சீன தூதரகத்தில் இருந்து ராஜீவ்காந்தி அறக்கட்டளைக்கு ரூ.1.35 கோடி: அமித்ஷா

காங்கிரஸ் ஆட்சியில் சீன ஆக்கிரமிப்புக்கு இடம் கொடுத்து விட்டு தற்போது நாடகம் ஆடுகிறார்கள். மோடி அரசு இருக்கும் வரை ஒரு அங்குல நிலத்தை கூட யாராலும் கைப்பற்ற முடியாது என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறினார்.

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ராஜீவ்காந்தி அறக்கட்டளையின் வெளிநாடு நிதி பெறுவது தொடர்பான உரிமம் ரத்து குறித்து கேள்வியை தவிர்க்கவே பாராளுமன்றத்தில் காங்கிரஸ் எல்லை பிரச்சினையை எழுப்பியது. சீன தூதரகத்தில் இருந்து ராஜீவ்காந்தி அறக்கட்டளைக்கு ரூ.1.35 கோடி நன்கொடை கிடைத்தது. இது எப்.சி.ஆர்.ஏ. விதிகளின்படி இல்லாததால் ரத்து செய்யப்பட்டது. காங்கிரஸ் ஆட்சியில் சீன ஆக்கிரமிப்புக்கு இடம் கொடுத்து விட்டு தற்போது நாடகம் ஆடுகிறார்கள். மோடி அரசு இருக்கும் வரை ஒரு அங்குல நிலத்தை கூட யாராலும் கைப்பற்ற முடியாது என்பதை தெளிவாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அருணாச்சலபிரதேசத்தில் கடந்த 8-9ம் தேதி இரவு நமது இந்திய வீரர்கள் காட்டிய வீரத்தை நான் வணங்குகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.