திருநாவுக்கரசர் (அப்பர்) (Thirunavukkarasar – Appar)

திருமுனைப்பாடி (நடுநாடு) நாட்டிலே திருவாமூரில் வேளாளர் குல … புகழனார் – மாதினியார் மகனாகப் பிறந்தவர். தமக்கை திலகவதியார். இவரது பிள்ளைத்திருநாமம், மருள் நீக்கியார்.

இளமையில் சமண சமயத் தீவிரபக்தர் ! தமக்கையின் வேண்டுதலால் … (சூலை நோய்ப்பட்டு இறையருளால்) மீண்டும் சைவஞானியானவர்.
” கூற்றாயினவாறு விலக்க கிலீர்” எனும் திருப்பதிகத்தை இவர் பாடியதும், கேட்டு மகிழ்ந்த திருவதிகை வீரட்டானேசுவரர். இவருக்கு
” திருநாவுக்கரசர் ” எனும் புகழ்ப் பெயர் கொடுத்தார்.

மகேந்திர பல்லவ மன்னன் (சமணர்) இவரை – மதம் மாறியதற்காக – பலவித கொடிய தண்டனை கொடுத்தும், மரணமிலா பெருவாழ்வு பெற்றவர். ” நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் ” என வீர முழக்கமிட்ட சிவஞானச்சிங்கமிவர். முடிவில் கொடிய மன்னனே, இவரது இனிய நண்பனானான்.

” மாசில்வீணையும் ” ; ” சொற்றுணை வேதியன் ” முதலான இவரது பலநூறு தேவாரப்பாடல்கள். சாத்திர, தோத்திரக் கனிகளின ” ஜூஸ் ” ஆகும்.

சைவத்திருத்தலங்கள் தோறும் சென்று, இறையருள் பெற்றுப் பதிகம் பாடிய முதுபெரும் ஞானப்பழமாகத் திகழ்ந்தவர்.

திருஞான சம்பந்தர் குழந்தை, இவர் முதியவர் இருவரும் பல திருத்தங்களிலே இணைந்து பதிகம் பாடித் தந்துள்ளனர். சம்பந்தர் இவரை அழைத்ததுதான் ” அப்பர் ” எனும் திருப்பெயர்.

திருக்கயிலையைக் கண்டு தொழ வடநாடு வரை நடந்தார் – ஸ்ரீ திருநாவுக்கரசர்; வயோதிகத்தால் தளர்ந்து இயலாமையால் வாடியது கண்ட சிவனே, இவரை இமயச்சாரலியே உள்ள திருக்குளத்திலே மூழ்கச் சொல்லி திருவையாற்றிலே எழ வைத்து, திருக்கையிலையின் காட்சியை தந்தருளி ஆட்கொண்டார்.

” சாத்திரம் பலபேசும் சழக்கர்காள்!
கோத்திரமும் குலமும் கொண்டு என்செய்வீர்
பாத்திரம் சிவம் என்று பணிதிரேல்
மாத்திரைக்குள் அருளும் மாற்பேறரே.”

– அப்பர் தேவாரம்