உதய்பூர் கொலை: கொலையாளிக்கு பாஜகவுடன் தொடர்பு?

உதய்பூர் கொலையாளிக்கு பாஜகவுடன் தொடர்பு இருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் நகரிலுள்ள மால்தாஸ் பகுதியில் கன்னையா லால் என்பவர் தையல் கடை நடத்தி வந்தார். அவரது கடையில் அத்துமீறி நுழைந்த 2 பேர் அங்கு வேலை செய்து கொண்டிருந்த கன்னையா லாலை வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்று பொது இடத்தில் வைத்து அவரது தலையை துண்டித்தனர். இந்த சம்பவத்தை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் அவர்கள் வெளியிட்டனர். மேலும் பிரதமர் மோடிக்கும் அவர்கள் கொலை மிரட்டல் விடுத்தனர். இது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த ரியாஸ், கவுஸ் முகமது ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். நபிகள் நாயகம் குறித்து தவறாக கருத்து தெரிவித்த பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்து வெளியிட்டதால் கன்னையா லாலை அவர்கள் படுகொலை செய்ததாக கூறப்படுகிறது.

நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தில் உதய்பூர் கொலை வழக்கில் சிக்கிய 2 பேரில் ஒருவர் பாஜக நிர்வாகிகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டெய்லர் தலையை துண்டித்த ரியாஸ் அட்டாரி, பாஜக சார்பில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் கலந்து கொண்டுள்ளார். மேலும், பாஜக சிறுபான்மை அணி நிர்வாகி தாஹிருடன் நெருங்கிய தொடர்பிலும் அவர் இருந்துள்ளார் எனவும், இர்சாத் சாய்ன்வாலா என்ற பாஜக சிறுபான்மை அணியை சேர்ந்த உள்ளூர் நிர்வாகி தனியார் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.

இந்நிலையில், டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் அக்கட்சியின் செய்தித் தொடா்பாளா் பவன் கேரா, செய்தியாளா்களுக்கு நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

உதய்பூா் தையல்காரா் கன்னையா லாலைக் கொலை செய்த ரியாஸ் அக்தரி பாஜகவைச் சோ்ந்தவா். அவா் உள்ளூா் பாஜக தலைவா்களுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளப் பதிவுகளில் காணப்படுகின்றன. இவற்றை ஒரு ஊடக நிறுவனம் அம்பலப்படுத்தியுள்ளது. இதனால்தான் இந்த வழக்கை மத்தியில் ஆளும் பாஜக அரசு அவசரமாக தேசியப் புலனாய்வு அமைப்பின் விசாரணைக்கு மாற்றம் செய்ததா? என்று கேள்வி எழுப்பினாா்.

தையல்காரா் படுகொலையில் பாஜகவுக்கு நேரடித் தொடா்பு உள்ளது என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளா் அபிஷேக் பானா்ஜி கூறியுள்ளாா். இதுகுறித்து வெளியிட்டுள்ள டுவிட்டா் பதிவில், “மக்கள் ஒற்றுமையாக, நல்லிணக்கமாக வாழ்வதை அவா்கள்(பாஜக) விரும்பவில்லை. அவா்கள் தேசத்தைப் பிரிக்க விரும்புகிறாா்கள். பிளவுபடுத்தும் அரசியலுக்கும் வெறுப்பு பிரசாரத்துக்கும் அவா்களே பொறுப்பாவாா்கள். உதய்பூா் படுகொலையில் பாஜகவுக்கு நேரடித் தொடா்பு உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளாா். தனது குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக புகைப்படங்களையும் பகிா்ந்துள்ளாா்.

இந்நிலையில் ரியாஸ் அக்தரி, பாஜகவைச் சோ்ந்தவா் என்ற காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டுக்கு பாஜக மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாநில பாஜக சிறுபான்மை அணித் தலைவா் முகமது சாதிக் கான் கூறுகையில், “எந்தவொருத் தலைவருடனும் யாா் வேண்டுமானாலும் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். அதனால், அவா் அந்தக் கட்சியைச் சோ்ந்தவா் என்று கூறிவிட முடியாது. ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் பாஜக தலைவா்களுடன் அவா் புகைப்படம் எடுத்துக்கொண்டிருக்கலாம். பிரபலங்களுடன் புகைப்படம் எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிடுவது இயல்பான விஷயம்தான். மாநிலத்தில் கடந்த மூன்றரை ஆண்டுகளில் அசோக் கெலாட் தலைமையிலான அரசு சிறுபான்மையினருக்கு எதையும் செய்யவில்லை. தங்கள் தோல்வியில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவே பாஜக மீது காங்கிரஸ் குற்றம்சாட்டுகிறது” என்றாா்.

இதேபோல் பாஜகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவா் அமித் மாளவியா வெளியிட்டுள்ள டுவிட்டா் பதிவில், “தேசப்பாதுகாப்பு தொடா்பான விவகாரங்களில் மக்களை மூடா்களாக்குவதை காங்கிரஸ் நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளாா்.