கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற அரசாணையை எதிர்த்த மனு தள்ளுபடி!

தமிழகத்தில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற சுகாதாரத்துறையின் அரசாணையை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை பத்தாயிரம் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியதை அடுத்து பொது இடங்களில் கடடாயம் முகக்கவசம் அணிய வேண்டுமெனவும் அவ்வாறு அணியாவிட்டால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் கடந்த ஜனவரி மாதம் 12ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. இதனை எதிர்த்து சென்னை சேப்பாக்கத்தை சேர்ந்த வழக்கறிஞர் ராமமூர்த்தி என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், முகக்கவசம் அணிவதால் கொரோனாவை கட்டப்படுத்த முடியாது எனவும் மாறாக முகக்கவசம் சுவாசக்கோளாறு உள்ளிட்ட உடல் நலக்கோளாறு ஏற்படுவதாக கூறிப்பிட்டுள்ளார். மேலும், முகக்கவசம் அணியாததால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அறிவித்துள்ளது தவறானது எனவும் 500 ரூபாய் குறைவான தொகையல்ல எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனிஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா முன்பு விசாரணைக்கு வந்தபோது, போதிய ஆய்வுகள் எதுவும் மேற்கொள்ளாமலும், உரிய ஆவணங்கள் இல்லாமல் தாக்கல் செய்துள்ளதாக பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து மனுவை தள்ளுபடி செய்தனர்.