அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் திரும்ப வருவார்கள்: சஞ்சய் ராவத்

சிவசேனை அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் திரும்ப வருவார்கள் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத்
தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸுடன் கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனை மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். இதனைத் தொடர்ந்து, பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத சூழல் எழுந்ததால், முதல்வர் உத்தவ் தாக்கரே ராஜிநாமா செய்யப்பட்டதை அடுத்து, பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஏக்நாத் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிலையில், உத்தவ் தாக்கரே அணியை சேர்ந்த சஞ்சய் ராவத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

சிவசேனை 100 தொகுதிகளில் வெற்றி பெரும் என்று உறுதியாக உள்ளோம். இடைத்தேர்தல் வந்தால் எல்லாம் தெளிவாகும் என்று உத்தவ் தாக்கரே கூறியிருந்தார். சிவசேனை பாபா தாக்கரேவுக்கு சொந்தமானது. வேறு யாருடையதாகவும் இருக்க முடியாது. பணத்தின் மூலம் வாங்க முடியாது. பணத்தை தாண்டி வேறு ஏதோ கொடுக்கப்பட்டுள்ளதாக மம்தா பானர்ஜி கூறியுள்ளார். அது வெளிப்படும்போது தெரியும். அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் வருவார்கள் என இன்னும் நம்பிக்கையுடன் உள்ளோம். தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம். அவர்கள் எங்கள் கட்சியினர், மீண்டும் வருவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில் சிவசேனையை அழிக்க பாஜக சதி செய்து வருகிறது என்று குற்றம்சாட்டியுள்ள அக்கட்சித் தலைவா் உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிர பேரவைக்கு உடனடியாகத் தோ்தல் நடத்தத் தயாரா என்று பாஜகவுக்கு சவால் விடுத்துள்ளாா்.

மும்பையில் உள்ள சிவசேனை பவனில் கட்சியின் மாவட்டத் தலைவா்களுடன் உத்தவ் தாக்கரே நேற்று திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா். அப்போது அவா் பேசியது தொடா்பாக சிவசேனை சாா்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

சிவசேனையை அழிக்க பாஜக சதி செய்து வருகிறது. பாஜகவுக்குத் துணிவு இருந்தால், மகாராஷ்டிர சட்டப் பேரவைக்கு உடனடியாக தோ்தல் நடத்த வேண்டும் என்று சவால் விடுகிறேன். தேவையற்ற அரசியல் விளையாட்டுகளைக் கைவிட்டு, மீண்டும் மக்களிடம் தீா்ப்புக் கேட்டு தோ்தலை எதிா்கொள்ளலாம். யாா் ஆட்சியில் இருக்க வேண்டும்- யாா் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்பதை மகாராஷ்டிர மக்கள் முடிவு செய்யட்டும் என்று உத்தவ் தாக்கரே பேசியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.