இந்தியா Archives - கூடல் | Tamil Koodal https://koodal.com/tamil/news/india/ Latest Tamil News and Tamil Movie Reviews Online in Tamil Entertainment Website - Koodal.com Thu, 15 May 2025 10:31:05 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://i0.wp.com/koodal.com/wp-content/uploads/2021/12/cropped-koodal-logo.jpg?fit=32%2C32&ssl=1 இந்தியா Archives - கூடல் | Tamil Koodal https://koodal.com/tamil/news/india/ 32 32 201197430 பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை சர்வதேச அணுசக்தி முகமை கண்காணிக்க வேண்டும்: ராஜ்நாத் சிங்! https://koodal.com/news/2025/05/15/international-atomic-energy-agency-should-monitor-pakistans-nuclear-weapons-rajnath-singh/ Thu, 15 May 2025 10:31:05 +0000 https://koodal.com/?p=85715 பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) கண்காணிப்பின் கீழ் கொண்டுவர வேண்டும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார். ஜம்மு காஷ்மீரின் பகல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப்…

The post பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை சர்வதேச அணுசக்தி முகமை கண்காணிக்க வேண்டும்: ராஜ்நாத் சிங்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) கண்காணிப்பின் கீழ் கொண்டுவர வேண்டும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார்.

ஜம்மு காஷ்மீரின் பகல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டதை அடுத்து, ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற ராணுவ நடவடிக்கையை இந்தியா தொடங்கியது. இந்த நடவடிக்கையில் இந்திய ராணுவம் வெற்றி பெற்றதை அடுத்து, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று ஸ்ரீநகருக்குச் சென்றார். பகல்காம் தாக்குதல் மற்றும் அதற்கு எதிரான ராணுவ நடவடிக்கைக்குப் பிறகு முதல்முறையாக ஸ்ரீநகர் சென்ற ராஜ்நாத் சிங், ஸ்ரீநகரின் பதாமி பாக் கண்டோன்மென்ட்டில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஜம்மு & காஷ்மீர் பகுதியில் வீசப்பட்ட பாகிஸ்தான் குண்டுகளை அமைச்சர் ஆய்வு செய்தார். சில சிதைவுகளையும் அவர் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்நாத் சிங் கூறியதாவது:-

பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாதிகளை எதிர்த்துப் போராடிய துணிச்சலான வீரர்களின் உச்சபட்ச தியாகத்துக்கு முதலில் நான் தலைவணங்க விரும்புகிறேன். அவர்களின் நினைவுகளுக்கு நான் மரியாதை செலுத்துகிறேன். பகல்காமில் கொல்லப்பட்ட அப்பாவி பொதுமக்களுக்கும் நான் மரியாதை செலுத்துகிறேன். காயமடைந்த வீரர்களின் துணிச்சலுக்கும் நான் வணக்கம் செலுத்துகிறேன். மேலும், அவர்கள் விரைவில் குணமடைய கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன்.

இதுபோன்ற பாதகமான சூழ்நிலைகளுக்கு மத்தியில் உங்களுடன் இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன். பிரதமர் நரேந்திர மோடியின் திறமையான தலைமை மற்றும் வழிகாட்டுதலின் கீழ், ஆபரேஷன் சிந்தூரின் போது நீங்கள் அனைவரும் செய்தவற்றிற்காக முழு தேசமும் பெருமை கொள்கிறது. உங்கள் பாதுகாப்பு அமைச்சராக இருப்பதற்கு முன்பு, நான் ஒரு இந்திய குடிமகன். பாதுகாப்பு அமைச்சராக இருப்பதோடு மட்டுமல்லாமல், ஒரு இந்திய குடிமகனாக உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

நான் இங்கு ஒரு தபால்காரராக உங்கள் மத்தியில் வந்து நாட்டு மக்களின் செய்தியைக் கொண்டு வந்துள்ளேன். அவர்களின் செய்தி ‘நாங்கள் அனைவரும் உங்களைப் பற்றி பெருமைப்படுகிறோம்’ என்பதாகும். ஆபரேஷன் சிந்தூர் என்பது வெறும் ஒரு நடவடிக்கையின் பெயர் மட்டுமல்ல, அது எங்கள் உறுதிப்பாடு. இது போன்ற ஒரு உறுதிப்பாட்டின் மூலம் இந்தியா பாதுகாப்பை மட்டுமல்ல, தேவைப்படும்போது வலுவான முடிவுகளையும் நடவடிக்கைகளையும் எடுக்கும் என்பதைக் காட்டியது.

பகல்காம் தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தான் மற்றும் பயங்கரவாதிகள் மீது தங்கள் கோபத்தை வெளிப்படுத்திய ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கும் நான் வணக்கம் செலுத்துகிறேன். எதிரிகளை அழித்த அந்த சக்தியை உணர நான் இங்கே இருக்கிறேன். எல்லையில் இருந்த பாகிஸ்தானிய பயங்கரவாத முகாம்கள் மற்றும் பதுங்கு குழிகளை நீங்கள் அழித்த விதத்தை, எதிரிகளால் ஒருபோதும் மறக்க முடியாது என்று நினைக்கிறேன்.

இவ்வளவு பொறுப்பற்ற மற்றும் முரட்டுத்தனமான நாட்டின் கைகளில் அணு ஆயுதங்கள் பாதுகாப்பாக இருக்குமா என்று நான் முழு உலகத்தையும் கேட்கிறேன். பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) கண்காணிப்பின் கீழ் கொண்டுவர வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, ஸ்ரீநகருக்கு வருகை தந்த ராஜ்நாத் சிங்கை, துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா வரவேற்றார்.

The post பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை சர்வதேச அணுசக்தி முகமை கண்காணிக்க வேண்டும்: ராஜ்நாத் சிங்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
85715
தனியார் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு வேண்டும்: ராகுல் காந்தி! https://koodal.com/news/2025/05/15/reservation-is-needed-in-private-educational-institutions-rahul-gandhi/ Thu, 15 May 2025 10:28:45 +0000 https://koodal.com/?p=85712 தனியார் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்பட வேண்டும் என்றும் 50% இடஒதுக்கீடு உச்சவரம்பு எனும் சுவரை உடைக்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். பிகாரின் தர்பங்காவில் உள்ள அம்பேத்கர் மாணவர் விடுதியில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய ராகுல்…

The post தனியார் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு வேண்டும்: ராகுல் காந்தி! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
தனியார் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்பட வேண்டும் என்றும் 50% இடஒதுக்கீடு உச்சவரம்பு எனும் சுவரை உடைக்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

பிகாரின் தர்பங்காவில் உள்ள அம்பேத்கர் மாணவர் விடுதியில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய ராகுல் காந்தி கூறியதாவது:-

உங்களைச் சந்திக்க வேண்டும், உங்கள் குறைகளைக் கேட்க வேண்டும் என்பதற்காகவே நான் இங்கு வர முடிவெடுத்தேன். ஆனால், ஐக்கிய ஜனதா தளம் – பாஜக கூட்டணி அரசு, நான் இங்கு வருவதையும் உங்கள் முன் பேசுவதையும் தடுக்க முனைந்தது. அச்சம் காரணமாக ஜேடியு-பாஜக அரசாங்கம் சர்வாதிகாரத்தைக் கையில் எடுத்து, காவல்துறை மூலம் தடுத்தது. பிகாரில் தலித் மாணவர்களைச் சந்தித்துப் பேசுவது குற்றமா? பிகாரில் மாணவர்களுக்காக நீதி கேட்டு குரல் கொடுப்பது குற்றமா?

உங்களைப் போன்ற மாணவர்களின் ஆதரவு எனக்கு இருப்பதால் என்னை தடுத்து நிறுத்துவதில் அவர்கள் தோல்வியடைந்தனர். நாங்கள் இங்கு வருவதை இன்று அவர்களால் தடுக்க முடியாதது போல, எதிர்காலத்திலும் அவர்களால் எங்களைத் தடுக்க முடியாது.

இந்த சர்வாதிகார அரசாங்கம் எவ்வளவு முயற்சி செய்தாலும், நமது குரலை அடக்க முடியாது. எல்லா சூழ்நிலைகளிலும் நாங்கள் மாணவர்களுடன் நிற்கிறோம், தொடர்ந்து அவர்களின் குரலை உயர்த்துவோம். மாணவர்களுக்கு நீதி கிடைக்க நாங்கள் தொடர்ந்து போராடுவோம். அநீதி தோற்கடிக்கப்பட வேண்டும், நீதி வெல்லும்.

கல்விக்காக அரசாங்கம் பணத்தை செலவிட வேண்டும். 50% இடஒதுக்கீடு என்ற உச்ச வரம்பை உடைக்க வேண்டும். தனியார் கல்வி நிறுவனங்களிலும் இடஒதுக்கீடு இருக்க வேண்டும்.

நாட்டில் தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் 24 மணி நேரமும் அநீதியை எதிர்கொள்கின்றனர். பாகுபாடு காட்டப்பட்டு கல்வி முறையிலிருந்து அவர்கள் தடுக்கப்படுகிறார்கள். எனவேதான், சாதிவாரி கணக்கெடுப்பு முறையான முறையில் நடத்தப்பட வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்துகிறது. மேலும், தனியார் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களிலும் இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட வேண்டும். ஆனால், நரேந்திர மோடியும், பிகார் அரசாங்கமும் இந்தச் சட்டத்தை அமல்படுத்தவில்லை, எனவே நாங்கள் அவர்களுக்கு அழுத்தம் கொடுத்து அதைச் செய்து காண்பிப்போம். தனியார் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டை அமல்படுத்தாவிட்டால், அடுத்த கட்ட போராட்டத்துக்கு நாங்கள் தயாராவோம். தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் இடஒதுக்கீடு நீட்டிக்கப்படும் வரை தொடர்ந்து போராடுவோம்.

உங்கள்(மாணவர்கள்) கவனத்திலிருந்து நீங்கள் திசைதிருப்பப்படாமல், உங்கள் உரிமைகளைப் பெறுவதை நான் உறுதி செய்வேன். நீங்கள் அனைவரும் உங்கள் பலத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியிடம் கேட்டேன். பொதுமக்களின் அழுத்தம் மற்றும் பயம் காரணமாக, சாதி கணக்கெடுப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். உண்மை என்னவென்றால் அவர் சாதிவாரி கணக்கெடுப்பையும், அரசியலமைப்பையும் எதிர்க்கிறார். இந்த அரசாங்கம் உங்களைப் பற்றி அல்ல, அதானி மற்றும் அம்பானியைப் பற்றி மட்டுமே அக்கறை கொள்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

The post தனியார் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு வேண்டும்: ராகுல் காந்தி! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
85712
வக்பு சட்டத்திற்கு எதிரான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் ஒத்திவைப்பு! https://koodal.com/news/2025/05/15/cases-against-waqf-act-adjourned-in-supreme-court/ Thu, 15 May 2025 10:27:03 +0000 https://koodal.com/?p=85709 வக்பு திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் 70-க்கும் மேற்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்த போது, வக்பு சட்டத்திற்கு சுப்ரீம் கோர்ட் இடைக்காலத் தடை விதித்ததோடு, 15…

The post வக்பு சட்டத்திற்கு எதிரான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் ஒத்திவைப்பு! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
வக்பு திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் 70-க்கும் மேற்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்த போது, வக்பு சட்டத்திற்கு சுப்ரீம் கோர்ட் இடைக்காலத் தடை விதித்ததோடு, 15 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது. இன்று இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி பி ஆர் கவாய் தலைமையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் விரிவான பதில் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து விசாரணைக்கு அதிக நேரம் தேவைப்படுவதால், வழக்கை வரும் 20 ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக நீதிபதி உத்தரவிட்டார்.

மத்திய அரசு கொண்டு வந்த வக்பு சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து இதற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதலும் அளித்தார். இதனால் அந்த மசோதா சட்டமாக மாறியது. இதற்குக் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் 70-க்கும் மேற்பட்ட மனுக்களும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. முன்னதாக இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்த போது, வக்பு சட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. மேலும், புதிய வக்பு சட்டத்தின் கீழ் எந்தவொரு நடவடிக்கை அல்லது நியமனங்களையும் மே 5ம் தேதி வரை மேற்கொள்ளக்கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அமர்வில் கடந்த 5-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் இருந்து 4 வேலை நாட்கள் மட்டுமே இருப்பதைச் சுட்டிக்காட்டி தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா இந்த வழக்கில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இந்த விவகாரத்தில் விரிவான விசாரணை தேவைப்படுகிறது. எனவே, ஏற்கனவே உள்ள இடைக்கால உத்தரவுகளை ஒத்திவைக்கவோ அல்லது பிறப்பிக்கவோ விரும்பவில்லை என்றும் தெரிவித்த உச்ச நீதிமன்றம், புதிய தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்கும் நீதிபதி பி.ஆர். கவாய் இந்த வழக்கை விசாரிப்பார் என்று கூறினர். இதன்படி, இந்த வழக்கு மே 15 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக அறிவித்தது.

சஞ்சீவ் கன்னா கூறுகையில், மத்திய அரசின் பதில் மனுவை நாங்கள் ஆழ்ந்து படிக்கவில்லை. வக்பு சொத்துகள் பதிவு குறித்த சில கருத்துகளை மத்திய அரசு எழுப்பி உள்ளது. சில சர்ச்சைக்குரிய புள்ளிவிவரங்களை அளித்துள்ளது. அவற்றை பரிசீலிக்க சிறிது காலம் தேவைப்படும். நான் இந்த இடைக்காலத்தில் தீர்ப்பை ஒத்திவைக்க விரும்பவில்லை. விரைவில் இவ்விவகாரம் விசாரிக்கப்பட வேண்டும். ஆனால் எனது அமர்வில் அல்ல. தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வில், மே 15 ஆம் தேதி இம்மனுக்கள் விசாரணைக்கு வரும்” என்றார். இதன்படி, இந்த வழக்கின் விசாரணை இன்று நீதிபதிகள் கவாய், சஞ்சய் குமார் மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகியோரது அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் விரிவான பதில் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து விசாரணைக்கு அதிக நேரம் தேவைப்படுவதால், வழக்கை வரும் 20 ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக நீதிபதி உத்தரவிட்டார். அதுவரையில் ஏற்கனவே விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

The post வக்பு சட்டத்திற்கு எதிரான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் ஒத்திவைப்பு! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
85709
மசோதாக்கள் மீது முடிவெடுக்க காலக்கெடு: குடியரசுத் தலைவர் உச்ச நீதிமன்றத்துக்கு கடிதம்! https://koodal.com/news/2025/05/15/deadline-to-decide-on-bills-president-writes-to-supreme-court/ Thu, 15 May 2025 10:00:16 +0000 https://koodal.com/?p=85690 மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்களுக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா என்று வினவி திரவுபதி முர்மு உச்ச நீதிமன்றத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் 14 கேள்விகளை முன்வைத்துள்ளார். தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில்…

The post மசோதாக்கள் மீது முடிவெடுக்க காலக்கெடு: குடியரசுத் தலைவர் உச்ச நீதிமன்றத்துக்கு கடிதம்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்களுக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா என்று வினவி திரவுபதி முர்மு உச்ச நீதிமன்றத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் 14 கேள்விகளை முன்வைத்துள்ளார்.

தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் வழங்கப்பட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பை முன்வைத்து, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உச்ச நீதிமன்றத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் ஆளுநர்களுக்கு, குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதிக்க முடியுமா உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை அவர் கேட்டுள்ளார்.

குடியரசுத் தலைவர் எழுப்பியுள்ள 14 கேள்விகள்:

1) ஒரு மசோதாவை ஆளுநரிடம் சமர்ப்பிக்கும்போது, ​​அவருக்கு முன் உள்ள அரசியலமைப்பு வாய்ப்புகள் என்ன?

2) ஒரு மசோதாவை ஆளுநர் முன் சமர்ப்பிக்கும்போது, ​​அமைச்சர்கள் குழுவால் வழங்கப்படும் உதவி மற்றும் ஆலோசனைக்கு ஆளுநர் கட்டுப்படுகிறாரா?

3) இந்திய அரசியலமைப்பின் 200-வது பிரிவின் கீழ் ஆளுநரின் அரசியலமைப்பு விருப்புரிமையைப் பயன்படுத்துவது நியாயமானதா?

4) பிரிவு 200-ன் கீழ் ஆளுநரின் நடவடிக்கைகள் தொடர்பாக நீதித்துறை மறுஆய்வுக்கு பிரிவு 361 ஒரு முழுமையான தடையா?

5) அரசியலமைப்பு ரீதியாக பரிந்துரைக்கப்பட்ட காலக்கெடு மற்றும் ஆளுநரால் அதிகாரங்களைப் பயன்படுத்தும் முறை இல்லாத நிலையில், பிரிவு 200 இன் கீழ் ஆளுநருக்கு காலக்கெடு விதிக்க முடியுமா மற்றும் நீதித்துறை உத்தரவுகள் மூலம் செயல்படுத்தும் முறையை பரிந்துரைக்க முடியுமா?

6) இந்திய அரசியலமைப்பின் பிரிவு 201-ன் கீழ் குடியரசுத் தலைவர் அரசியலமைப்பு விருப்புரிமையைப் பயன்படுத்துவது நியாயமானதா?

7) அரசியலமைப்பு ரீதியாக நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு மற்றும் குடியரசுத் தலைவரின் அதிகாரங்களைப் பயன்படுத்தும் முறை இல்லாத நிலையில், பிரிவு 201-ன் கீழ் குடியரசுத் தலைவரின் விருப்புரிமையைப் பயன்படுத்துவதற்கு காலக்கெடுவை விதிக்க முடியுமா மற்றும் நீதித்துறை உத்தரவுகள் மூலம் பரிந்துரைக்கப்பட்ட முறையில் செயல்பட முடியுமா?

8) குடியரசுத் தலைவரின் அதிகாரங்களை நிர்வகிக்கும் அரசியலமைப்புத் திட்டத்தின் அடிப்படையில், ஆளுநர் ஒரு மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அல்லது வேறுவிதமாக ஒதுக்கி வைக்கும்போது, ​​பிரிவு 143 இன் கீழ் குடியரசுத் தலைவர் உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனையையும், கருத்தையும் பெற கடமைப்பட்டுள்ளாரா?

9) சட்டப் பிரிவுகள் 200 மற்றும் 201 இன் கீழ் ஒரு மசோதா சட்டமாக மாறுவதற்கு முன்பு, நீதிமன்றங்கள் எந்த வகையிலும் அதன் உள்ளடக்கங்கள் மீது தீர்ப்பு வழங்க அனுமதிக்கப்படுகிறதா?

10) இந்திய அரசியலமைப்பின் பிரிவு 142 இன் கீழ் அரசியலமைப்பு அதிகாரங்களையும் குடியரசுத் தலைவர் / ஆளுநரின் உத்தரவுகளையும் எந்த வகையிலும் மாற்ற முடியுமா?

11) மாநில சட்டமன்றத்தால் இயற்றப்பட்ட மசோதாவை ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் சட்டமாக நடைமுறைப்படுத்த முடியுமா?

12) இந்திய அரசியலமைப்பின் பிரிவு 145(3) இன் விதிமுறையைக் கருத்தில் கொண்டு, உச்ச நீதிமன்றத்தின் எந்தவொரு அமர்வும், அதன் முன் உள்ள நடவடிக்கைகளில் உள்ள கேள்வி, அரசியலமைப்பின் விளக்கம் தொடர்பான சட்ட கேள்விகளை உள்ளடக்கியதா என்பதை முதலில் முடிவு செய்து, குறைந்தபட்சம் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு அதை பரிந்துரைப்பது கட்டாயமில்லையா?

13) அரசியலமைப்பு அதிகாரங்கள் மற்றும் குடியரசுத் தலைவரின்/ஆளுநரின் உத்தரவுகளையும் பிரிவு 142-ன் கீழ் எந்த வகையிலும் மாற்ற முடியுமா?. முரணான உத்தரவுகளை பிறப்பித்தல்/ஆணைகளை பிறப்பித்தல் வரை பிரிவு 142 நீட்டிக்கப்படுகிறதா?

14) பிரிவு 131 இன் கீழ் வழக்குத் தொடருவதைத் தவிர, மத்திய அரசுக்கும் மாநில அரசாங்கங்களுக்கும் இடையிலான மோதல்களைத் தீர்ப்பதற்கு உச்ச நீதிமன்றத்தின் வேறு எந்த அதிகார வரம்பையும் அரசியலமைப்புச் சட்டம் தடைசெய்கிறதா? இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

முன்னதாக தமிழக அரசு சார்பில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் ஏப்ரல் 8 அன்று தீர்ப்பு வழங்கியது. அதன் முக்கிய அம்சங்கள்:

* சட்டப் பிரிவு 200-ன் கீழ், மசோதாக்கள் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பப்படும்போது, அவருக்கு மூன்று வாய்ப்புகள் உள்ளன. ஒன்று, அவர் ஒப்புதல் வழங்குவது, இரண்டாவது ஒப்புதலை நிறுத்தி வைப்பது, மூன்றாவது குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்புவது.

* பிரிவு 200-ன்படி, முதல் முறையாக மசோதா அனுப்பப்படும்போது அந்த மசோதாவை நிறுத்தி வைக்க விரும்பினால், மசோதாவில் உள்ள அம்சங்களை மறுபரிசீலனை செய்ய அல்லது திருத்தங்களை மேற்கொள்ள பரிந்துரைக்கலாம். அவ்வாறு பரிந்துரைத்து மீண்டும் சட்டப்பேரவைக்கு திருப்பி அனுப்ப வேண்டும். சபை மீண்டும் மசோதாவை நிறைவேற்றி ஆளுநரிடம் சமர்ப்பித்தால், ஆளுநர் அதன் பிறகு ஒப்புதலை நிறுத்தி வைக்க முடியாது. அவர் ஒப்புதலை வழங்க வேண்டும்.

* அரசியலமைப்பில் ஆளுநருக்கு வீட்டோ (Veto) அதிகாரம் கிடையாது. மசோதாக்கள் மீது முடிவெடுப்பதில் தேவையற்ற தாமதம் கூடாது. இரண்டாவது முறையாக மசோதா அனுப்பப்படும்போது அதனை குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைக்கும் வாய்ப்பு ஆளுநருக்கு இல்லை. ஆளுநர் தனது ஒப்புதலை வழங்க வேண்டும் என்பது சட்டத்தில் தெளிவாக உள்ளது.

* குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக ஆளுநர் 10 மசோதாக்களை நிறுத்திவைத்தது சட்டவிரோதமானது, சட்டப்படி தவறானது. எடுக்கப்பட்ட தொடர் நடவடிக்கைகளும் சட்டவிரோதமானவை என்று நீதிமன்றம் கருதுகிறது.

* ஆளுநரின் ஒப்புதலுக்கான காலக்கெடு இல்லாத போதிலும், அவர் மசோதாக்களை காலவரையின்றி வைத்திருக்க முடியும் என்று அர்த்தமல்ல. அரசியலமைப்பில் நேரம் நிர்ணயிக்கப்படாத சந்தர்ப்பங்களில், முடிவு ஒரு நியாயமான காலத்துக்குள் எடுக்கப்பட வேண்டும் என்பதுதான் அர்த்தம்.

* ஆளுநர் மசோதாக்களை நிறுத்தி வைக்க / ஒப்புதல் அளிக்க ஒன்று முதல் மூன்று மாதங்கள் வரை காலக்கெடுவை உச்ச நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது. பொது விதியாக, ஆளுநர் அமைச்சரவையின் ஆலோசனையைப் பின்பற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்துகிறது.

* ஆளுநர் மாநிலத்தின் முறையான தலைவர் என்றும் அவர் அமைச்சரவையின் உதவி மற்றும் ஆலோசனையின் கீழ் தனது அதிகாரங்களை பயன்படுத்துகிறார் என்றும் கடந்த கால அரசியலமைப்பு அமர்வு முடிவுகளை உச்ச நீதிமன்றம் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

The post மசோதாக்கள் மீது முடிவெடுக்க காலக்கெடு: குடியரசுத் தலைவர் உச்ச நீதிமன்றத்துக்கு கடிதம்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
85690
ஆகம விதிக்குட்பட்ட கோயில்களில் அனைத்து சாதி அர்ச்சகர்களை நியமிக்க உச்ச நீதிமன்றம் தடை! https://koodal.com/news/2025/05/15/supreme-court-prohibits-the-appointment-of-priests-of-all-castes-in-temples-under-agama-rules/ Thu, 15 May 2025 04:42:15 +0000 https://koodal.com/?p=85673 தமிழகத்தில் ஆகம விதிகளுக்கு உட்பட்ட கோயில்களில் அனைத்து சாதி அர்ச்சகர்களை நியமிக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது. தமிழகத்தில் உள்ள இந்து கோயில்களில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் வகையில் 2006-ல் முதல்வராக இருந்த மு.கருணாநிதி தலைமையிலான திமுக அரசு சட்டம்…

The post ஆகம விதிக்குட்பட்ட கோயில்களில் அனைத்து சாதி அர்ச்சகர்களை நியமிக்க உச்ச நீதிமன்றம் தடை! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
தமிழகத்தில் ஆகம விதிகளுக்கு உட்பட்ட கோயில்களில் அனைத்து சாதி அர்ச்சகர்களை நியமிக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது.

தமிழகத்தில் உள்ள இந்து கோயில்களில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் வகையில் 2006-ல் முதல்வராக இருந்த மு.கருணாநிதி தலைமையிலான திமுக அரசு சட்டம் இயற்றியது. தொடர்ந்து அரசாணையும் வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு மாணவர்களின் தகுதி, பாடத்திட்டம், பயிற்சிக்காலம், பூஜைமுறைகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து பரிந்துரைகள் வழங்கியது.

அதன் அடிப்படையில், 2007-ல் திருவல்லிக்கேணி, திருவண்ணாமலை, ஸ்ரீரங்கம், மதுரை, பழனி, திருச்செந்தூர் ஆகிய 6 இடங்களில் அர்ச்சகர் பயிற்சி பள்ளிகள் அமைக்கப்பட்டன. 240 மாணவர்கள் இப்பயிற்சியில் சேர்ந்த நிலையில், 2008-ல் 207 பேர் பயிற்சி முடித்தனர். இந்நிலையில், ஆதி சிவாச்சாரியார்கள் சங்கம் வழக்கு தொடர்ந்து, அரசின் முடிவை எதிர்த்து தடை உத்தரவு பெற்றது. இதனால் அந்த மாணவர்களுக்கு பணி வழங்கப்படவில்லை.

இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் 2015-ல் தீர்ப்பளித்தது. அப்போது, ஆகமவிதிப்படி அர்ச்சகர்களை நியமிக்கும் மரபு உள்ள கோயில்களில் அதே முறையில்தான் நியமனம் நடைபெற வேண்டும் என தெரிவித்தது. ஆனால், அனைத்து சாதியினரும் அர்ச்சகராக நியமிகப்படுவது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. இதற்கிடையில், அர்ச்சகர் நியமனத்தில் 2019-ல் புதிய விதிகளை அறநிலையத்துறை வெளியிட்டது. இதன் மூலம், சிறிய கோயில்களில் இருவருக்கு பணி நியமனம் வழங்கப்பட்டது. அதன்பின் 2021-ல் திமுக அரசு பதவியேற்ற நிலையில், ஆக.14-ம் தேதி 28 பேருக்கு பணி நியமனம் வழங்கியது. இதை எதிர்த்து மீண்டும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 2022-ல் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய உயர் நீதிமன்றம், தமிழக அரசின் விதிகள் செல்லும் என்றும், ஆகம விதிகள் படி இயங்கும் கோயில்களில், அந்தந்த ஆகம விதிப்படி அரச்சகர்களை நியமிக்கலாம் என வும் தீர்ப்பளித்தது. கோயில்கள் குறித்து கண்டறிய 5 பேர் அடங்கிய குழுவையும் அமைத்தது.

இந்நிலையில், தமிழகத்தில் ஆகம விதிகளுக்கு முரணாக கோயில்களில் அர்ச்சகர்கள், பணியாளர்கள் நியமிப்பதற்கு அதிகாரிகளுக்கு தடை விதிக்க, அனைத்திந்திய ஆதிசைவ சிவாச்சாரியர்கள் சங்கம் உள்ளிட்ட சில அமைப்புகள், உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல் முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தன. அந்த மனு மீதான விசாரணை நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், அர்ச்சகர்கள் பயிற்சி முடித்த மாணவர்கள் சங்கத் தலைவர் அரங்கநாதன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குமணன் உச்ச நீதிமன்றத்தில் ஒரு இடையீட்டு மனு தாக்கல் செய்தார். அதில், “அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதற்காக கடந்த 2006-ல் தமிழக அரசு பிறப்பித்த அரசாணையின்படி, அர்ச்சகர் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தற்போது வரை எந்த ஒரு பணி நியமனமும் கிடைக்கவில்லை. அரசாணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இதனால், பயிற்சி பெற்ற நூற்றுக்கணக்கானவர்களுக்கு பணி கிடைக்காமல், வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, எங்களை தகுதி, பயிற்சி தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணிநியமனம் செய்ய உத்தரவிடும் விதமாக, வழக்கை விரைவாக முடித்து உத்தரவிட வேண்டும. மேலும், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தமிழக அரசின் அரசாணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும். இந்த வழக்கில் எங்கள் தரப்பின் இடையீட்டு மனுவையும் ஏற்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு விசாரணை, உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் அமர்வு முன்பாக நேற்று நடைபெற்றது. அப்போது தமிழக அரசு தரப்பில், “தமிழகத்தில் 2,500-க்கும் மேற்பட்ட அர்ச்சகர்கள் பணியிடம் காலியாக உள்ளது. எனவே அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசாணையின் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும்” என வாதிடப்பட்டது.

அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் குமணன், “தமிழகத்தில் குறைந்த அளவில் தான் ஆகம விதிக்குட்பட்ட கோயில்கள் உள்ளன. எனவே, ஆகம விதிக்குட்பட்ட கோயில்களை தவிர்த்து, ஆகமவிதிக்கு உட்படாத கோயில்களில் நியமிக்க உத்தரவிட வேண்டும்’’ என கோரினார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் அமர்வு “ஆகம விதிகளுக்கு உட்பட்ட கோயில்களை தவிர்த்துவிட்டு, ஆகம விதிக்கு உட்படாத கோயில்களில் மட்டுமே அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிக்க வேண்டும். அடுத்த 3 மாதங்களுக்குள் தமிழகத்தில் ஆகம விதிக்கு உட்படாத கோயில்களை தமிழக அரசு அடையாளம் காண வேண்டும்’’ என உத்தரவிட்டது. மேலும், ராமேசுவரம் கோயிலில் காலியாக உள்ள அர்ச்சகர்கள், மணியம் பணியிடங்களை தமிழக அரசு நிரப்பவும் அனுமதி வழங்கி, வழக்கை செப்டம்பர் மாதத்துக்கு தள்ளிவைத்தது.

The post ஆகம விதிக்குட்பட்ட கோயில்களில் அனைத்து சாதி அர்ச்சகர்களை நியமிக்க உச்ச நீதிமன்றம் தடை! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
85673
நாடு முழுவதும் பொதுக்கூட்டம் நடத்த காங்கிரஸ் முடிவு! https://koodal.com/news/2025/05/15/congress-decides-to-hold-public-meetings-across-the-country/ Thu, 15 May 2025 04:32:36 +0000 https://koodal.com/?p=85656 நாடு முழுவதும் ‘ஜெய்ஹிந்த்’ என்ற பெயரில் பொதுக்கூட்டங்கள் நடத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. டெல்லியில், காங்கிரஸ் அலுவலகத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதன்பிறகு, காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், ஊடகப்பிரிவு தலைவர் பவன் கேரா ஆகியோர்…

The post நாடு முழுவதும் பொதுக்கூட்டம் நடத்த காங்கிரஸ் முடிவு! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
நாடு முழுவதும் ‘ஜெய்ஹிந்த்’ என்ற பெயரில் பொதுக்கூட்டங்கள் நடத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.

டெல்லியில், காங்கிரஸ் அலுவலகத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதன்பிறகு, காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், ஊடகப்பிரிவு தலைவர் பவன் கேரா ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.

அவர்கள் கூறுகையில், “இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட மத்தியஸ்தம் செய்ததாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறியுள்ளார். ஆனால் அதுபற்றி பிரதமர் மோடி மவுனம் சாதித்து வருகிறார். எனவே, அவரது மவுனம் குறித்து கேள்வி எழுப்புவதற்காக நாடு முழுவதும் ‘ஜெய்ஹிந்த்’ என்ற பெயரில் பொதுக்கூட்டங்கள் நடத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. 16-ந் தேதி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி நிருபர்களுக்கு பேட்டி அளிப்பார்” என்று கூறினர்.

The post நாடு முழுவதும் பொதுக்கூட்டம் நடத்த காங்கிரஸ் முடிவு! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
85656
கர்னல் சோஃபியா குறித்து சர்ச்சை: பாஜக அமைச்சர் மீது வழக்குப்பதிய உத்தரவு! https://koodal.com/news/2025/05/14/controversy-over-colonel-sophia-case-registered-against-bjp-minister/ Wed, 14 May 2025 15:26:34 +0000 https://koodal.com/?p=85629 கர்னல் சோஃபியா குரேஷி குறித்து சர்ச்சையாகப் பேசிய பாஜக அமைச்சர் விஜய் ஷா மீது வழக்குப் பதிவு செய்ய மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்னல் சோஃபியா குரேஷி குறித்து சர்ச்சையாகப் பேசிய பாஜக அமைச்சர் விஜய் ஷா மீது வழக்குப்…

The post கர்னல் சோஃபியா குறித்து சர்ச்சை: பாஜக அமைச்சர் மீது வழக்குப்பதிய உத்தரவு! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
கர்னல் சோஃபியா குரேஷி குறித்து சர்ச்சையாகப் பேசிய பாஜக அமைச்சர் விஜய் ஷா மீது வழக்குப் பதிவு செய்ய மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கர்னல் சோஃபியா குரேஷி குறித்து சர்ச்சையாகப் பேசிய பாஜக அமைச்சர் விஜய் ஷா மீது வழக்குப் பதிவு செய்ய மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சோஃபியா குரேஷியை, பகல்காமில் தாக்குதல் நடத்தியவர்களின் சகோதரி எனக் குறிப்பிட்டு மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக அமைச்சர் பேசியிருந்ததற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்ததைத் தொடர்ந்து, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

The post கர்னல் சோஃபியா குறித்து சர்ச்சை: பாஜக அமைச்சர் மீது வழக்குப்பதிய உத்தரவு! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
85629
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடன் முப்படைத் தளபதிகள் சந்திப்பு! https://koodal.com/news/2025/05/14/tri-services-commanders-meet-with-president-draupadi-murmu/ Wed, 14 May 2025 15:18:23 +0000 https://koodal.com/?p=85615 குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடன் முப்படைத் தலைமைத் தளபதி மற்றும் முப்படைகளின் தளபதிகள் சந்திப்பு மேற்கொண்டுள்ளனர். முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சௌஹான், ராணுவப் படைத் தலைவர் உபேந்திர திவேதி, விமானப் படைத் தலைவர் ஏ.பி. சிங், கடற்படைத் தலைவர் தினேஷ்…

The post குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடன் முப்படைத் தளபதிகள் சந்திப்பு! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடன் முப்படைத் தலைமைத் தளபதி மற்றும் முப்படைகளின் தளபதிகள் சந்திப்பு மேற்கொண்டுள்ளனர்.

முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சௌஹான், ராணுவப் படைத் தலைவர் உபேந்திர திவேதி, விமானப் படைத் தலைவர் ஏ.பி. சிங், கடற்படைத் தலைவர் தினேஷ் கே. திரிபாதி ஆகியோர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து ஆபரேஷன் சிந்தூர் பற்றியும் இந்தியா – பாகிஸ்தான் தற்போதைய நிலை பற்றியும் விளக்கமளித்தனர். அப்போது பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி கொடுத்த இந்திய பாதுகாப்புப் படைகளின் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் குடியரசுத்தலைவர் பாராட்டியதாக குடியரசுத்தலைவர் மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த ஏப். 22 பகல்காம் தாக்குதலைத் தொடா்ந்து, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையை கடந்த மே 7 அன்று இந்தியா மேற்கொண்டது. எல்லைப் பகுதியில் அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. பாகிஸ்தானின் ராணுவ நிலைகள், விமான தளங்களை இந்தியா தாக்கி அழித்தது. ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் பாகிஸ்தானும் தாக்குதல் நடத்தியது.

இதனிடையே, இரு நாடுகளிடையே போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் முன்வந்தது. அதன்படி போர் நிறுத்தப்படுவதாக சனிக்கிழமை மாலை அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக பிரதமர் மோடியும் மக்களிடம் உரையாற்றினார். எல்லையில் அமைதியான சூழ்நிலை திரும்பி வருகிறது. போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பிறகும் எல்லையில் கண்காணிப்புப் பணி தொடர்ந்து வருகிறது.

The post குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடன் முப்படைத் தளபதிகள் சந்திப்பு! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
85615
வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு! https://koodal.com/news/2025/05/14/security-increased-for-foreign-minister-jaishankar/ Wed, 14 May 2025 10:49:55 +0000 https://koodal.com/?p=85593 பாகிஸ்தான் – இந்தியா போர் பதற்றம் சற்று தணிந்திருக்கும் நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 70 வயதான வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரின் பாதுகாப்பை உள்துறை அமைச்சகம் அதிகரித்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவரது…

The post வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
பாகிஸ்தான் – இந்தியா போர் பதற்றம் சற்று தணிந்திருக்கும் நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

70 வயதான வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரின் பாதுகாப்பை உள்துறை அமைச்சகம் அதிகரித்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவரது பாதுகாப்பில் சிறப்பு குண்டு துளைக்காத கார் சேர்க்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள அவரது வீட்டைச் சுற்றி பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஜெய்சங்கருக்கு ஏற்கெனவே மத்திய ரிசர்வ் போலீஸ் படை கமாண்டோக்களால் வழங்கப்படும் Z-பிரிவு பாதுகாப்பு உள்ளது. 24 மணி நேரமும் அவரைப் பாதுகாக்க 33 கமாண்டோக்கள் கொண்ட குழு நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், பகல்காம் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் குறித்து அவர் பல்வேறு உலகத் தலைவர்கள் மற்றும் பல்வேறு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களிடம் பேசி வருகிறார். இத்தகையச் சூழலில்தான், ஜெய்சங்கர் பாதுகாப்பு அதிகரிப்பு தொடர்பான செய்தி வந்துள்ளது. மேலும், ஒட்டுமொத்தமாக, விஐபிகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன என்றும் கூறப்படுகிறது.

The post வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
85593
கைது செய்யப்பட்ட பிஎஸ்எஃப் வீரரை ஒப்படைத்தது பாகிஸ்தான்! https://koodal.com/news/2025/05/14/pakistan-hands-over-arrested-bsf-soldier/ Wed, 14 May 2025 10:47:37 +0000 https://koodal.com/?p=85588 எல்லை தாண்டியதாக கைது செய்யப்பட்ட பிஎஸ்எஃப் வீரரை பாகிஸ்தான் இந்தியாவிடம் இன்று (மே.14) ஒப்படைத்தது. கடந்த ஏப்ரல் 23-ம் தேதி எல்லை பாதுகாப்புப் படையைச் சேர்ந்த கான்ஸ்டபிள் பி.கே.ஷா பஞ்சாப் பகுதியில் எல்லையை தாண்டியதாக பாகிஸ்தான் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில்…

The post கைது செய்யப்பட்ட பிஎஸ்எஃப் வீரரை ஒப்படைத்தது பாகிஸ்தான்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
எல்லை தாண்டியதாக கைது செய்யப்பட்ட பிஎஸ்எஃப் வீரரை பாகிஸ்தான் இந்தியாவிடம் இன்று (மே.14) ஒப்படைத்தது.

கடந்த ஏப்ரல் 23-ம் தேதி எல்லை பாதுகாப்புப் படையைச் சேர்ந்த கான்ஸ்டபிள் பி.கே.ஷா பஞ்சாப் பகுதியில் எல்லையை தாண்டியதாக பாகிஸ்தான் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இன்று (மே.14) அவர் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.

ஷா பஞ்சாப் எல்லையில் ஃபெரோஸ்பூர் பகுதியில் பாதுகாப்பில் இருந்தபோது நிழலுக்காக ஓரிடத்தில் ஒதுங்கியதாகவும், சீருடையில் ரைஃபிலுடன் இருந்த அவர் ஒதுங்கிய பகுதி பாக். எல்லையாக இருந்ததால் அவர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. ஏப்ரல் 22-ம் தேதி பகல்காம் தாக்குதல் நடந்த நிலையில், அடுத்த நாள் ஏப்.23-ம் தேதி பிஎஸ்எஃப் வீரர் கைதானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், எல்லை தாண்டியதாக கைது செய்யப்பட்ட பிஎஸ்எஃப் வீரரை பாகிஸ்தான் இந்தியாவிடம் இன்று (மே.14) காலை ஒப்படைத்துள்ளது. இது தொடர்பாக பிஎஸ்எஃப் செய்தித் தொடர்பாளர் ஒருவர், “இன்று காலை 10.30 மணியளவில் அட்டாரி – வாகா எல்லை வாயிலாக, கான்ஸ்டபிள் பூர்ணம் குமார் ஷாவை பாகிஸ்தானிடம் இருந்து மீட்டுள்ளோம். எல்லை பாதுகாப்புப் படையின் தொடர் முயற்சியால் இது சாத்தியமாகியுள்ளது. இதற்காக பிஎஸ்எஃப் ரேஞ்சர்கள், பாகிஸ்தான் ரேஞ்சர்களுடன் பலகட்டமாக பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். அதன் நீட்சியாகவே வீரரை மீட்க முடிந்தது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், இந்திய வீரரை திரும்பப் பெறுவதற்காக ராஜஸ்தான் எல்லையில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் வீரரை இந்தியா திருப்பி ஒப்படைத்ததாகவும் தகவல் இருக்கிறது.

The post கைது செய்யப்பட்ட பிஎஸ்எஃப் வீரரை ஒப்படைத்தது பாகிஸ்தான்! appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
85588