பணி நியமனத்தில் முறைகேடு: மேற்குவங்க அமைச்சரிடம் சி.பி.ஐ. விசாரணை!

பணி நியமனத்தில் முறைகேடு தொடர்பாக மேற்குவங்க தொழில்துறை அமைச்சர் பர்தா சாட்டர்ஜியிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

மேற்குவங்க மாநில மேல்நிலை கல்வி வாரியங்களில் பணி நியமனத்தில் முறை கேட்டில் ஈடுபட்டதாக அம்மாநில தொழில்துறை அமைச்சர் பர்தா சாட்டர்ஜி மீது புகார் எழுந்தது. இது குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும் என கோரி கோல்கட்டா ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கினை விசாரித்த ஐகோர்ட், பணி நியமனங்களில் நடந்த முறைகேடுகள் குறித்து வழக்குப்பதிந்து விசாரிக்க சி.பி.ஐ.,க்கு உத்தரவிட்டது. இதையடுத்து நேரில் ஆஜராக கோரி அமைச்சர் பர்தா சாட்டர்ஜிக்கு சி.பி.ஐ., சம்மன் அனுப்பியிருந்தது. இதையடுத்து நேற்று (மே.18) மாலை சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் 3 மணி நேரத்திற்கு மேல் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.