தமிழ் தாயின் பிள்ளைகள் Archives - கூடல் | Tamil Koodal https://koodal.com/tamil/articles/tamil-activist/ Latest Tamil News and Tamil Movie Reviews Online in Tamil Entertainment Website - Koodal.com Sat, 25 Dec 2021 15:19:24 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.2 https://i0.wp.com/koodal.com/wp-content/uploads/2021/12/cropped-koodal-logo.jpg?fit=32%2C32&ssl=1 தமிழ் தாயின் பிள்ளைகள் Archives - கூடல் | Tamil Koodal https://koodal.com/tamil/articles/tamil-activist/ 32 32 201197430 சுந்தரர் (Sundaramurti Nayanar – Cuntarar) https://koodal.com/articles/tamil-activist/2021/12/25/sundaramurti-nayanar-cuntarar/ Sat, 25 Dec 2021 15:19:24 +0000 https://koodal.com/?p=39 ஆதிக் கயிலைவாசி இவர். உமையம்மையின் சேடியரை விரும்பியதால் மானுட அனுக்கிரஹம் பெற்றுப் பூமிக்கு வந்தவர். திருவாவலூரில் சடையனார் இசைஞானியார் மைந்தராகத் தோன்றி, நரசிங்க முனையரையர் எனும் சிற்றரசரின் செல்வராக – சுந்தரராக – வளர்ந்து வாலிபம் கண்டவர். இவரது திருமண நாளிலே,…

The post சுந்தரர் (Sundaramurti Nayanar – Cuntarar) appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
ஆதிக் கயிலைவாசி இவர். உமையம்மையின் சேடியரை விரும்பியதால் மானுட அனுக்கிரஹம் பெற்றுப் பூமிக்கு வந்தவர்.

திருவாவலூரில் சடையனார் இசைஞானியார் மைந்தராகத் தோன்றி, நரசிங்க முனையரையர் எனும் சிற்றரசரின் செல்வராக – சுந்தரராக – வளர்ந்து வாலிபம் கண்டவர். இவரது திருமண நாளிலே, முதியவராக வந்த முக்கண்ணர், இவரைத் தடுத்து ஆட்கொண்டார். அப்போது சுந்தரர் பாடிய ” பித்தாபிறைசூடி ” எனும்பதிகம் உலகெங்கும் ஒலிப்பதாகும்.

துறையூரிலே சைவத்தவநெறி பெற்றார். தில்லையிலே ” திருத்தொண்டர் தொகை ” நெல்லுக்கும், பொன்னுக்கும் பாடி. செல்வம் குவித்துச் சிவனடியாற்குச் செலவிட்ட அழகுப் பிரியர் சுந்தரர். பரவை நாச்சியர், சங்கிலியர் என இருமனைவியரை மணந்தவர். பெண்ணழகிற்காகப் பொய்சத்தியம் செய்து, ஒரு கண்ணையிழந்து தெய்வத்தமிழ்ப் பதிகத் திறனால் ஈசனருளால், மீண்டும் விழிவரப் பெற்றவர். படைத்தவனாகிய ஸ்ரீ பரமேஸ்வரனையே காதலுக்குத் தூதனுப்பிய தமிழ்க் கொடை வள்ளல் இவர்.

அவினாசியிலே முதலையிடமிருந்து தமிழைப்பாடி மதலையை மீட்டவர். தலந்தோறும் வலம்வந்து மாந்தரின் இளமை நலம்வாழப் பாடி பக்தியை வளர்த்த சத்தியச் சைவர் ஸ்ரீ சுந்தரர்.

சேரமான் பெருமானுக்கு இவர் தந்த பொன் பொருளை சிவகணங்கள் பறிமுதல் செய்துவிட, திருமுருகன் பூண்டியிலே ” கொடுகுவெஞ்சிலை” ” வருகவேடுவா” எனும் பதிகம் பாடி இறையருளால் அனைத்துப் பொருளையும் மீட்டவர்.

சிற்றின்பச் சைவராய் வாழ்ந்து, பேரின்ப ஞானியாய் திருவஞ்சைக் களத்திலே … விண்ணிலிருந்து வந்த வெள்ளையானை மேல் ஏறி, மீண்டும் கயிலையைச் சேர்ந்தார் சுந்தர மூர்த்தி நாயனார்.

பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை அணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே.
– சுந்தரர் தேவாரம்.

The post சுந்தரர் (Sundaramurti Nayanar – Cuntarar) appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
39
திருநாவுக்கரசர் (அப்பர்) (Thirunavukkarasar – Appar) https://koodal.com/articles/tamil-activist/2021/12/25/appar-thirunavukkarasar/ Sat, 25 Dec 2021 08:40:52 +0000 https://koodal.com/?p=27 திருமுனைப்பாடி (நடுநாடு) நாட்டிலே திருவாமூரில் வேளாளர் குல … புகழனார் – மாதினியார் மகனாகப் பிறந்தவர். தமக்கை திலகவதியார். இவரது பிள்ளைத்திருநாமம், மருள் நீக்கியார். இளமையில் சமண சமயத் தீவிரபக்தர் ! தமக்கையின் வேண்டுதலால் … (சூலை நோய்ப்பட்டு இறையருளால்) மீண்டும்…

The post திருநாவுக்கரசர் (அப்பர்) (Thirunavukkarasar – Appar) appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
திருமுனைப்பாடி (நடுநாடு) நாட்டிலே திருவாமூரில் வேளாளர் குல … புகழனார் – மாதினியார் மகனாகப் பிறந்தவர். தமக்கை திலகவதியார். இவரது பிள்ளைத்திருநாமம், மருள் நீக்கியார்.

இளமையில் சமண சமயத் தீவிரபக்தர் ! தமக்கையின் வேண்டுதலால் … (சூலை நோய்ப்பட்டு இறையருளால்) மீண்டும் சைவஞானியானவர்.
” கூற்றாயினவாறு விலக்க கிலீர்” எனும் திருப்பதிகத்தை இவர் பாடியதும், கேட்டு மகிழ்ந்த திருவதிகை வீரட்டானேசுவரர். இவருக்கு
” திருநாவுக்கரசர் ” எனும் புகழ்ப் பெயர் கொடுத்தார்.

மகேந்திர பல்லவ மன்னன் (சமணர்) இவரை – மதம் மாறியதற்காக – பலவித கொடிய தண்டனை கொடுத்தும், மரணமிலா பெருவாழ்வு பெற்றவர். ” நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் ” என வீர முழக்கமிட்ட சிவஞானச்சிங்கமிவர். முடிவில் கொடிய மன்னனே, இவரது இனிய நண்பனானான்.

” மாசில்வீணையும் ” ; ” சொற்றுணை வேதியன் ” முதலான இவரது பலநூறு தேவாரப்பாடல்கள். சாத்திர, தோத்திரக் கனிகளின ” ஜூஸ் ” ஆகும்.

சைவத்திருத்தலங்கள் தோறும் சென்று, இறையருள் பெற்றுப் பதிகம் பாடிய முதுபெரும் ஞானப்பழமாகத் திகழ்ந்தவர்.

திருஞான சம்பந்தர் குழந்தை, இவர் முதியவர் இருவரும் பல திருத்தங்களிலே இணைந்து பதிகம் பாடித் தந்துள்ளனர். சம்பந்தர் இவரை அழைத்ததுதான் ” அப்பர் ” எனும் திருப்பெயர்.

திருக்கயிலையைக் கண்டு தொழ வடநாடு வரை நடந்தார் – ஸ்ரீ திருநாவுக்கரசர்; வயோதிகத்தால் தளர்ந்து இயலாமையால் வாடியது கண்ட சிவனே, இவரை இமயச்சாரலியே உள்ள திருக்குளத்திலே மூழ்கச் சொல்லி திருவையாற்றிலே எழ வைத்து, திருக்கையிலையின் காட்சியை தந்தருளி ஆட்கொண்டார்.

” சாத்திரம் பலபேசும் சழக்கர்காள்!
கோத்திரமும் குலமும் கொண்டு என்செய்வீர்
பாத்திரம் சிவம் என்று பணிதிரேல்
மாத்திரைக்குள் அருளும் மாற்பேறரே.”

– அப்பர் தேவாரம்

The post திருநாவுக்கரசர் (அப்பர்) (Thirunavukkarasar – Appar) appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
27
திருஞான சம்பந்தர் (Thirugnana Sambanthar) https://koodal.com/articles/tamil-activist/2021/12/25/thirugnana-sambanthar/ Sat, 25 Dec 2021 08:24:44 +0000 https://koodal.com/?p=24 சோழநாட்டுச் சிர்காழியிலே, அந்தணர்குல, கவுணியர் கோத்திரத்திலே சிவாபதஇருதயர், பகவதி அம்மைக்கு மகனாகப் பிறந்தவர் திரு ஞானசம்பந்தர். மூன்று வயதிலேயே… ஈசனருள் பெற்று… சிர்காழிக் குளக்கரையிலே ஞானப்பால் பருகிய திருவருட்செல்வர். திருக்கோலக் காவில் பொற்றாளம் (ஈசனிடம்) பெற்றவர். திரு நீலகண்டப்பதிகம்பாடி, அடியவர்க்கு வந்த…

The post திருஞான சம்பந்தர் (Thirugnana Sambanthar) appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
சோழநாட்டுச் சிர்காழியிலே, அந்தணர்குல, கவுணியர் கோத்திரத்திலே சிவாபதஇருதயர், பகவதி அம்மைக்கு மகனாகப் பிறந்தவர் திரு ஞானசம்பந்தர்.

மூன்று வயதிலேயே… ஈசனருள் பெற்று… சிர்காழிக் குளக்கரையிலே ஞானப்பால் பருகிய திருவருட்செல்வர்.

திருக்கோலக் காவில் பொற்றாளம் (ஈசனிடம்) பெற்றவர். திரு நீலகண்டப்பதிகம்பாடி, அடியவர்க்கு வந்த கடுமையான நளிர் சுர நோயைத்தீர்த்தவர்.

திருக்நெல்வாயில் சிவனருளால் முத்துச்சிவிகையும், பட்டீஸ்வரத்திலே முத்துப் பந்தரும் பெற்றவர்.

பதிகங்களைப்பாடி, பாம்பு கடித்து மாண்ட வணிகனைக் காத்தது, சிவனிடமே படிக்காசு பெற்றது, மக்களின் பஞ்ச வறுமைகளைப் போக்கியது… திருமறைக் காட்டிலே (வேதாரண்யம்) கோயில் கதவு அற்புதம், மதுரையிலே அனல் வாதம், புனல் வாதம் புரிந்து ” மந்திரமாவதுநீறு” பாடி பாண்டியனின் வெப்பு நோயையும், பலமதத்தவரின் விதண்டாவாதங்களையும் வென்றவர்.

சென்னைத் திருமயிலையிலே மாண்டு போன சிவநேசச்செட்டியார் மகளின் எலும்புகளை ” மட்டிட்ட புன்னையங்கானல் மடமயிலை ” எனும் பதிகம் பாடி ” பூம்பாவைப் ” பெண்ணாக்கி ” மகளே!” என்றழைத்த மாசில்லாத் தவசிலர்.

ஆச்சாபுரத்திலே திருமணம் செய்து கொண்டு, ” காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி ” எனும் பதிகத்தைப் பாடி முடித்து மணப்பந்தலிலேயே ஒளிச்சுடராய் மாறி, இறைவனோடு இரண்டறக் கலந்தவர் திருஞான சம்பந்தமூர்த்தி.

மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்ல கதிக்கு யாதுமோர் குறைவிலை,
கண்ணில்நல் லஃதுறும் கழுமல வளநகர்ப்
பெண்ணில்நல் லாளொடும் பெருந்தகை இருந்ததே.

– சம்பந்தர் தேவாரம்.

The post திருஞான சம்பந்தர் (Thirugnana Sambanthar) appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
24
டாக்டர் அ. சிதம்பரநாதன் செட்டியார். (1907 – 1967) (Dr.Chithambaranatha Chettiyar) https://koodal.com/articles/tamil-activist/2021/12/25/dr-chithambaranatha-chettiyar/ Sat, 25 Dec 2021 08:09:08 +0000 https://koodal.com/?p=18 கும்பகோணத்தில் தோன்றி முறையாகத் தமிழ் பயின்று பேராசிரியரானவர் டாக்டர். அ. சிதம்பரநாதன் செட்டியார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிய இவர், தம் கருத்தை அஞ்சாது எடுத்துக் கூறிய சொல்வல்லார். மொழியியல், இலக்கியம் ஆகிய இரு துறைகளிலும் சிறந்து விளங்கிய இவர்…

The post டாக்டர் அ. சிதம்பரநாதன் செட்டியார். (1907 – 1967) (Dr.Chithambaranatha Chettiyar) appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
கும்பகோணத்தில் தோன்றி முறையாகத் தமிழ் பயின்று பேராசிரியரானவர் டாக்டர். அ. சிதம்பரநாதன் செட்டியார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிய இவர், தம் கருத்தை அஞ்சாது எடுத்துக் கூறிய சொல்வல்லார். மொழியியல், இலக்கியம் ஆகிய இரு துறைகளிலும் சிறந்து விளங்கிய இவர் தலைமைப் பதிப்பாசிரியராகப் பொறுப்பேற்று, ஆங்கில – தமிழ் அகராதி யொன்றை மிக விரிவான முறையில் தொகுத்தார். இறுதியாக மதுரை தியாகராசர் கல்லூரியின் முதல்வராகப் பணிபுரிந்தார்.

” தொழுது உண்ணுஞ் சுவை நிரம்பிய பொருளை விட, உழுது உண்ணும் சுவை இல்லாத பொருளும் இனியது என்பது தமிழர் கொள்கை. சிறிதயவு கூழே பெறினும், அவரவரது முயற்சியாலும் அவரவரது உழைப்பாலும் பெற்றால், தன் முயற்சியின்றிக் கிடைக்கும் அமிழ்தத்தினும் அது சிறந்தது என்பது தொன்று தொட்டு வரும் தமிழர் கருத்து.

” தெண்ணீர் அடுபுற்கை யாயினும்தாள் தந்தது
உண்டலி னூங்கினியது இல்”

என்றார் திருவள்ளுவர். உழுது உண்டு வாழ்கின்றவரே “வாழ்பவர்” எனச் சிறப்பித்துச் சொல்லத்தக்கவரென்பது அவர் கருத்து.”
(தமிழ் காட்டும் உலகு)

The post டாக்டர் அ. சிதம்பரநாதன் செட்டியார். (1907 – 1967) (Dr.Chithambaranatha Chettiyar) appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
18
டாக்டர். மா. இராசமாணிக்கனார் (1907 – 1967) (Dr. M. Rajamanickam) https://koodal.com/articles/tamil-activist/2021/12/25/m-rajamanickam/ Sat, 25 Dec 2021 08:04:29 +0000 https://koodal.com/?p=16 பேராசிரியர் டாக்டர் மா. இராசமாணிக்கனார் ஓர் ஆராய்ச்சிப் பேரறிஞர். கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ் பயின்று பள்ளிகளில் தமிழாசிரியராகப் பணிபுரிந்து பின் படிப்படியாக உயர்ந்து இறுதியாகச் சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைத் தமிழ் பேராசிரியராக அமர்ந்தவர். நூற்றுக்கணக்கான ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் தமிழ் இலக்கியம்,…

The post டாக்டர். மா. இராசமாணிக்கனார் (1907 – 1967) (Dr. M. Rajamanickam) appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
பேராசிரியர் டாக்டர் மா. இராசமாணிக்கனார் ஓர் ஆராய்ச்சிப் பேரறிஞர். கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ் பயின்று பள்ளிகளில் தமிழாசிரியராகப் பணிபுரிந்து பின் படிப்படியாக உயர்ந்து இறுதியாகச் சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைத் தமிழ் பேராசிரியராக அமர்ந்தவர். நூற்றுக்கணக்கான ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் தமிழ் இலக்கியம், வரலாறு, கல்வெட்டு போன்ற துறைகளில் ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களையும் எழுதிக் குவித்தவர்.

” கோவில் என்னும் சொல் சங்க காலத்தில் தெய்வங்கள் உறையும் கட்டடத்தையும், அரசன் வாழ்ந்த அரண்மனையையும் குறித்தது. இதனால் அரசன் வாழ்ந்த அரண்மனையும், கோவிலும் பல பகுதிகளில் ஒத்திருந்தன, என்று கொள்ளுதல் பொருந்தும். இரண்டும் சுற்று மதில்களை யுடையவை. வாயில்கள் மீது உயர்ந்த கோபுரங்களைப் பெற்றவை. வாயில்களுக்குத் துருப்பிடியாமல் செந்நிறம் பூசப்பட்ட இரும்புக் கதவங்கள் பொருத்தப்பட்டிருந்தன. சாந்து பூசப் பெற்ற மாடங்கள் உயரமாகக் கட்டப்பட்டிருந்தன.”

மேலும் படிக்க

The post டாக்டர். மா. இராசமாணிக்கனார் (1907 – 1967) (Dr. M. Rajamanickam) appeared first on கூடல் | Tamil Koodal.

]]>
16