நடிகர் விஜயகுமார் இறந்துவிட்டதாக பரவிய வதந்தியால் பரபரப்பு!

தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் விஜயகுமார். இந்நிலையில், நடிகர் விஜயகுமாரின் உடல்நிலை குறித்து செய்திகள் வெளியாகி வந்தன. இது வதந்தி என தெரியவந்துள்ளது.

நடிகர் விஜயகுமார் 1961ம் ஆண்டில் வெளியான ஸ்ரீ வள்ளி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் விஜயகுமார். எம்ஜிஆர், சிவாஜி ஆகியோருடன் கறுப்பு வெள்ளை சினிமாவில் கொடிகட்டி பறந்த விஜயகுமார், அதன் பின்னர் 80 – 90களில் ரஜினி, கமல் ஆகியோருடன் கைகோர்த்தார். சூப்பர் ஸ்டார் ரஜினியின் நெருங்கிய நண்பராகவும் வலம் வந்த விஜயகுமார், மூன்று தலைமுறை நடிகர்களுடன் நடித்த பெருமைக்குரியவர் என்பது குறிப்பிடத்தக்கது. விஜயகுமார் நடிப்பில் அக்னி நட்சத்திரம், சேரன் பாண்டியன், கிழக்குச் சீமையிலே, நாட்டாமை, நட்புக்காக போன்ற படங்களைக் கூறலாம். சமீபத்தில் கூட மகன் அருண் விஜய், அவரது மகன் அர்னவ் விஜய் ஆகியோருடன் இணைந்து ‘ஓ மை டாக்’ என்ற படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், நடிகர் விஜயகுமார் உடல்நல குறைவால் உயிரிழந்துவிட்டதாக செய்திகள் வெளியாகின. இந்த தகவல் திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பின்னர் விஜயகுமார் உயிரிழந்துவிட்டதாக வெளியான செய்தி வதந்தி என்றும், அது உண்மையில்லை எனவும் சொல்லப்பட்டது. இதனால் குழப்பத்தில் இருந்த ரசிகர்களுக்கு விஜயகுமாரின் மகன் அருண் விஜய் விளக்கம் கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில், “எனது நண்பர்கள், குடும்பத்தினர் ரசிகர்கள் அனைவருக்கும்.. அப்பா வீட்டில் ஆரோக்கியமாக இருக்கிறார். வதந்திகளை நம்ப வேண்டாம்! உங்கள் அக்கறைக்கும் அன்புக்கும் நன்றி!” எனக் குறிப்பிட்டுள்ளார். இதனால் விஜயகுமார் உயிரிழந்துவிட்டதாக வெளியான செய்திகள் உண்மையில்லை என தெரியவந்துள்ளது.