உணவு பழக்கம் Archives - கூடல் | Tamil Koodal https://koodal.com/tamil/health/food-guide/ Latest Tamil News and Tamil Movie Reviews Online in Tamil Entertainment Website - Koodal.com Tue, 15 Jul 2025 04:16:36 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.2 https://i0.wp.com/koodal.com/wp-content/uploads/2021/12/cropped-koodal-logo.jpg?fit=32%2C32&ssl=1 உணவு பழக்கம் Archives - கூடல் | Tamil Koodal https://koodal.com/tamil/health/food-guide/ 32 32 201197430 சமோசா, ஜிலேபி ஆபத்தான உணவா?: எச்சரிக்கை! https://koodal.com/health/2025/07/15/are-samosas-and-jalebis-dangerous-foods-warning/ Tue, 15 Jul 2025 04:16:36 +0000 https://koodal.com/?p=90101 இந்தியாவில் உடல் பருமன் கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2050-ம் ஆண்டுக்குள் 44.9 கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் அதிக எடை அல்லது உடல் பருமனாக இருப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, நகர்ப்புறங்களில் வசிப்பவர்களில் 5-ல் ஒருவர் உடல் பருமனாக இருப்பதாக ஆய்வில்…

The post சமோசா, ஜிலேபி ஆபத்தான உணவா?: எச்சரிக்கை! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
இந்தியாவில் உடல் பருமன் கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2050-ம் ஆண்டுக்குள் 44.9 கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் அதிக எடை அல்லது உடல் பருமனாக இருப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, நகர்ப்புறங்களில் வசிப்பவர்களில் 5-ல் ஒருவர் உடல் பருமனாக இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது. உடலுக்கு தீங்கு விளைவிக்கும் மோசமான உணவு வகைகள் மற்றும் உடல் செயல்பாடு இல்லாமை ஆகியவற்றால் குழந்தைகளுக்கும் உடல் பருமன் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நாக்பூர் எய்ம்ஸ் உட்பட அனைத்து மத்திய அரசு மருத்துவமனைகளிலும், உணவுப்பொருட்களில் இருக்கும் எண்ணை மற்றும் சர்க்கரை அளவுகளை பட்டியலிட்டு பலகைகள் வைக்க மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இதில் நாம் தினமும் உண்ணும் அன்றாட சிற்றுண்டி உணவுகளில் எவ்வளவு கொழுப்பு மற்றும் சர்க்கரை இருக்கிறது என்பதை விளக்கும் பட்டியல்கள் இடம்பெறுகின்றன. உடலுக்கு தேவையில்லாத உணவை நீக்குவதற்கான முதல் படி இதுவாகும். சமோசா, ஜிலேபி ஆகியவை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு வகைகள் ஆகும். ஆனால் இந்த 2 உணவுகளும் உடலுக்கு தீங்கானது என்று கூறப்படுகிறது. இதன் மூலம் சமோசா, ஜிலேபி ஆகியவை விரைவில் சுகாதார எச்சரிக்கை பட்டியலில் சேரலாம் என்று கருதப்படுகிறது.

சிகரெட்டுகளில் எச்சரிக்கை வாசகம் இருப்பது போல சமோசா, ஜிலேபி அடைத்து விற்கப்படும் பாக்கெட்டுகளில் உள்ள லேபிளில் இந்த எச்சரிக்கை வாசகம் விரைவில் இடம்பெற உள்ளது என்று இந்திய இருதயவியல் சங்கத்தின் நாக்பூர் பகுதி தலைவர் அமர் அமலே கூறினார். நீரிழிவு, இதய நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாக மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஆதரவாளர்கள் இதை பார்க்கிறார்கள். இந்த எச்சரிக்கை வாசகம் இடம்பெறும் பட்டியலில் மேலும் பல உணவுகளும் சேர உள்ளன.

The post சமோசா, ஜிலேபி ஆபத்தான உணவா?: எச்சரிக்கை! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
90101
ஆண்கள் ஏன் முருங்கை விதை சாப்பிடணும் தெரியுமா? https://koodal.com/health/2025/01/22/do-you-know-why-men-should-eat-drumstick-seeds/ Wed, 22 Jan 2025 15:07:43 +0000 https://koodal.com/?p=75840 முன்னூறு நோய்களை தீர்க்கக்கூடியது முருங்கைக்கீரை என்பார்கள்.. அந்தவகையில் ஆண்களுக்கு உதவும் முருங்கைக்கீரை பொடியை எப்படி சாப்பிடலாம்? அதை எப்படி வீட்டிலேயே எளிய முறையில் தயார் செய்வது என்பது குறித்து சுருக்கமாக பார்க்கலாம். பெண்களுக்கு எந்த அளவுக்கு முருங்கைக்கீரை உதவுகிறதோ, அதுபோலவே ஆண்களுக்கும்…

The post ஆண்கள் ஏன் முருங்கை விதை சாப்பிடணும் தெரியுமா? appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
முன்னூறு நோய்களை தீர்க்கக்கூடியது முருங்கைக்கீரை என்பார்கள்.. அந்தவகையில் ஆண்களுக்கு உதவும் முருங்கைக்கீரை பொடியை எப்படி சாப்பிடலாம்? அதை எப்படி வீட்டிலேயே எளிய முறையில் தயார் செய்வது என்பது குறித்து சுருக்கமாக பார்க்கலாம்.

பெண்களுக்கு எந்த அளவுக்கு முருங்கைக்கீரை உதவுகிறதோ, அதுபோலவே ஆண்களுக்கும் அபரிமிதமான நன்மையை தரக்கூடியது இந்த முருங்கையிலைகள்.. ஆண்களின் புராஸ்டேட் சுரப்பி வீக்கத்தை கட்டுப்படுத்த இந்த முருங்கைதான் உதவுகிறது.. புராஸ்டேட் என்பது ஆண்களுக்கான பாலியல் சுரப்பியாகும்.. ஆண்களுக்கு சுரக்க வேண்டிய டெஸ்டோஸ்டிரான் என்ற ஹார்மோன் சுரப்பு குறையும்போது, இந்த புராஸ்டேட் சுரப்பி வீங்கிவிடும்.. அப்படி புராஸ்டேட் சுரப்பியின் வீக்கம் இருந்தால், சிறுநீர் கழிப்பதிலும் சிரமம் ஏற்பட்டுவிடும்..

அதேபோல, ஆண் உறுப்பில் ரத்த ஓட்டத்தில் சிக்கல் இருந்தால், விறைப்பு தன்மையிலும் பிரச்சனை ஏற்பட்டுவிடும்.. அதிக கொழுப்பு, உயர் ரத்த அழுத்தம், கட்டுக்கடங்காத சர்க்கரை நோய் இருந்தாலும், விறைப்புதன்மையிலும் குறைபாடு வரலாம். இதுபோன்ற குறைகளை தீர்க்கவே முருங்கை விதைகள் உதவுகின்றன. ஆரோக்கியமான விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, முருங்கை விதைகளை எப்படி பயன்படுத்துவது? முருங்கைக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, அதற்குள்ளிருக்கும் விதைகளை எடுத்து நிழலில் நன்றாக காயும் வரை உலர்த்த வேண்டும். பிறகு, இந்த விதையை மிக்ஸியில் தூள் செய்து, சலித்து எடுத்து வைத்துக் கொள்ளலாம். இந்த பொடியை பசும்பாலில் தினமும் 21 நாட்கள் இரவு குடித்து வந்தால் பலன் கிடைக்கும். அல்லது முருங்கை விதைகளை நிழலில் உலர்த்தி எடுத்து வைத்து கொண்டு, தேவைப்படும்போது, நெய்யில் வதக்கி தூள் செய்து பசும்பாலுடன் கலந்து குடிக்கலாம்.

எனினும் மருத்துவர்களிடம் முறையான வழிகாட்டுதலுடன் இந்த முருங்கை விதை பொடியை எடுத்து கொள்வது, ஆரோக்கியத்துக்கு மேலும் நன்மை பயக்கும். முருங்கைக்கீரையையும் ஆண்கள் அடிக்கடி சாப்பிட்டு வரவேண்டும்.. அல்லது சூப் போல சாப்பிடலாம்.. இந்த முருங்கை சூப் சாப்பிடுவதால், மலட்டுத்தன்மை மட்டுமல்லாமல், ரத்தசோகை, உடல் சூடு, மலச்சிக்கல், தலைமுடி உதிர்வு, அல்சர், வாய் புண் என பல்வேறு பிரச்சனைகளுக்கு மருந்தாகிறது.

சிலர் இந்த கீரையில் கஞ்சி போல செய்து சாப்பிடுவார்கள்.. அதாவது, பச்சரிசியை நொய்யாக உடைத்து, அதில் கடலை பருப்பு, வெந்தயம், பூண்டு பற்கள், ஒரு கைப்பிடி முருங்கைக்கீரை சேர்த்து தண்ணீர் ஊற்றி வேகவைக்க வேண்டும். பிறகு ஒரு வாணலில் நெய், பட்டை, கிராம்பு, ஏலக்காய் வறுத்து, நொய்யரசி வெந்ததுமே அதில் கொட்டி, உப்பு சேர்த்து கிளறவேண்டும்.. இந்த கஞ்சி ஆண்களுக்கு சோர்வை போற்றி, உடல் பலத்தையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் தரக்கூடியது. இதனை பெண்களும், குழந்தைகளும் சாப்பிடலாம்.

The post ஆண்கள் ஏன் முருங்கை விதை சாப்பிடணும் தெரியுமா? appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
75840
மாரடைப்பு வராமல் தடுக்க இந்த பழங்களை அடிக்கடி சாப்பிடுங்க! https://koodal.com/health/2025/01/22/eat-these-fruits-often-to-prevent-heart-attacks/ Wed, 22 Jan 2025 15:05:52 +0000 https://koodal.com/?p=75837 சமீப காலமாக மாரடைப்பால் இறப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இப்படி ஒருவருக்கு மாரடைப்பு வருவதற்கு காரணம் இதயத்திற்கு செல்லும் இரத்தக்குழாய்களில் கெட்ட கொழுப்புக்கள் படிந்து இரத்த ஓட்டத்தில் தடையை ஏற்படுத்துவது தான். இவ்வாறு கெட்ட கொழுப்புக்கள் தேங்க நாம் உண்ணும் ஆரோக்கியமற்ற…

The post மாரடைப்பு வராமல் தடுக்க இந்த பழங்களை அடிக்கடி சாப்பிடுங்க! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
சமீப காலமாக மாரடைப்பால் இறப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இப்படி ஒருவருக்கு மாரடைப்பு வருவதற்கு காரணம் இதயத்திற்கு செல்லும் இரத்தக்குழாய்களில் கெட்ட கொழுப்புக்கள் படிந்து இரத்த ஓட்டத்தில் தடையை ஏற்படுத்துவது தான். இவ்வாறு கெட்ட கொழுப்புக்கள் தேங்க நாம் உண்ணும் ஆரோக்கியமற்ற ஜங்க் உணவுகளும், உடலுழைப்பில்லாத வாழ்க்கை முறையும் தான் முக்கிய காரணம். ஆனால் எப்படி உணவுகளால் இரத்தக்குழாய்களில் கொழுப்புக்கள் படிகிறதோ, அதேப் போல் உணவுகளைக் கொண்டே இரத்தக்குழாய்களில் படிந்துள்ள கொழுப்புக்களை அகற்றலாம். அதுவும் ஒருசில பழங்களை தினமும் சிறிது உட்கொண்டு வந்தாலே, உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, இரத்தக்குழாய்களை சுத்தமாக வைத்து, மாரடைப்பு வரும் அபாயத்தைத் தடுக்கலாம்.

இப்போது எந்த பழங்களை உட்கொண்டால் மாரடைப்பின் அபாயத்தைத் தடுக்கலாம் என்பதைக் காண்போம். ஆப்பிளுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட ஒரு பழம் தான் கொய்யாப்பழம். இந்த பழத்தில் உள்ள சக்தி வாய்ந்த ஊட்டச்சத்துக்கள் இதயத்திற்கு செல்லும் தமனிகளில் ப்ளாக்குகள் உருவாவதைத் தடுக்க உதவுகிறது. மாரடைப்பு வரக்கூடாதெனில் கொய்யாப்பழத்தை வாங்கி அடிக்கடி சாப்பிடுங்கள். பெர்ரிப் பழங்களான ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி, ராஸ்ப்பெர்ரி போன்றவற்றில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, இரத்தக்குழாய்களில் ப்ளாக்குகள் உருவாவதைத் தடுக்கிறது. ஆகவே பெர்ரிப் பழங்களை முடிந்தால் அவ்வப்போது வாங்கி சாப்பிடுங்கள்.

சிட்ரஸ் பழமான ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி என்னும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸின்ட்டுகள் உள்ளன. இவை தமனிகளில் ப்ளாக்குகள் உருவாக்கத்தைத் தடுப்பதோடு, கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுகின்றன. எனவே அடிக்கடி ஆரஞ்சு பழத்தை வாங்கி சாப்பிட முயற்சி செய்யுங்கள். மாதுளம் பழத்தில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்வதோடு, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் கெட்ட கொழுப்புக்களின் அளவையும் குறைக்க உதவுகின்றன. எனவே மாரடைப்பு ஏற்படக்கூடாதெனில் தினமும் ஒரு மாதுளையை சாப்பிட முயற்சித்து வாருங்கள்.

திராட்சையிலும் வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் வளமான அளவில் உள்ளன. இதுவரை திராட்சையை உட்கொள்ளாமல் இருந்தால், இனிமேல் திராட்சையை அடிக்கடி உணவில் சேர்த்து வாருங்கள். இப்படி உட்கொண்டு வந்தால் மாரடைப்பில் அபாயத்தைத் தடுக்கலாம். அனைத்து காலங்களிலும் விலைக் குறைவில் கிடைக்கக்கூடிய பழம் தான் பப்பாளி. இந்த பப்பாளிப் பழத்தில் பாப்பைன் மற்றும் வைட்டமின் சி போன்றவை உள்ளன. இவை கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதைத் தடுக்க உதவுவதோடு, ப்ளாக்குகளின் உருவாக்கத்தையும் தடுக்கிறது. தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. அதுவும் ஆப்பிளை தினமும் உட்கொண்டு வந்தால் இதய நோயின் அபாயத்தைத் தடுக்கலாம். குறிப்பாக உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து மாரடைப்பின் அபாயத்தைத் தடுக்கலாம்.

The post மாரடைப்பு வராமல் தடுக்க இந்த பழங்களை அடிக்கடி சாப்பிடுங்க! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
75837
கொலஸ்ட்ரால் முதல் கேன்சர் வரை தடுக்கும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு! https://koodal.com/health/2024/09/01/sweet-potato-prevent-from-cholesterol-to-cancer/ Sun, 01 Sep 2024 05:19:31 +0000 https://koodal.com/?p=64622 சர்க்கரை வள்ளிக்கிழங்கை உணவில் தவிர்க்கவே கூடாது என்று உணவு நிபுணர்கள் ஏன் அறிவுறுத்துகிறார்கள் தெரியுமா? இந்த கிழங்கின் 2 தலையாய கடமை என்னென்ன தெரியுமா? சர்க்கரை வள்ளிக்கிழங்கில் A, D, C, வைட்டமின்கள், பொட்டாசியம், மக்னீசியம், இரும்புச்சத்து நிறைந்துள்ளன. இதில் வரப்பிரசாதமாக…

The post கொலஸ்ட்ரால் முதல் கேன்சர் வரை தடுக்கும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
சர்க்கரை வள்ளிக்கிழங்கை உணவில் தவிர்க்கவே கூடாது என்று உணவு நிபுணர்கள் ஏன் அறிவுறுத்துகிறார்கள் தெரியுமா? இந்த கிழங்கின் 2 தலையாய கடமை என்னென்ன தெரியுமா? சர்க்கரை வள்ளிக்கிழங்கில் A, D, C, வைட்டமின்கள், பொட்டாசியம், மக்னீசியம், இரும்புச்சத்து நிறைந்துள்ளன. இதில் வரப்பிரசாதமாக நமக்கு கிடைத்துள்ளது B6 வைட்டமின்தான். இந்த B6 வைட்டமின்கள்தான், செரிமான கோளாறுகளை சீர்செய்கிறது. B-6 வைட்டமினின் பங்களிப்பு அதிகமாக இருப்பதால் இதய நோய் பாதிப்பில் இருந்தும் நம்மை காக்கிறது.

தித்திப்பு கிழங்காக இருந்தாலும், உடல் எடையை குறைப்பதில் இந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு பேருதவி தருகிறது. காரணம், நார்ச்சத்து போன்ற ஸ்டார்ச் எதிர்ப்பு பொருள் இதிலிருப்பதால், அவை உடலில் உறிஞ்சப்படுவதில்லை.. மேலும், கொழுப்பை எரிக்கும் செயல்முறையையும் வேகப்படுத்துகிறது. உடலிலுள்ள குளூக்கோஸ் அளவை அதிகரிக்கும் கிளைசெமிக் இண்டெக்ஸ், இந்த கிழங்கில் குறைவாக உள்ளது.. இது உடலுக்கு ஆற்றலை தருகிறது.. எனவேதான், “சர்க்கரை கொல்லிக்கிழங்கு” என்றும் இதனை சொல்வார்கள். அதனால், சர்க்கரைநோயாளிகள், மருத்துவர்களின் அனுமதியோடு இந்த கிழங்கை சாப்பிடலாம்.

எனினும், 2 பிரதான நோக்கத்திற்காக இந்த கிழங்கை கட்டாயம் உணவில் சேர்த்து கொள்ள சொல்கிறார்கள் நிபுணர்கள்.. அதாவது நம்முடைய உடலில் பழுதடைந்த செல்களை, இந்த கிழங்கு சரிசெய்கிறதாம்.. அத்துடன், புதிய செல்களை சேதாரம் அடைந்துவிடாமலும் பாதுகாக்கிறதாம். இந்த கிழங்கிலுள்ள வைட்டமின் A, மிகச்சிறந்த ஆகிஸிஜனேற்றியாக வினைபுரிவதால், ஆபத்தான புற்றுநோய்களின் செல்களும் அழிக்கப்படுகின்றன. உடலிலுள்ள உள்ளுறுப்புகளில் ஏற்படும் சில புற்றுநோய் செல்களை அழித்து புற்றுநோய் வராமல் தடுக்கிறது. இதனால் நரம்புகளின் ஆரோக்கியமும் பாதுகாக்கப்படுகிறது. இதிலிருக்கும் வைட்டமின் A சிறந்த ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது. இதன் மூலம் அனைத்து வகையான புற்றுநோய்களுக்கும் எதிராக போராட தூண்டுகிறது. இந்த கிழங்கிலிருக்கும் பொட்டாசியம், மாங்கனீசு, மெக்னீசியம், கரோட்டினாய்ட்ஸ், பீட்டா கரோட்டின் போன்றவை வாய் முதல் ஆசனவாய் வரையிலான உறுப்புகளில் ஏற்படும் புற்றுநோய்க்கான செல்களை அழித்து புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

இந்த கிழங்கிலிருக்கும் வைட்டமின் D, நோய் எதிர்ப்பு மண்டலத்தை சீராக்கி, எலும்பு, பற்களுக்கு வலுவை தருகிறது.. ஆரோக்கியமான மனநிலை, வலுவான எலும்புகள், இதயம் போன்றவற்றின் செயல்பாட்டுக்கும் உறுதுணையாக இருப்பதே இந்த D வைட்டமின்தான்.. தைராய்டு சுரப்பி, பற்கள், எலும்புகள், நரம்புகள் மற்றும் தோல் போன்றவற்றின் ஆரோக்கியத்தை காக்கிறது சர்க்கரை வள்ளிக்கிழங்கு. வெள்ளை, மற்றும் சிவப்பு ரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க செய்கிறது இந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு.. புற ஊதா கதிர்களின் பாதிப்பிலிருந்து நம்முடைய சருமத்தை காக்கக்கூடிய பண்புகள் இந்த சர்க்கரை வள்ளிக்கிழங்குக்கு உண்டு.. அதனால்தான், குளிர்காலங்களில் இந்த கிழங்கை வேகவைத்து சாப்பிட சொல்வார்கள். மன அழுத்தம் பிரச்சனையிலிருந்து மீட்டுவரும் சக்தி இந்த சர்க்கரைவள்ளி கிழங்குக்கு உண்டு..

அதேபோல, இந்த கிழங்கிலிருக்கும் வைட்டமின் B, அதிரோஸ்கிளிரோசிஸ் என சொல்லப்படும் பெருந்தமனி தடிப்பு வராமல் தடுக்கிறது. இதனால் மாரடைப்பு ஏற்படும் அபாயமும் குறைகிறது. பெருந்தமனி தடிப்பு என்பது, சிகரெட் பிடித்தல், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், மது அருந்துதல், அதிக எடை ஆகியவை காரணமாக ஏற்படுகிறது. இதற்கெல்லாம் சர்க்கரை வள்ளிக்கிழங்கு சிறந்த மருந்தாகிறது. வேகவைத்த சர்க்கரை வள்ளிக்கிழங்கில், பொட்டாசியம் அதிகமாக இருப்பதால், இதய பாதிப்புகள் வரலாம். ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிகமாக உள்ளதால், சிறுநீரகத்தில் கற்கள் உருவாகலாம். நார்ச்சத்து அதிகமாக உள்ளதால், செரிமான கோளாறு, வயிறு உபாதைகள் வரலாம். வைட்டமின் A அதிகமாக உள்ளதால், தலைமுடி உதிர்தல், வறண்ட சருமம், கல்லீரல் பாதிப்பு வரலாம். எனவே, 700 மைக்ரோ கிராம் பெண்களும், 900 மைக்ரோ கிராம் ஆண்களும், தினசரி அளவாக எடுத்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

The post கொலஸ்ட்ரால் முதல் கேன்சர் வரை தடுக்கும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
64622
சிறுநீரகம் முதல் கல்லீரல் வரை காக்கும் மஞ்சளின் மகிமை! https://koodal.com/health/2024/09/01/the-glory-of-turmeric-that-protects-from-kidney-to-liver/ Sun, 01 Sep 2024 05:18:09 +0000 https://koodal.com/?p=64619 ஒரு ஸ்பூன் மஞ்சள் உணவில் சேர்த்து கொண்டாலே, இதய ஆரோக்கியம் மேம்படுவதாக ஆய்வுகள் சொல்கின்றன.. அப்படியென்ன நன்மை தருகிறது மஞ்சள்? சீன மருத்துவத்திலும், ஆயுர்வேத மருத்துவத்திலும் ஆயிரக்கணக்கான வருடங்களாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பலவிதமான நோய்களை மஞ்சள் குணப்படுத்துகிறது என்றால் அதற்கு காரணம்,…

The post சிறுநீரகம் முதல் கல்லீரல் வரை காக்கும் மஞ்சளின் மகிமை! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
ஒரு ஸ்பூன் மஞ்சள் உணவில் சேர்த்து கொண்டாலே, இதய ஆரோக்கியம் மேம்படுவதாக ஆய்வுகள் சொல்கின்றன.. அப்படியென்ன நன்மை தருகிறது மஞ்சள்? சீன மருத்துவத்திலும், ஆயுர்வேத மருத்துவத்திலும் ஆயிரக்கணக்கான வருடங்களாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பலவிதமான நோய்களை மஞ்சள் குணப்படுத்துகிறது என்றால் அதற்கு காரணம், மஞ்சளில் உள்ள குர்குமின் என்ற பொருள்தான்.. முக்கியமாக இதயத்தை பாதுகாப்பதே, குர்குமின் என்ற பொருள்தானாம். இந்த குர்குமினில் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் பண்புகள் நிறைந்துள்ளன.. எனவே, ரத்தத்தை மெலிக்கவும், கொழுப்பை குறைக்கவும், தமனிகள் குறுகுவதை தடுக்கவும் இந்த குர்குமின்தான் மூலக்காரணமாக உதவுவதாக ஆய்வுகள் சொல்கின்றன. எனவே, தொடர்ந்து மஞ்சளை உணவில் சேர்த்து கொள்பவர்களுக்கு இதய பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு குறைகிறதாம்.

எந்தவிதமான புற்றுநோய்களையும் நம்மை நெருங்கவிடாமல் செய்துவிடும் இந்த மஞ்சள்.. புற்றுநோய் கட்டிகளுக்கு எதிராக செயல்படுவது இந்த குர்குமின்.. புற்றுநோய் சிகிச்சையில் கதிர்வீச்சு, கீமோதெரபியுடன் இணைந்து பயன்படுத்துவது பற்றி ஆய்வாளர்கள் இன்னமும் இதுகுறித்து ஆய்வுகளை நடத்தி வருகிறார்கள்.. புற்றுநோய் மட்டுமல்லாமல், இந்த மஞ்சளை பற்றி 7 ஆயிரம் விஞ்ஞான ஆய்வுகள் இருக்கின்றனவாம். வெறுமனே ஒரு கிளாஸ் டம்ளர் வெந்நீரில், அரை ஸ்பூன் மஞ்சள் தூள் கலந்து அப்படியே வைத்துவிட வேண்டும். 5 நிமிடம் கழித்து, அந்த தண்ணீரை வடிகட்டி, மீண்டும் கொதிக்கவிட்டு, தேன், எலுமிச்சை சாறு, மிளகு பொடி சேர்த்து குடிக்க வேண்டும். இந்த ஒரு பானம் மட்டுமே உடலிலுள்ள பல கோளாறுகளை தீர்க்கிறதாம். அல்லது மஞ்சள், இஞ்சி, கருப்பு மிளகு இந்த மூன்றையும் சேர்த்து டீ தயாரித்து குடித்தாலே போதும்.. நம்முடைய ஆரோக்கியம் தழைக்கும் என்கிறார்கள்..

புற்று நோய், இருதய நோய் தாக்குதல், மனச்சோர்வு, மறதி, மனநிலை சீராய் இருத்தல், மன அழுத்தம், மூட்டுவலி, டைப் 2 நீரிழிவு போன்ற பிரச்சனைகளை கட்டுக்குள் கொண்டுவருகிறது இந்த மஞ்சள். மஞ்சளின் சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணங்கள், நம்முடைய உடல் எடையை குறைக்க பேருதவி செய்வதாக ஆய்வுகள் கூறுகின்றன. பித்தத்தையும், உப்புசத்தையும் மஞ்சள் குறைக்கிறது.. காயங்களையும் வலிகளையும் போக்கக்கூடியது மஞ்சள்.. குறிப்பாக, கீல்வாதம் மற்றும் முடக்கு வாதம் சிகிச்சையின் ஒரு பகுதியாகவே இந்த மஞ்சள் பயன்படுத்தப்படுகிறது.

கல்லீரலுக்கும், சிறுநீரகங்களுக்கும் பாதுகாப்பு கவசமாய் உள்ளது.. உடலுள்ள நச்சுக்களை வெளியேறி, கொழுப்பையும் குறைக்கின்றது. முதுமையை தள்ளி நிறுத்தும் சக்தி கொண்டது மஞ்சள். அதிலும் பச்சை மஞ்சளில் குர்குமின் நிறையவே உள்ளது, பித்த உற்பத்தியை தூண்டி, ஜீரணத்துக்கும் உதவுகிறது.. இத்தனை நன்மைகள் இருந்தாலும், மஞ்சளை அதிகம் சேர்த்துக் கொள்ளக்கூடாது. காரணம், செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். ரத்த மெலிப்பு மருந்துகள் எடுத்துகொள்பவர்கள், மஞ்சளை அதிகம் எடுத்துக்கொள்ளக்கூடாது.. அனீமியா பாதிப்பில் உள்ளவர்களுக்கு உடலில் இரும்புச்சத்து குறைவாக இருக்கும்.. மஞ்சளை அதிகம் எடுத்துக்கொள்ளும்போது, இரும்புச்சத்து உலரதுவங்கிவிடும்.. இதன் காரணமாகவும், உடலில் சில பிரச்சனைகள் வரலாம். அதேபோல, ஆபரேஷன் செய்து கொள்பவர்கள் சிகிச்சைக்கு 2 வாரங்களுக்கு முன்பிருந்தே மஞ்சளை குறைப்பது அல்லது தவிர்ப்பது நல்லது.. ஏனென்றால், மஞ்சள் சிகிச்சையின்போது ரத்த உறைதலை தாமதப்படுத்தலாம். அதேபோல, ரத்த உறைதல் அல்லது ரத்த சர்க்கரை அளவையும் பாதிக்கலாம் என்பதால், குறைவாகவே பயன்படுத்த வேண்டும்.. கர்ப்பிணிகளும், பாலூட்டும் தாய்மார்களும், டாக்டரின் ஆலோசனை பெறாமல், மஞ்சள் சப்ளிமெண்ட்ஸ் சாப்பிடக்கூடாது.

The post சிறுநீரகம் முதல் கல்லீரல் வரை காக்கும் மஞ்சளின் மகிமை! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
64619
தினமும் மீன் சாப்பிடுவதால் நடக்கும் அற்புதம்! https://koodal.com/health/2024/05/28/eating-fish-every-day-can-do-wonders/ Tue, 28 May 2024 10:58:22 +0000 https://koodal.com/?p=56701 அனைத்து அசைவ உணவுகளைவிட, கடல் உணவுகளை சாப்பிடும்படி, நிபுணர்கள் வலியுறுத்துவது ஏன் தெரியுமா? மீனை தினமும் சாப்பிட்டால் கிடைக்கக்கூடிய பலன்கள் என்னென்ன தெரியுமா? மற்ற அசைவு உணவுகளில் இல்லாத அளவுக்கு, கடல் மீன்களில் சற்று கூடுதலாகவே சத்துக்கள் உள்ளதாம்.. ஒவ்வொரு வகையான…

The post தினமும் மீன் சாப்பிடுவதால் நடக்கும் அற்புதம்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
அனைத்து அசைவ உணவுகளைவிட, கடல் உணவுகளை சாப்பிடும்படி, நிபுணர்கள் வலியுறுத்துவது ஏன் தெரியுமா? மீனை தினமும் சாப்பிட்டால் கிடைக்கக்கூடிய பலன்கள் என்னென்ன தெரியுமா? மற்ற அசைவு உணவுகளில் இல்லாத அளவுக்கு, கடல் மீன்களில் சற்று கூடுதலாகவே சத்துக்கள் உள்ளதாம்.. ஒவ்வொரு வகையான மீன்களிலும், ஒவ்வொரு சத்துக்கள் இருக்கின்றன..

மீன்களை தவறாமல் சாப்பிடுபவர்களுக்கு, கண்பார்வை குறைபாடு, தைராய்டு பிரச்சனைகள், வயதான பெண்களுக்கு ஏற்படும் இதயநோய் அபாயங்கள் குறைகின்றன.. நரம்புத்தளர்ச்சி நோயும் நீங்குகிறது. மீன் உணவு சாப்பிட்டால் மன அழுத்த நோய் வராமல் தடுக்கலாம் என்று ஆய்வுகள் சொல்கின்றன.. புரோட்டின், விட்டமின், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, அயோடின், மெக்னீசியம் என பல சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.. சிலவகை மீன்களில் அதிகளவில் ஒமேகா 3 நிறைந்துள்ளதால், இதனை சாப்பிடுமாறு மருத்துவர்களே பரிந்துரைக்கிறார்கள்.. இந்த ஒமேகா 3 கொழுப்பு அமிலமானது, உடல் எடையை சீராக வைத்து கொள்ள உதவுகிறது. இந்த கொழுப்பு அமிலங்கள்தான், இருதயம், மூளை மற்றும் கண்களின் ஆரோக்கியத்திற்கு பேருதவி புரிகிறது.

ஒமேகா-3 அமிலத்தை அதிகமாக உட்கொள்ளும்போது, மன அழுத்தம், மன இறுக்கம் போன்றவற்றினால் ஏற்படும் பாதிப்புகள் குறைகிறதாம். அதுமட்டுமல்ல, கண், காது சம்பந்தமான பிரச்னைகளுக்கு வழங்கப்படும் மருந்துகளில் ஒமேகா 3 உள்ளது.. தினமும் மீன் சாப்பிடுவதனால் ரத்தக்குழாய் மற்றும் இதயத்தில் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் தவிர்க்கப்படுகிறதாம்.. வைட்டமின் D சத்துக்களும் நிறைவாக கிடைக்கிறது. எலும்புகளும், பற்களும் வலுவாக வைத்து கொள்ள முடியும்.. கெட்ட கொழுப்புகளை குறைப்பதுடன், கெட்ட கொழுப்புக்கள் உடலில் சேர்வதையும் இந்த மீன்கள் தடுக்கின்றன.

மீன்களை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு, சர்க்கரை நோய், முடக்குவாதம் போன்ற நோய்களின் தாக்கம் மிகக்குறைவாகவே காணப்படுகிறது.. உணவில் மீன்களை அதிகமாக சேர்த்து வந்தால், முடக்குவாதத்தில் ஏற்படும் வீக்கத்தையும், அதன் வலியையும் வெகுவாக குறைக்கலாம்.. சருமத்துக்கும் கசவமாக திகழ்கிறது. தலைமுடி வளர்ச்சி பெற வேண்டுமானால், சால்மன், மத்தி மற்றும் கானாங்கெளுத்தி போன்ற மீன்களை தேர்ந்தெடுக்கலாம்.. பொதுவாக, 8 வார காலத்தில், மீன்களை மட்டுமே சாப்பிட்டவர்கள் எடை குறைந்திருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன.. எனவே, எடை குறைக்க வேண்டுமென்று நினைப்பவர்கள், ஒமேகா 3 உட்பட புரோட்டீன் அதிகமுள்ள சால்மன், டிரௌட், மத்தி, டுனா மற்றும் கானாங்கெளுத்தி எனும் அயிலை, முரல் மீன், சங்கரா மீன், மத்தி, சாளை, நெத்திலி, சூரை மீன்களை தேர்ந்தெடுக்கலாம். முள் அதிகமாக இருப்பதால் இதை நிறைய பேர் தவிர்த்துவிடுவார்கள். ஆனால், அதிக ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது இந்த மீன்கள்தான். மொத்தத்தில், மீன்கள் பல முக்கிய ஊட்டச்சத்துக்களின் ஒரே ஒரு மூலமாக இருப்பதால்தான், மனித ஆயுளை கூட்டுகிறது.

The post தினமும் மீன் சாப்பிடுவதால் நடக்கும் அற்புதம்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
56701
முந்திரி பழங்களை சாப்பிடுவதால் என்னென்ன பயன்கள் கிடைக்கின்றன? https://koodal.com/health/2024/05/28/the-hearts-companion-cashews/ Tue, 28 May 2024 10:56:57 +0000 https://koodal.com/?p=56698 முந்திரிக்கொட்டைகள் அளவுக்கு முந்திரிப்பழங்கள் நன்மை தருகிறதா? முந்திரி பழங்களை சாப்பிடுவதால் என்னென்ன பயன்கள் கிடைக்கின்றன? முந்திரிப்பருப்புகளை பொறுத்தவரை, புரோட்டீன்கள், வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து, ஆக்ஸிஜனேற்ற சத்துக்கள் உள்ளன.. பீட்டா கரோட்டீன், டானின் என்று சொல்லக்கூடிய ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் சத்துக்களும், ஆரோக்கியமான கொழுப்புக்களும்…

The post முந்திரி பழங்களை சாப்பிடுவதால் என்னென்ன பயன்கள் கிடைக்கின்றன? appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
முந்திரிக்கொட்டைகள் அளவுக்கு முந்திரிப்பழங்கள் நன்மை தருகிறதா? முந்திரி பழங்களை சாப்பிடுவதால் என்னென்ன பயன்கள் கிடைக்கின்றன? முந்திரிப்பருப்புகளை பொறுத்தவரை, புரோட்டீன்கள், வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து, ஆக்ஸிஜனேற்ற சத்துக்கள் உள்ளன.. பீட்டா கரோட்டீன், டானின் என்று சொல்லக்கூடிய ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் சத்துக்களும், ஆரோக்கியமான கொழுப்புக்களும் அடங்கியிருப்பதால்தான், இதனை “இதயத்தின் தோழன்” என்கிறார்கள்.

முந்திரி பருப்பை, சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம்.. குறிப்பாக, டைப்-2 நீரிழிவு நோயாளிகள் முந்திரி பருப்பை சாப்பிட்டால் நல்லது என்கிறார்கள்.. இதனால், ரத்த குளுக்கோஸின் அளவு குறைகிறதாம்.. பச்சை முந்திரியைவிட, ஊறவைத்த முந்திரி சாப்பிட்டால், ஜீரணமாகும். ஆனால், முந்திரி பழங்களை சாப்பிடலாமா? முந்திரி பருப்புடன் ஒப்பிடும்போது, இந்த பழத்தில், புரோட்டீன், பீட்டா-கரோட்டீன், டானின் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட், நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த பழத்தில், புரோட்டீன், பீட்டா-கரோட்டீன், டானின் என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட், நார்ச்சத்துக்கள் நிறைய அடங்கியிருக்கின்றன..

வழக்கமாக வைட்டமின் சி நிறைந்த பழங்கள் என்றால், ஆரஞ்சு, எலுமிச்சையை சொல்வோம்.. ஆனால், இவைகளைவிட, 5 மடங்கு அதிகமாக ஒரு முந்திரி பழத்தில் வைட்டமின் சி நிரம்பியிருக்கிறாம். இந்த பழங்களிலுள்ள ப்ரோஆந்தோசயனின்கள் என்ற சேர்மமானது, பெருங்குடல் புற்றுநோயை தடுப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது.. நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க செய்து, உடலில் எந்த நோயையும் அண்டவிடாமல் தடுக்கிறது. இதனால், நோயெதிர்ப்பு மண்டலமும் வலுப்படுகிறது.. அனீமியா பிரச்சனை இருப்பவர்கள், இரும்புச்சத்து நிறைந்த இந்த முந்திரி பழங்களை சாப்பிடலாம்.. இதனால், ரத்த சோகை வெகுவாக குறையும். ஆனால், இந்த பழத்தை மரத்திலிருந்து பறித்த 24 மணிநேரத்திற்குள் சாப்பிட்டுவிட வேண்டுமாம்.. இல்லாவிட்டால் அழுகிவிடும்.

பெரும்பாலும் இந்த பழத்தை அப்படியே சாப்பிட முடியாது.. வேக வைத்து சாப்பிடலாம் அல்லது உப்பு நீரில் ஊற வைத்து சாப்பிட்டால், தொண்டையில் கரகரப்பு ஏற்படாது. முந்திரிப்பழத்தை வைத்து நிறைய சமையல் செய்வார்கள்.. முந்திரிப்பழத்தில் சட்னி செய்வார்கள்.. ஜாம் செய்வார்கள்.. ஆஸ்துமா பிரச்சனைக்கும் இந்த பழம் நிவாரணத்தை தருகிறது.. ஈறுகளில் ரத்தக் கசிவுகள், பற்களின் பிரச்சனைகளை சரிசெய்து நகங்களை ஆரோக்கியமானாக வைத்திருக்க உதவுகிறது. இப்பழத்தில் காணப்படும் அதிகளவு பொட்டாசியம் உயர் ரத்த அழுத்தத்தை சீராக்கி இதயத்தை மாரடைப்பு உள்ளிட்டவைகளிலிருந்து பாதுகாக்கிறது. எனவே இதய நலத்தை பேண விரும்புபவர்கள் இப்பழத்தினை உண்ணலாம். கல்லீரல் உட்பட உடலின் பாகங்களிலுள்ள நச்சுக்களை நீக்கி, அவைகளை சுத்தப்படுத்துவதில் முந்திரி பழங்களுக்கு பெரும் பங்கு உண்டு.. உடலிலுள்ள கொழுப்பை எரிக்கும் சக்தி இந்த பழத்துக்கு உண்டு.. உடல் எடை குறைய நினைப்பவர்கள், இந்த பழத்தை சாப்பிட்டுவிட்டு, அதற்கு பிறகு, உடற்பயிற்சி செய்யும்போது அதிகளவு கொழுப்பானது எரிக்கப்படுகிறதாம்..

ரத்த அழுத்தம் பிரச்சனை இருப்பவர்களுக்கு இந்த பழம் பேருதவி செய்கிறது.. இதன்மூலம், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற அபாய நோய்களும் தடுக்கப்படுகின்றன. இந்த முந்திரி பழத்திலிருந்து சாறு எடுத்து, தலைமுடிக்கு பயன்படுத்தினால், பொடுகு, அரிப்பு பிரச்சனைகள் நீங்கும்.. வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிஜென்டுகள் இரண்டுமே இந்த முந்திரி பழத்தில் உள்ளதால், சருமத்துக்கும், தலைமுடிக்கும் மிகச்சிறந்த பாதுகாப்பை தருகிறது.. அதனால்தான், முகத்துக்கு பயன்படத்தப்படும் லோஷன்கள், கிரீம்களிலும், தலைமுடிக்கு பயன்படுத்தப்படும் ஷாம்புகளிலும் இந்த சாறு மூலப் பொருட்களாக பயன்படுத்தப்படுகிறது.

The post முந்திரி பழங்களை சாப்பிடுவதால் என்னென்ன பயன்கள் கிடைக்கின்றன? appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
56698
உடல்நலக் குறிப்புகள் https://koodal.com/health/2022/08/03/health-tips/ Wed, 03 Aug 2022 12:31:05 +0000 https://koodal.com/?p=10165 * கையில் மருதாணி நிலைத்து நிற்க.. மருதாணியைப் பூசிய பிறகு மறுநாள் விரல்களில் இருந்து அதை நீக்கி விட்டு, மறுபடியும் விரலில் தேங்காய் எண்ணெயைத் தேய்த்து மீண்டும் அதில் மருதாணியைப் பூச வேண்டும். * முகத்தில் அல்லது உடம்பில் கருமையாக தேமல்…

The post உடல்நலக் குறிப்புகள் appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
* கையில் மருதாணி நிலைத்து நிற்க..

மருதாணியைப் பூசிய பிறகு மறுநாள் விரல்களில் இருந்து அதை நீக்கி விட்டு, மறுபடியும் விரலில் தேங்காய் எண்ணெயைத் தேய்த்து மீண்டும் அதில் மருதாணியைப் பூச வேண்டும்.

* முகத்தில் அல்லது உடம்பில் கருமையாக தேமல் படர்ந்தால் மருதோன்றி இலையை அரைத்து வைத்துக் கொண்டு, அதனுடன் சின்னத்துண்டு சவுக்காரம் சேர்த்துப் பிசைந்து தொடர்ந்து பூசிக் கொண்டு வந்தால் கறுந்தேமல் நிறம் மாறி விடும்.

* உடம்பில் பருமன் ஏற முக்கிய காரணம் இரவுச்சாப்பாடு தான். இரவுச் சாப்பாட்டை லேசாக்கி கொள்ளுங்கள். அல்லது விலக்கிக் கொள்ளுங்கள். கொஞ்சம் கொஞ்மாக உடல் எடை குறைந்து வருவீர்கள்.

* உங்கள் கை நகம் பார்க்கச் சிறிதாவும், விகாரமாகவும் இருந்தால் மூன்று நான்கு நாள் அவற்றின் மீது ஸ்பிரிட் பூசி வரவும், அவை அழகாகவும் பெரிதாகவும் வளரும்.

மருத்துவக் குறிப்புகள்

* எலுமிச்சம் பழத்தோலைக் காயவைத்து இடித்து உப்பு சேர்த்து வைத்துக் கொள்ளணும். தினசரி அப்பொடியுடன் நல்லெண்ணெய் சேர்த்து பல்துலக்கி வரணும். பல் பளபளவென்று ஆவதோடு வாய் நாற்றமும் நீங்கி விடும்.

* சுக்கையும், கல் உப்பையும் சம அளவு பொடி செய்து காலை இரவு உணவோடு கலந்து கொண்டால் வாந்தி, சோர்வு, ஆகியவை நீங்கும். நல்ல பசி உண்டாகும்.

* தினசரி உணவோடு வெங்காயத்தைச் சேர்த்துக் கொள்வது நல்லது. குழந்தைகளுக்கு தினமும் பச்சை வெங்காயத்தை கொடுத்து வந்தால் ஜலதோஷம், காய்ச்சல் வராது.

The post உடல்நலக் குறிப்புகள் appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
10165
வலிகளை அகற்றும் உணவு முறை https://koodal.com/health/food-guide/2022/04/12/homemade-remedies-herbs-food-for-natural-pain-relief/ Tue, 12 Apr 2022 17:58:57 +0000 https://koodal.com/?p=660 மூட்டு வலி நீங்க (முழங்கை, முழங்கால், கணுக்கால்) முடக்கத்தான் கீரையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மூட்டுவலி குணமாகும். ஆரம்பம் என்றால் உடனே குணம் கிடைக்கும். நாள்பட்ட வலி என்றால் கண்டிப்பாக 40 நாட்கள் சாப்பிட வேண்டும். வலியிலிருந்து விடுபடுவது…

The post வலிகளை அகற்றும் உணவு முறை appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
மூட்டு வலி நீங்க

(முழங்கை, முழங்கால், கணுக்கால்)
முடக்கத்தான் கீரையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மூட்டுவலி குணமாகும். ஆரம்பம் என்றால் உடனே குணம் கிடைக்கும். நாள்பட்ட வலி என்றால் கண்டிப்பாக 40 நாட்கள் சாப்பிட வேண்டும். வலியிலிருந்து விடுபடுவது உறுதி.

சாப்பிடும் விதம்

முடக்கத்தான் கீரையில் உள்ள காய், இலைகளைப் பறித்து நன்கு சுத்தம் செய்து, கழுவி அரைத்து வைத்துக் கொள்ளலாம். பிரிஜ்ஜில் வைத்துக் கொண்டு தினமும் காலையில் வெறும் வயிற்றில் 1 தேக்கரண்டி சாப்பிடலாம்.

சுத்தம் செய்தபின் தண்ணீர் வடியும் வரை நிழலில் விரித்து காய வைத்து, மிக்ஸியில் நைஸாக அடித்து சலித்துக் கொள்ளவும். இதை பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளவும். தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் குணமாகும்.
நன்றாக குணமான பிறகு, வாரம் 3 முறை முடக்கத்தான் கீரையை உட்கொண்டால் மீண்டும் வலி வராது.

தோசை மாவிலும் முடக்கத்தான் கீரையைக் கலந்து தோசை செய்து சாப்பிடலாம். நம் முன்னோர்கள் வாரம் 2 அல்லது 3 நாட்கள் முடக்கத்தான் கீரை தோசை சாப்பிடுவார்கள். நாமும் அதைக் கடைப்பிடித்தால் நமக்கு மூட்டு வலிகள் வராது.


குறுக்கு வலி நீங்க

நல்லெண்ணெய்யை வலிக்கும் இடத்தில் தேய்த்து விட்டால் குறுக்கு வலி குணமாகும்.

யோகாசனங்களில் தனுராசனம் என்ற ஆசனம் இருக்கிறது. இந்த தனுராசனம் செய்யும் பயிற்சியை பழகிக் கொள்ள வேண்டும். இது குறுக்கு வலியை குணப்படுத்தும்.

நல்லெண்ணெய்யை காய வைத்து, சூடேறியதும் இதில் 10 பல் பூண்டுகளைப் போட்டு, பூண்டுகள் சிவந்ததும் இறக்கி ஆற வைத்துக் கொள்ளவும். இந்த எண்ணெய்யை வலிக்கின்ற இடத்தில் நன்றாக தேய்த்துவிட வேண்டும். 3 மணி நேரம் கழித்து, வெந்நீரில் குளிக்க வேண்டும். இவ்விதம் 15 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால் குறுக்கு வலி குணமாகும்.

சாப்பிடும் விதம்

தினமும் காலையில் வெறும் வயிற்றில் 2 அல்லது 3 பூண்டுகளை சாப்பிட்டு வந்தால் குணமாகும்.

எலுமிச்சைச் சாற்றில் சிறிது உப்பு போட்டு தினமும் குடித்து வந்தால் குணமாகும்.

பச்சை உருளைக்கிழங்கை சாப்பிட்டு வர வேண்டும். வலிக்கும் இடத்தில் பச்சை உருளைக் கிழங்கை அரைத்துப் பற்று போடவேண்டும்.

குறுக்கு வலி அதிகமாக இருக்கும் நேரத்தில் கொழுப்புச்சத்துள்ள உணவுகளை தவிர்த்து, பச்சைக் காய்கறிகள், சாலட் சாப்பிடலாம். எண்ணெய் சேர்க்காமல் வேக வைத்த காய்கறிகளையும் சாப்பிடலாம்.


முழங்கால் வலி நீங்க

நல்லெண்ணெய்யை வலிக்கும் இடத்தில் தேய்த்து விட்டால் முழங்கால் வலி குணமாகும்.

சாப்பிடும் விதம்

பச்சை உருளைக்கிழங்கை 4 விரல்கள் அளவு சாப்பிடலாம்.

ஒரு சிறிய உருளைக்கிழங்கை கழுவி மிக்ஸியில் போட்டு சாறு எடுத்துக் குடிக்கலாம்.

ஒரு உருளைக்கிழங்கை சாலட் செய்து சாப்பிடலாம்.

லச்சக்கொட்டைக் கீரையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் மூட்டுவலி, குறுக்கு வலி குணமாகும்.
இந்தக்கீரையை கழுவி, நறுக்கி, பருப்பு போட்டு பொரியல் செய்து சாப்பிடலாம். பொடியாக நறுக்கி கொத்துக்கறியுடன் போட்டு சமைத்துச் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

மூட்டு வலிக்கு முட்டைக்கோஸ் சாற்றை அருந்தலாம். வலி ஏற்பட்டுள்ள மூட்டுக்களில் புதிய முட்டைக்கோஸ் இலைகளை அரைத்துப் பற்றுப் போடலாம்.


தலைவலி நீங்க

பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வைத்து அரை தேக்கரண்டி விக்ஸ் அல்லது அமிர்தாஞ்சன் போட்டு, பெட்ஷீட்டால் மூடி ஆவி பிடித்தால் தலைவலி பறந்துவிடும்.

சாப்பிடும் விதம்

அரை டம்ளர் வெந்நீரில், அரை எலுமிச்சம்பழம் பிழிந்து 2 கல் உப்பு போட்டு குடித்தால் தலைவலி குணமாகும்.
காய்ச்சலும் தலைவலியும் சேர்த்து வந்தால் கடுகை அரைத்து உள்ளங்காலில் பற்றுப் போட்டால் தலைவலி, காய்ச்சல் நீங்கி விடும்.

நீண்ட நாட்களாக ஒற்றைத் தலைவலி தொல்லை இருந்தால் தினமும் 1 அவுன்ஸ் திராட்சை பழரசம் (50 மில்லி) குடித்து வந்தால் பலன் கிடைக்கும்.

நொச்சி இலையை வதக்கி அதில் சிறிதளவு உப்பைத் தூவி இளஞ்சூட்டில் நெற்றியில் பற்றுப் போட்டால் குணமாகும்.


காலில் வீக்கம் நீங்க

நல்லெண்ணெய்யை வலிக்கும் இடத்தில் தேய்த்து விட்டால் காலில் வீக்கம் குணமாகும்.

சாப்பிடும் விதம்

தூதுவளை இலைகளையும், நற்சுங்கள் இலைகளையும் எடுத்து, சிறிது தண்ணீர் விட்டு அரைத்து அரைத்த விழுதை எடுத்து சுண்டக்காய் அளவில் மாத்திரை போல் செய்து நிழலில் உலர்த்தி ஒரு பாட்டிலில் சேமித்து வைத்துக் கொள்ளவும். 3 மாத்திரைகளை 1 டம்ளர் பசும்பாலில் கரைத்து, இத்துடன் கற்கண்டு சேர்த்து 1 வாரம் வரை 2 வேளைகள் குடிக்க வேண்டும். இவ்விதம் செய்தால் கால் வீக்கம் குணமாகும்.

The post வலிகளை அகற்றும் உணவு முறை appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
660
கோடைகாலத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் சிறுநீர் பிரச்சினைகள்! https://koodal.com/health/food-guide/2021/12/28/urinary-infections-and-crystals-during-summer/ Tue, 28 Dec 2021 22:21:12 +0000 https://koodal.com/?p=108 கோடை காலத்தில் சிறுநீர் எரிச்சல் அல்லது ‘நீர்க் கடுப்பு’ மற்றும் சிறுநீரகக் கல்லால் அதிகம் பேர் பாதிக்கப்படுகிறார்கள். கோடையில் தேவையான அளவில் தண்ணீர் குடிக்காமல் இருப்போமானால் ஏற்கனவே நம் உடலில் இருக்கும் தண்ணீர் வியர்வையாகி அதிக அளவில் வெளியேறும்போது சிறு நீர்…

The post கோடைகாலத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் சிறுநீர் பிரச்சினைகள்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
கோடை காலத்தில் சிறுநீர் எரிச்சல் அல்லது ‘நீர்க் கடுப்பு’ மற்றும் சிறுநீரகக் கல்லால் அதிகம் பேர் பாதிக்கப்படுகிறார்கள்.

கோடையில் தேவையான அளவில் தண்ணீர் குடிக்காமல் இருப்போமானால் ஏற்கனவே நம் உடலில் இருக்கும் தண்ணீர் வியர்வையாகி அதிக அளவில் வெளியேறும்போது சிறு நீர் கழிக்கும் அளவு குறையும்.

கோடைகாலத்தில் மிக அதிக நேரம் வெயிலில் வேலை செய்பவர்கள் சரியான அளவு நீர்ச் சத்து ஆகாரங்களை குடிக்காமல் இருப்பதாலும் சிறுநீர் வெளியேறும் அளவு குறையும். இதனால் சிறுநீர் சற்று அடர்த்தி அதிகமாகி சற்று அடர் மஞ்சள் நிறமாக வெளியேறும் போது எரிச்சல் வலி, கடுப்பு ஏற்படலாம்.

கோடைகாலங்களில் ரயில் மூலமாகவோ, பேருந்து மூலமாகவோ நெடுந்தூரப் பயணம் மேற்கொள்கிறார்கள். இந்த மாதிரியான நேரங்களில் நாம் நெடுநேரம் சிறுநீர் கழிக்காமல் அடக்கி வைப்பதன் மூலம் சிறுநீர் கடுப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

இந்த மாதிரியான நேரங்களில் சிறுநீர் பாதையிலுள்ள கிருமிகள் பன்மடங்காகப் பெருக வாய்ப்புள்ளது. இது ஆண்களைவிட பெண்களுக்கு அதிக அளவில் வருகிறது. பெரும்பாலும் ‘ஈகோலை’ என்னும் பாக்ட்டீரியாவால் இந்த ‘நீர் கடுப்பு நோய்’ வருகிறது.

நோய்க்கான அறிகுறிகள்:

அடிக்கடி சிறுநீர் கழிக்கலாம் போல் உணர்வு வரும். அப்படி முயற்சி செய்யும்போது எரிச்சல் அல்லது கடுப்புடன் சிறுநீர் வெளியேறும். லேசாக அடிவயிற்றில் வலியும் ஏற்படும்.

குழந்தைகள் தன்னை அறியாமல் அடிக்கடி சிறுநீர் கழிப்பார்கள். நோய் அதிகமாகும்போது சிலருக்கு பயங்கர குளிருடன் கூடிய காய்ச்சல் ஏற்படும்.

கோடைகாலத்தில் நீர் சரியாக பருகாத காரணத்தால் சிறுநீர் வெளியேறும் அளவு குறைவாகும். இதனால் சிறுநீரகத்தில் செயல்பாட்டால் உப்பு கலந்த கழிவுப் பொருட்கள் முழுமையாக வெளியேறாமல் கொஞ்சம், கொஞ்சமாக படிந்து அது கல்லாக உருவாகும் வாய்ப்புகள் அதிகம்.

இந்த பிரச்சினை வராமல் தடுப்பதற்கு சிறந்த வழி கோடை காலத்தில் தேவையான அளவு நீர்ச் சத்துள்ள பானங்களை குடிப்பதுதான். அப்பொழுதுதான் சிறுநீர் சரியான அளவில் வெளியேறி சிறுநீர் பாதையில் உள்ள கிருமிகளும், சிறுநீரில் உள்ள உப்புகளும் வெளியேற வாய்ப்புகள் ஏற்படும்.

மேலும் சுற்றுலா மற்றும் நெடுந்தூர பயணம் மேற்கொள்வோர் சிறுநீரை அடக்கி வைக்காமல் அவ்வப்போது கழிப்பது நல்லது.

உணவுகள்:

இளநீர், மோர், பழச்சாறு மற்றும் நீர்ச்சத்துள்ள ஆகாரங்களை போதிய அளவு எடுத்துக்கொள்ள வேண்டும்.

கர்ப்பிணிப் பெண்கள் மற்ற காலங்களை விட நிறைய தண்ணீர் குடிப்பது நல்லது.

கோடை காலத்தில் வெயிலில் விளையாடச் சென்றுவிடும் குழந்தைகளை அழைத்து அடிக்கடி நிறைய நீர்ச் சத்து ஆகாரங்களை கொடுப்பதுடன் குழந்தைகளை அடிக்கடி சிறுநீர் கழிக்கவும் அறிவுறுத்த வேண்டும்.

‘நீர்க் கடுப்பு’ அதிகமானாலோ அல்லது அடிவயிற்றில் வலி அதிகமானாலோ மருத்துவரை அணுகி அவரது உதவியோடு எந்த வகை கிருமியால் இந்த ‘நீர்க் கடுப்பு’ நோய் ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிந்து அதை அழிப்பதற்கு தகுந்த மாத்திரைகளை உட்கொள்வது நல்லது.

மருந்துகள்:

ஹோமியோபதியில் ஆபிஸ் மெல், லைகோபோடியம், காந்தாரிஸ், பெர்பெரிஸ் வல்காரிஸ், ஹய்ட்ரஜ்யா போன்ற மருந்துகள் சிறுநீர்க் கடுப்பிற்கும், சிறுநீரகக் கற்கள் தோன்றுவதை தடுப்பதற்கும் மிகச் சிறந்தவை.

The post கோடைகாலத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் சிறுநீர் பிரச்சினைகள்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
108