திமுக எம்.பி. கனிமொழிக்கு மீண்டும் கொரோனா!

திமுக எம்.பி. கனிமொழிக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது

நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் வேகமெடுத்து வருகிறது. நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. இதனை கட்டுக்குள் கொண்டு வர மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை அதிகரிக்கும் கொரோனா தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடத்தி அதிகாரிகளை முதல்வர் ஸ்டாலின் அலர்ட் செய்துள்ளார்.
!
இந்த நிலையில், திமுக மகளிரணிச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், இரண்டாம் முறையாக அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மருத்துவர்கள் அறிவுரைப்படி, சென்னையில் உள்ள தனது இல்லத்தில் கனிமொழி தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். கனிமொழி இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, கனிமொழியின் சகோதரரும் முதல்வருமான ஸ்டாலினுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதனால், அவர் தனது இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார். காய்ச்சல் காரணமாக மருத்துவர்கள் ஓய்வு எடுக்குமாறு அறிவுறுத்தி உள்ளதால், முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்வதாக இருந்த அரசு நிகழ்ச்சிகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.