்கொண்டு தோல்வியை சந்திக்க வேண்டியிருக்கும். பயங்கரவாத அச்சுறுத்தலை வேரறுக்க இந்தியா தயங்காது. அனைத்து வழிகளையும் அது பயன்படுத்தும்.

பாகிஸ்தான் மண்ணிலிருந்து இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகள் வெளிப்படையாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பயங்கரவாதிகளுக்கு எதிராக அனைத்து வகையான நடவடிக்கைகளையும் இந்தியா முழு சுதந்திரத்துடன் மேற்கொள்ளும். பயங்கரவாதத்திலிருந்து தனது மக்களைப் பாதுகாக்கும் இந்தியாவின் உரிமையை இன்று உலகம் ஒப்புக்கொள்கிறது. பாகிஸ்தான் தனது மண்ணில் இயங்கும் பயங்கரவாதத்தை வேரறுக்க வேண்டும். ஹபீஸ் சயீத், மசூத் அசார் போன்ற பயங்கரவாதிகளை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும். அவர்கள் இருவரும் இந்தியாவில் மிகவும் தேடப்படும் பயங்கரவாதிகளின் பட்டியலில் மட்டுமல்ல, ஐ.நா.வால் அறிவிக்கப்பட்ட பயங்கரவாதிகளாகவும் உள்ளனர். மும்பை தாக்குதல்களில் குற்றம் சாட்டப்பட்ட தஹாவூர் ராணா அண்மையில் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டார். அதேபோல், மும்பை தாக்குதல் குற்றவாளி ஹபீஸ் சயீது செய்த குற்றத்திற்கு நீதி கிடைக்க வேண்டும்.

மீண்டும் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் வலியுறுத்துகிறது. பேச்சுவார்த்தை என ஒன்று இருந்தால், அது பயங்கரவாதம் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றியதாக மட்டுமே இருக்கும். பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்துவதில் உறுதியாக இருந்தால், நீதியை நிலைநாட்ட ஹபீஸ் சயீத் மற்றும் மசூத் அசார் போன்ற பயங்கரவாதிகளை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும். ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடிவடையவில்லை, அது ஒரு இடைநிறுத்தம் மட்டுமே. பாகிஸ்தான் மீண்டும் அதே தவறைச் செய்தால், இந்தியாவின் பதிலடி கடுமையாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

The post பாகிஸ்தான் ஹபீஸ் சயீத், மசூத் அசாரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும்: ராஜ்நாத்சிங்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
86619
சாதிவாரி கணக்கெடுப்பை ஆதரிக்க திமுக ஏன் நீண்ட காலமாக தயங்கியது?: எடப்பாடி பழனிசாமி! https://koodal.com/news/2025/05/30/why-did-dmk-hesitate-to-support-caste-wise-census-for-a-long-time-edappadi-palaniswami/ Fri, 30 May 2025 16:27:24 +0000 https://koodal.com/?p=86617 “திமுக திடீரென சாதி ரீதியான கணக்கெடுப்பை ஆதரிப்பது அதன் கொள்கை சார்ந்த முடிவாகத் தோன்றவில்லை. அரசியல் நெருக்கடி காரணமாக சாதி ரீதியான கணக்கெடுப்பை திமுக ஆதரிப்பதாகத் தோன்றுகிறது” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி…

The post சாதிவாரி கணக்கெடுப்பை ஆதரிக்க திமுக ஏன் நீண்ட காலமாக தயங்கியது?: எடப்பாடி பழனிசாமி! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
“திமுக திடீரென சாதி ரீதியான கணக்கெடுப்பை ஆதரிப்பது அதன் கொள்கை சார்ந்த முடிவாகத் தோன்றவில்லை. அரசியல் நெருக்கடி காரணமாக சாதி ரீதியான கணக்கெடுப்பை திமுக ஆதரிப்பதாகத் தோன்றுகிறது” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசு அண்மையில், விரிவான விதத்தில் சாதி ரீதியான கணக்கெடுப்பை நடத்தப்போவதாக அறிவித்துள்ளது. இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல் போன்ற தருணம். இந்தியாவின் சமூகநீதிக் கொள்கையின் வரையறைகளை சீரமைத்து மாற்றியமைப்பதற்கான வாக்குறுதி இது. தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித்தலைவர் என்ற முறையில் இதை நம்பிக்கையுடனும், பெருமையுடனும் நான் வரவேற்கிறேன்.

சாதி ரீதியான கணக்கெடுப்பு என்பது அதிமுக ஏற்கெனவே தெளிவுடனும், முன்னோக்கிய பார்வையுடனும் முன்வைத்த ஒரு வேண்டுகோள். இந்த தருணம், ஒரே இரவில் உருவான தருணமல்ல. சாதி ரீதியான கணக்கெடுப்புக்கான இந்த அழைப்பு இப்போது தேசிய அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது. ஆனால் இதன் வேர்கள், தமிழகத்தின் சமூகநீதி இயக்கத்தில் இருந்து, அதன் கொள்கை நிலத்தில் இருந்து வந்தது.

இந்த சமூகநீதி பயணம் என்பது எங்களது முன்னோக்கிய தொலைநோக்குப் பார்வை கொண்ட மறைந்த முதல்வர் ஜெயலலிதா போட்ட அஸ்திவாரம். நேர்மையான, சமமான பிரதிநிதித்துவத்துக்கு அடிக்கல் நாட்டியவர் அவர்தான். 2021-ம் ஆண்டின் தொடக்கத்தில் நான் முதல்வராக இருந்த நேரத்தில், சாதி ரீதியான கணக்கெடுப்பை நடத்த சொன்ன முதல் அரசுகளில் எங்களது அரசும் ஒன்று. 1931-ம் ஆண்டு காலத்தில் இருந்து தொடர்ந்து வரும் காலாவதியான பழைய தரவுகள், தகவல்களை வைத்துக்கொண்டு நலத்திட்டங்கள் எதையும் நிறைவேற்ற முடியாது என்று ஆரம்ப முதலே நாங்கள் வாதாடி வருகிறோம்.

முன்னேற்றம் என்பது அனுதாபம் மூலம் வர முடியாது. ஆதாரங்கள் மூலம் மட்டுமே முன்னேற்றம் வரும். 69 சதவிகித இடஒதுக்கீடு கொள்கை மூலம் நீண்டகாலமாக கலங்கரை விளக்கம் போல உறுதியான செயல்பாட்டுடன் விளங்கிய கட்சி அதிமுக. அதிமுகவின் சாதனைகள் ஒரு விபத்து போல திடீரென ஏற்படுத்தப்பட்ட சாதனைகள் அல்ல. கட்சியின் அரசியல் உறுதிப்பாடு காரணமாகவும், சட்டரீதியான நிபுணத்துவத்தின் மூலமாகவும் அதிமுகவின் இந்த சாதனைகள் நிகழ்த்தப்பட்டன.

உச்சநீதிமன்றத்தில் இந்திரா சாஹனி (மண்டல்) வழக்கில் 1992-ம் ஆண்டு தீர்ப்பு வெளியானது. இடஒதுக்கீடுகளுக்கு இந்த தீர்ப்பு 50 சதவிகித வரம்பு விதித்தது. தமிழகத்தின் அடிப்படையான கொள்கை கட்டமைப்புக்கு இது அச்சுறுத்தலாக அமைந்தது. ஆனால் அந்த சவாலை மறைந்த முதல்வர் ஜெயலலிதா உறுதியுடன் எதிர்கொண்டார். 1993-ம் ஆண்டு சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தைக் கூட்டி ஒருமனதாக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றினார்.

டெல்லிக்கு அனைத்துக் கட்சி தூதுக்குழு ஒன்றை அனுப்பி வைத்தார். அவரது இடைவிடாத, விடாப்பிடியான, தொடர்ச்சியான வற்புறுத்தல் காரணமாக தமிழ்நாட்டின் இடஒதுக்கீட்டு சட்டம், அரசியல் அரசியலமைப்பின் 9-வது அட்டவணையில் இடம்பெற்றது. நீதித்துறை வந்து மீளாய்வு செய்வதில் இருந்து சமூக நீதியை அது பாதுகாத்தது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா அன்று செய்தது வெறும் அரசாட்சி அல்ல. அதன் பெயர் தலைமைத்துவம். சாதி ரீதியான கணக்கெடுப்பு குறித்து 2021-ம் ஆண்டு நாங்கள் வைத்த சாதி ரீதியான கணக்கெடுப்பு வேண்டுகோள், வெறும் அரசியல் அலங்காரத்துக்காக முன் வைத்த வேண்டுகோள் அல்ல.

தமிழகத்தின் சமுதாய யதார்த்தங்களை புரிந்து வைத்திருந்த எங்களது நீண்டகால புரிதலின் பிரதிபலிப்பு இது. பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட, பட்டியலின, பழங்குடி மக்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பு, நலத்திட்டங்களில் உண்மையான சரியான பிரதிநிதித்துவம் வேண்டும். இதை மறுமதிப்பீடு செய்ய வேண்டிய அவரசத் தேவை இருப்பதை நாங்கள் உணர்கிறோம். ஏற்றுக்கொள்கிறோம். சாதி ரீதியான கணக்கெடுப்பு குறித்து ஆரம்பகட்டத்தில் நாங்கள் பேசிய காலத்தில், ஆளும் திமுக அமைதியாக, மவுனமாக இருந்தது. ஆனால் இப்போது அதே கட்சி, சாதி வாரி கணக்கெடுப்பில் தங்களை ஏதோ முன்னணி வழிகாட்டிகள், ஒளிகாட்டிகள் போல பேசிக் கொள்கிறார்கள்.

2023-ம் ஆண்டின் பிற்பகுதியில்தான் திமுக முதல்வர் இதுபற்றி பிரதமருக்குக் கடிதம் எழுதினார். நாங்கள் ஏற்கெனவே பேசி வந்த விஷயத்தைத்தான் அவர் எதிரொலித்தார். சாதி ரீதியான கணக்கெடுப்பை நடத்துவோம் என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம். கடைசியாக இது தேசிய நிகழ்ச்சி நிரலில் சேர்ந்திருக்கிறது. திமுகவின் இரட்டை வேடத்தையும், போலி நிலைப்பாட்டையும் இது வெளிப்படுத்தியிருக்கிறது.

இப்போதும் கூட திமுகவின் நடவடிக்கைகள் முன்னோடி நடவடிக்கையாக, வழிகாட்டும் நடவடிக்கைகள் போலத் தெரியவில்லை. சந்தர்ப்பவாத அரசியல் நடவடிக்கைகளாகவே தெரிகிறது. அவர்கள் சாதிக் கணக்கெடுப்பு பற்றி அமைத்த ஒருநபர் ஆணையத்தை பற்றி புகழ்ந்து தள்ளுகிறார்கள். நிறைய பேசுகிறார்கள். அதில் தெளிவும் இல்லை. போக வேண்டிய திசையும் இல்லை. சாதி ரீதியான கணக்கெடுப்பு விஷயத்தில் எப்போதும் உறுதியாக நின்ற கட்சி அதிமுக.

தொடர்ச்சியான உறுதியான நடவடிக்கை மூலம் செயல்பட்ட கட்சி. திமுக அடையாள ரீதியாக சைகைகளை மட்டுமே காட்டும் கட்சி. எங்களது சாதனைகள் பற்றி நாங்கள் பேச வேண்டியதில்லை. எங்கள் சாதனைகளே பேசும். இடஒதுக்கீடு தொடர்பான வரலாற்றுப் பாதையில் இருந்து அதிமுக மரபு, கொள்கைகளை பிரிக்க முடியாது. 1980களில் அதிமுகவின் நிறுவனர் எம்ஜிஆர், பிற்படுத்தப்பட்டோருக்கான 50 சதவிகித இடஒதுக்கீட்டை வலியுறுத்தினார். ஒட்டுமொத்த ஒதுக்கீட்டை 68 சதவிகிதமாக உயர்த்தினார்.

1990-ம் ஆண்டு, இந்த ஒதுக்கீடு 69 சதவிகிதமாக மாறியது. நீதிமன்றங்கள் இதுகுறித்து சந்தேகம் எழுப்பியபோது, ஜெயலலிதா அரசியலமைப்பு வழிமுறைகள் மூலமாக இடஒதுக்கீட்டைப் பாதுகாத்தார். இந்திய அளவில் இடஒதுக்கீடு கொள்கையில் உறுதிபட நிலைத்திருக்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடுதான். அரசியலமைப்பு மூலம் இடஒதுக்கீட்டை பாதுகாத்தவர்கள் நாங்கள். எதிர்ப்புகளைக் கண்டு எப்போதும் நாங்கள் பின்வாங்கியதோ சலனப்பட்டதோ இல்லை. சாதி வாரி கணக்கெடுப்பை நடத்தப்போகிறோம் என்ற மத்திய அரசின் அறிவிப்பு வரலாற்றுச் சிறப்பு மிக்கது. துணிவு மிக்கது.

இதை வரவேற்கிறோம். வெறும் தரவுகளை மட்டும் வைத்துக் கொண்டு சமகால தேவைகளை பூர்த்திசெய்யும் நலத்திட்ட கொள்கைகளை வகுக்க முடியாது என்று நாங்கள் நம்புகிறோம். சரியான பிரதிநிதித்துவத்துடன், வளங்கள் சரியாகப் பகிரப்படுவதன் மூலமாகவே நலத்திட்ட கொள்கைகளை வகுக்க முடியும். சாதி ரீதியாக கணக்கெடுப்பு இப்போது தேசிய அளவில் கவனம் பெற்றிருப்பது மகிழ்ச்சி தருகிறது. இதன் முக்கியத்துவதைப் புரிந்து கொண்டு இதை ஏற்று அங்கீகரிக்க வேண்டும் என மத்தியில் உள்ள எங்கள் கூட்டணி கட்சியினரை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.

இந்த கணக்கெடுப்பு மூலம் சாதிய அடிப்படையில் மக்களின் பரவல், அவர்களது கல்விநிலை, வேலை வாய்ப்பு நிலை, சமூக பொருளாதார நிலை போன்றவற்றை நாடு தழுவிய விதத்தில் தெரிந்து கொள்ள முடியும். இதன்மூலம் இடஒதுக்கீட்டை புதிதாக சிறப்பாக கட்டமைக்க முடியும். சமூகத் திட்டங்கள் எவ்வாறு இலக்கு வைக்கப்படுகின்றன, மத்திய மாநில அரசுகள் இணைந்து உள்ளடக்கிய வளர்ச்சியை நீண்டகாலமாக அவை எவ்வாறு அணுகுகின்றன என்பதை இந்த கணக்கெடுப்பு மறு வடிவமைக்கக் கூடும்.

சாதி வாரி கணக்கெடுப்பை ஆதரிக்க திமுக ஏன் நீண்ட காலமாகத் தயங்கியது? ஒருவர் இந்த கேள்வியைக் கேட்கலாம். தேர்தல் கணக்குகளில் இதற்கான பதில் ஒளிந்திருக்கிறது. ஒளிவுமறைவற்ற தெள்ளத்தெளிவான ஒரு சாதிய கணக்கெடுப்பு சாதி ரீதியான கூட்டணிகளைப் பாதிக்கலாம். அதற்கு தொல்லை தரலாம். சாதி ரீதியான கூட்டணிகளை திமுக நீண்டகாலமாக கவனமாகக் கட்டமைத்து வருகிறது. இதற்கு நேர் எதிராக அதிமுக வசதியான கற்பனைகள், கற்பிதங்களை விட சங்கடம் தருகிற உண்மைகளை நம்புவதே நல்லது என்ற கருதுகிறது.

எங்களைப் பொறுத்தவரை நீதி என்பது எப்போதும் உறுதியாக நிலைநாட்டப்படுவதாக இருக்க வேண்டும். அதற்காகத்தான் நாங்கள் சலனப்படாமல் நிற்கிறோம். திமுக திடீரென சாதி ரீதியான கணக்கெடுப்பை ஆதரிப்பது அதன் கொள்கை சார்ந்த முடிவாகத் தோன்றவில்லை. அரசியல் நெருக்கடி காரணமாக சாதி ரீதியான கணக்கெடுப்பை திமுக ஆதரிப்பதாகத் தோன்றுகிறது. அவர்கள் இந்த விஷயத்தில் தாமதமாகவும், திசை மாறிய நிலையிலும் உள்ளனர். அதிமுகவோ இதற்கு முரண்பாடாக நேர் எதிராக, தெளிவாகவும், உறுதியாகவும் உள்ளது.

சாதி ரீதியான கணக்கெடுப்பு என்பது நோய் தீர்க்கும் மருந்தல்ல. அது ஒரு முக்கியமான, தேவைப்படும் கருவி. இந்தியாவை அனைத்து மக்களின் சரியான பிரதிநிதித்துவத்துடன் நாம் கட்டியமைக்க வேண்டும் என்றால் மக்கள் யார் யார், அவர்கள் எங்கே நிற்கிறார்கள் என்பதையெல்லாம் நாம் புரிந்துகொள்ள ஆரம்பிக்க வேண்டும். எவ்வளவு தொலைவுக்கு அவர்கள் இன்னும் போக வேண்டும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் தமிழ்நாடு மீண்டும் ஒருமுறை வழிகாட்டி மாநிலமாகத் திகழ்கிறது. எடுத்துக்காட்டுகள் மூலம் அது மீண்டும் ஒருமுறை வழிகாட்ட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post சாதிவாரி கணக்கெடுப்பை ஆதரிக்க திமுக ஏன் நீண்ட காலமாக தயங்கியது?: எடப்பாடி பழனிசாமி! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
86617
பாஜகவுக்கும் பாமகவின் உட்கட்சி பிரச்சினைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை: நயினார் நாகேந்திரன்! https://koodal.com/news/2025/05/30/bjp-has-nothing-to-do-with-pmks-internal-party-issues-nayinar-nagendran/ Fri, 30 May 2025 16:24:52 +0000 https://koodal.com/?p=86615 “பாமக உட்கட்சி விவகாரங்களுக்கும், குறிப்பாக ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதலுக்கும் பாஜகவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை” என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று கூறும்போது, “2024 மக்களவை தேர்தலில், அதிமுகவுடன்…

The post பாஜகவுக்கும் பாமகவின் உட்கட்சி பிரச்சினைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை: நயினார் நாகேந்திரன்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
“பாமக உட்கட்சி விவகாரங்களுக்கும், குறிப்பாக ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதலுக்கும் பாஜகவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை” என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று கூறும்போது, “2024 மக்களவை தேர்தலில், அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வலியுறுத்தினேன். அதேநேரம் அன்புமணியும், சவுமியாவும், ‘பாஜகவுடன் கூட்டணி என்பதை ஏற்க வேண்டும்’ என்று எனது கால்களை பிடித்துக் கொண்டு அழுதனர். மறுநாள் காலை, தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை வந்துவிட்டார். எனக்கு தெரியாமல் பெரிய விருந்து வைக்கப்பட்டது. பாஜக உடனான கூட்டணி ஏற்பாடுகளை சவுமியா முன்கூட்டியே செய்துவிட்டார். நான் கூறியபடி அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தால், 3 இடங்களில் பாமக வெற்றி பெற்றிருக்கும். சின்னமும் கிடைத்திருக்கும்” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், திருநெல்வேலியில் இன்று (மே 30) செய்தியாளர்களைச் சந்தித்த நயினார் நாகேந்திரன் கூறியதாவது:-

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு இடையிலான மோதலுக்கு பின்னால் பாஜக இருப்பதாக கூறப்படுவது முற்றிலும் வேடிக்கையாக இருக்கிறது. பாஜகவுக்கும் பாமகவின் உட்கட்சி பிரச்சினைக்கும் எந்த சம்பந்தமும், தொடர்பும், பின்னணியும் கிடையாது. இது முழுக்க முழுக்க அவர்களின் உட்கட்சி பிரச்சினை. அதைப் பற்றி கருத்து கூறவும் முடியாது. உட்கட்சி பிரச்சினைகளில் நாம் தலையிடுவது சரியானதாக இருக்காது.

திருநெல்வேலியில் மட்டுமல்லாமல், அனைத்து மாநகராட்சிகளிலும் மஞ்சள்காமாலை போன்ற நோய்கள் பரவி வருகின்றன. கொரோனா 3-வது அலை வருவதாகவும் கூறுகிறார்கள். திருநெல்வேலி மாநகராட்சியில் மட்டும் 200-க்கும் மேற்பட்டோர் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்க தமிழக அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும். அனைத்து மாநகராட்சிகளிலும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன.

சேலம் மாநகராட்சியில் திமுகவை சேர்ந்தவர்கள் ஒரு கவுன்சிலரை கைநீட்டி அடிப்பது போன்ற காட்சிகளெல்லாம் வந்துள்ளன. ராணிப்பேட்டையில் 10-ம் வகுப்பு மாணவியை வீடு புகுந்து கொலை செய்திருக்கிறார்கள். மற்றொரு மாணவிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தற்போது முழுக்க முழுக்க சட்டம் – ஒழுங்கு கெட்டுப்போயுள்ளது. காவல் துறையினர் சரியாக எங்கேயுமே நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை. கேட்டால் நாங்கள்தான் உண்மையான ஆட்சி செய்கிறோம் என முதல்வர் மார்தட்டி பேசுகிறார்.

திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க அரசு நவடிக்கை எடுக்க வேண்டும். குளங்களில் மணலை அள்ளி தூர்வாரி வைத்தால் அதிகளவில் தண்ணீரை தேக்கி வைக்க முடியும்.

தமிழில் இருந்து கன்னடம் பிறந்தது என நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். ஒரு மனிதனுக்கு தாய் மீது பற்று இருக்க வேண்டும். தாய்நாடு மீதும் பற்று இருக்க வேண்டும். தலைவராக இருக்கக்கூடிய அதுவும் குறிப்பாக நடிகர் கமல்ஹாசன், அவர் என்ன பேசுகிறார் என்று அவருக்கே தெரியவில்லை. இது போன்ற கருத்துகளை அவர் தவிர்த்திருக்க வேண்டும்.

கன்னடத்தை பூர்விகமாகக் கொண்ட ஒரு முதல்வரால் தனக்கு பிரச்சினை வந்தது என்று கமல்ஹாசன் கூறியது தேவையில்லாத பேச்சு. யாருடைய பூர்விகத்தை எடுத்து பார்த்தாலும் பல்வேறு பிரச்சினைகள் வரும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஒருமுறை படப்பிடிப்புக்காக பெங்களூரு சென்றிருந்தபோது, அங்கிருந்தவர்கள் ஜெயலலிதாவிடம், கன்னடம் வாழ்க என்று கூறச்சொன்னார்கள். ஆனால், அந்த நேரத்தில் ஜெயலலிதா, உயிரே போனாலும் சொல்ல மாட்டேன் என்று கூறினார். நடிகர் கமல்ஹாசன் பேசிய கருத்து வருந்தத்தக்கது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் 2 குட்டி யானைகள் உள்ளன. அதை நெல்லையப்பர் கோயிலுக்கு வழங்குவதற்கு அவர்கள் தயாராக உள்ளார்கள். விதிமுறைகள் பின்பற்றி முதல்வரிடம் பேசி யானை வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.

அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் யார் என்ற கேள்விக்கு, “அதை எடப்பாடி பழனிசாமியிடம்தான் கேட்க வேண்டும்,” என்று அவர் பதிலளித்தார்.

The post பாஜகவுக்கும் பாமகவின் உட்கட்சி பிரச்சினைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை: நயினார் நாகேந்திரன்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
86615
மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை: பிரதமர் மோடி! https://koodal.com/news/2025/05/30/the-day-when-maoist-violence-will-be-completely-eradicated-is-not-far-off-prime-minister-modi/ Fri, 30 May 2025 16:23:39 +0000 https://koodal.com/?p=86612 மாவோயிஸ்ட் வன்முறை நாட்டிலிருந்து முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். பிகார் மாநிலம் கரகாட்டில் இன்று ரூ.48,520 கோடி மதிப்புள்ள பல மேம்பாட்டுத் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார்.…

The post மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை: பிரதமர் மோடி! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
மாவோயிஸ்ட் வன்முறை நாட்டிலிருந்து முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

பிகார் மாநிலம் கரகாட்டில் இன்று ரூ.48,520 கோடி மதிப்புள்ள பல மேம்பாட்டுத் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். இதனையடுத்து அவர் பேசியதாவது:-

கடந்த ஆண்டுகளில் வன்முறை மற்றும் அமைதியின்மையை பரப்பியவர்களை நாங்கள் எவ்வாறு ஒழித்தோம் என்பதற்கு பிகார் மக்கள் சாட்சிகளாக உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு சசாரம் மற்றும் அருகிலுள்ள மாவட்டங்களில் நக்சலைட் எவ்வாறு ஆதிக்கம் செலுத்தியது. அவர்களுக்கு பாபா சாகேப் அம்பேத்கர் மீது நம்பிக்கை இல்லை. அந்தச் சூழ்நிலைகளிலும் கூட, நிதிஷ் குமார் இங்கு வளர்ச்சிக்காக தன்னால் முடிந்த அனைத்தையும் செய்தார்.

2014-க்கு முன்பு, 75-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் நக்சலைட்களால் பாதிக்கப்பட்டன. இப்போது, ​​18 மாவட்டங்கள் மட்டுமே நக்சலைட்களால் பாதிக்கப்பட்டுள்ளன. மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை.

பிகாரில் நடந்த காட்டாட்சி நிதிஷ் குமாரால் அப்புறப்படுத்தப்பட்டபோது, ​​மாநிலம் முன்னேற்றப் பாதையில் செல்லத் தொடங்கியது. உடைந்த நெடுஞ்சாலைகள், மோசமான ரயில் பாதைகள், திட்டமிடப்பட்ட விமான சேவை என இந்த சகாப்தம் இப்போது வரலாறாகிவிட்டது. பிஹாரில் நான்கு வழி நெடுஞ்சாலைகளின் வலைப்பின்னல் கட்டப்பட்டு வருகிறது. அனைத்து முக்கிய நதிகளிலும் பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

The post மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை: பிரதமர் மோடி! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
86612
வெளிநாடுகளுக்கு செல்லும் இந்திய நிறுவனங்களின் முதலீடுகள்: ப.சிதம்பரம் எச்சரிக்கை! https://koodal.com/news/2025/05/30/investments-of-indian-companies-going-abroad-p-chidambaram-warns/ Fri, 30 May 2025 16:18:47 +0000 https://koodal.com/?p=86610 இந்தியாவை சேர்ந்த நிறுவனங்கள் உள்நாட்டில் தங்களுடைய முதலீடுகளை நிறுத்திவிட்டு வெளிநாடுகளில் அதிக முதலீடு செய்வது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ப. சிதம்பரம் கவலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ப. சிதம்பரம் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில்…

The post வெளிநாடுகளுக்கு செல்லும் இந்திய நிறுவனங்களின் முதலீடுகள்: ப.சிதம்பரம் எச்சரிக்கை! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
இந்தியாவை சேர்ந்த நிறுவனங்கள் உள்நாட்டில் தங்களுடைய முதலீடுகளை நிறுத்திவிட்டு வெளிநாடுகளில் அதிக முதலீடு செய்வது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ப. சிதம்பரம் கவலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ப. சிதம்பரம் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் அவர் பதிவு செய்துள்ளார். இந்தியாவை சேர்ந்த நிறுவனங்கள் உள்நாட்டில் தங்களுடைய முதலீட்டு திட்டங்களை ரத்து செய்து வருகின்றன என குறிப்பிட்டு இருக்கிறார். 2024 – 25 ஆம் ஆண்டு இதுபோல இந்திய நிறுவனங்கள் தங்களுடைய அறிவிக்கப்பட்ட திட்டங்களை திடீரென ரத்து செய்யப்படும் விகிதம் என்பது 35.9% உயர்ந்திருக்கிறது எனக் கூறியிருக்கிறார். அதே வேளையில் இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் தங்களுடைய முதலீடுகளை அதிகரித்த வண்ணம் இருக்கின்றன என்பதையும் ப. சிதம்பரம் தன்னுடைய எக்ஸ் பதிவின் மூலம் சுட்டிக்காட்டி இருக்கிறார். இந்த விவகாரத்தில் மத்திய நிதி அமைச்சகம் தனி கவனம் செலுத்த வேண்டும் என்றும் இதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ப. சிதம்பரம் வலியுறுத்தி இருக்கிறார்.

இந்தியா பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களின் முதலீட்டு மையமாக மாறி வருகிறது என மத்திய அரசு தொடர்ந்து கூறி வரக்கூடிய சூழலில் ப. சிதம்பரம் இப்படி ஒரு பதிவினை வெளியிட்டு இருக்கிறார். அண்மையில் அந்நிய நேரடி முதலீடு தொடர்பான தரவுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டு இருந்தது. ப. சிதம்பரத்தின் இந்த பதிவினை உறுதிப்படுத்தும் வகையில் அதில் இடம்பெற்ற தரவுகள் இருக்கின்றன. 2024– 25 ஆம் நிதி ஆண்டில் நிகர அந்நிய நேரடி முதலீடு வெகுவாக குறைந்திருக்கிறது என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு முக்கிய காரணம் இந்தியாவில் தொழில் புரியக்கூடிய வெளிநாட்டு நிறுவனங்கள் தங்களின் சொந்த நாடுகளுக்கு அதிக பணத்தை திருப்பி அனுப்பி இருக்கின்றன. அதேபோல இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் அதிக அளவு முதலீடு செய்திருக்கின்றன.

21 ஆம் ஆண்டில் நிகர அந்நிய நேரடி முதலீடு 44 பில்லியன் டாலர்களாக இருந்தது. இது கடந்த ஆண்டு 28 பில்லியன் டாலர்களாக இருந்து 2024-25ஆம் நிதியாண்டில் 353 மில்லியன் டாலர்கள் என குறைந்துவிட்டது என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதே போல இந்தியாவிற்கு வந்த அந்நிய நேரடி முதலீடுகளில் 60 சதவீதம் சிங்கப்பூர், மொரிசியஸ், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் நெதர்லாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து தான் வந்தடைந்து இருக்கின்றன. அதே போல இந்தியாவில் இருந்து வெளியேற சென்ற முதலீடுகளும் சிங்கப்பூர், அமெரிக்கா, மொரிசியஸ் மற்றும் நெதர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கு தான் அதிகம் சென்றிருக்கின்றன.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய நிறுவனங்களில் தாங்கள் செய்திருந்த முதலீடுகளில் 16 சதவீதம் தொகையை திரும்ப பெற்றுள்ளனர் எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தியாவை சேர்ந்த நிறுவனங்கள் வெளிநாடுகளில் அதிக முதலீடு செய்யும் போக்கு 75 சதவீதம் உயர்ந்து 21 பில்லியன் டாலர்கள் என உயர்ந்திருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

The post வெளிநாடுகளுக்கு செல்லும் இந்திய நிறுவனங்களின் முதலீடுகள்: ப.சிதம்பரம் எச்சரிக்கை! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
86610
மோடி ஆட்சியில் வங்கி மோசடிகள் 416% அதிகரிப்பு: மல்லிகார்ஜுன கார்கே! https://koodal.com/news/2025/05/30/bank-frauds-have-increased-by-416-under-modi-rule-mallikarjun-kharge/ Fri, 30 May 2025 16:17:40 +0000 https://koodal.com/?p=86608 பிரதமர் மோடி தலைமையிலான அரசில் வங்கி மோசடிகள் 416 சதவீதம் அதிகரித்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது:- மோடி அரசின் 11 ஆண்டுகளில் ரூ.6,36,992 கோடி மதிப்புள்ள வங்கி…

The post மோடி ஆட்சியில் வங்கி மோசடிகள் 416% அதிகரிப்பு: மல்லிகார்ஜுன கார்கே! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
பிரதமர் மோடி தலைமையிலான அரசில் வங்கி மோசடிகள் 416 சதவீதம் அதிகரித்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது:-

மோடி அரசின் 11 ஆண்டுகளில் ரூ.6,36,992 கோடி மதிப்புள்ள வங்கி மோசடிகள் நடந்துள்ளன, இது 416% அதிகரிப்பு ஆகும். பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகும், கடந்த 6 ஆண்டுகளில் ரூ.500 போலி ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை 291% அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு அது மேலும் அதிகமாகும். மோடி ஜி, உங்கள் நரம்புகளில் என்ன பாய்கிறது என்று எங்களுக்குத் தெரியாது. ஆனால், உங்கள் அரசின் நரம்புகளில் மோசடி மற்றும் போலித்தனம் பாய்கிறது என்பது உறுதி. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post மோடி ஆட்சியில் வங்கி மோசடிகள் 416% அதிகரிப்பு: மல்லிகார்ஜுன கார்கே! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
86608