ஸ்பெயினில் இந்திய தேசிய கொடியுடன் நயன்தாரா-விக்னேஷ் சிவன்!

75 வது சுதந்திர திருநாள் நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், ஸ்பெயின் சென்றுள்ள நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடி, இந்திய கொடியை பறக்கவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் கடந்த சில நாட்களுக்கு முன்னரே சுதந்திர தின கொண்டாட்டம் ஆரம்பமாகி விட்டது என்பதும் இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரின் வீட்டிலும் சுதந்திரக் கொடியை ஏற்றிவைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டதற்கிணங்க பலர் சுதந்திரக் கொடியை ஏற்றி வந்தனர். குடிமக்கள் அனைவரும் தங்களது வீடுகள் மற்றும் அலுவலகங்கள், வணிக வளாகங்கள் என எல்லா இடங்களில் சுதந்திர கொடியை மிளிர விட்டனர்.

75வது சுதந்திர தினத்தை திரைப்பிரபலங்கள் தங்கள் வீட்டில் தேசிய கொடியை பறக்கவிட்டு வருகின்றனர். அந்த வகையில் ஸ்பெயில் சென்றுள்ள நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் இந்திய தேசிய கொடியை ஏந்தியபடி சுதந்திர தின வாழ்த்துக்களை தெரித்துள்ளனர். இந்த புகைப்படத்தை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு “நம்ம கொடி…ஸ்பெயின் எங்கும்” என கூறி சுதந்திர தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.