தமிழகத்தில் 8 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை!

தமிழகத்தில் 8 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை, மயிலாடுதுறை உள்பட தமிழகத்தில் 8 இடங்களில் என்.ஐ.ஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். டெல்லி என்.ஐ.ஏ அதிகாரிகளால் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பான சோதனை என முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. எந்த வழக்கு தொடர்பாக சோதனை என என்.ஐ.ஏ அதிகாரிகள் தரப்பில் இருந்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. என்.ஐ.ஏ அதிகாரிகளால் பதிவு செய்யப்பட்ட வழக்கிற்காக ஆதாரங்களை திரட்டி வருகின்றனர். மயிலாடுதுறையில் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்புடைய 5 பேர் கைது செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய நபர்களுக்கு சொந்தமான இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 5 பேரை, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்திருந்தனர். அதன் தொடர்ச்சியாக தற்போது இந்த சோதனை நடைபெற்று வருவதாக தெரிகிறது. மேலும் டில்லியில் பதியப்பட்ட வழக்கு ஒன்றில் ஆதாரங்களை திரட்டுவதற்காக இந்த சோதனை நடைபெற்று வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சென்னையிலிருந்து வந்திருந்த 5 குழுக்கள் தனித்தனியே இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.