மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தமிழகம் ஏன் பாதிக்க வேண்டும்?: முதல்வர் ஸ்டாலின்!

நாடாளு​மன்ற தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்​தில், மக்கள் தொகையை கட்டுப்​படுத்திய தமிழகம் ஏன் பாதிக்​கப்பட வேண்​டும் என்று சென்னை​யில் நடைபெற்ற பிறந்​தநாள் விழா பொதுக்​கூட்​டத்​தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்​டா​லின் கேள்வி எழுப்​பினார்.

திமுக தலைவரும் தமிழக முதல்​வருமான மு.க.ஸ்​டா​லினின் 72-வது பிறந்​தநாள் விழா பொதுக்​கூட்டம் சென்னை கொட்​டிவாக்கம் ஒய்எம்சிஏ மைதானத்​தில் நேற்று நடைபெற்​றது. இதற்கு திமுக பொதுச்​செயலாளர் துரை முருகன் தலைமை தாங்​கினார். மு.க.ஸ்​டா​லின் ஏற்புரை​யாற்றி பேசி​ய​தாவது:-

கடந்த 2019-ம் ஆண்டு முதல் கொள்கை கூட்டணி அமைத்து போராடி வருகிறோம். கருத்​தியல் கூட்டணி அமைத்​துள்ள எங்களுக்கு கருத்து மாறு​படுகள் வரும். ஆனால், ஒருபோதும் விரிசல் வராது. நமது ஒற்றுமையை பார்த்து இதில் விரிசல் வராதா என்று சிலர் எதிர்​பார்க்​கலாம். அவர்கள் ஆசையில்​தான் மண் விழும். என்னை முதல்வர் நாற்​காலி​யில் உட்கார வைத்​துள்ள தோழமைக் கட்சி தலைவர்களை எனது இதய மேடை​யில் வைத்​துள்ளேன். நமது ஒற்றுமை, தமிழகத்​தின் உரிமையை, சமூகநீ​தியை, தமிழகத்தை ஏன் ஒட்டுமொத்த இந்தியா​வையே காப்​பாற்றி​யுள்​ளது.

கடந்த 2021-ம் ஆண்டு சட்டப்​பேரவை தேர்​தலில் தப்பித்​தவறி ஒருவேளை அதிமுக-பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்திருந்​தால் தமிழகத்​தின் உரிமைகள் பாஜவிடம் அடகு வைக்​கப்​பட்​டிருக்​கும். பாஜக அதிமுகவை மிரட்டி கபளீகரம் செய்திருக்​கும். இந்த கொடிய சக்தி​களிட​மிருந்து தமிழகத்தை மீட்ட கூட்டணி மதச்​சார்​பற்ற கூட்​டணி. ஒட்டுமொத்த இந்தியா​வுக்கே வழிகாட்டும் கூட்டணி நமது கூட்டணி.

மத்திய அரசு எப்படி​யெல்​லாம் தமிழகத்தை வஞ்சிக்​கலாம் என செயல்​படு​கிறார்​கள். நீட் தேர்வை கொண்டு​வந்​தனர். புயல் வெள்ள நிவராண நிதி தருவ​தில்லை. கல்வியை சீர்​குலைக்க தேசிய கல்விக் கொள்​கையை கொண்டுவர முயற்சிக்​கின்​றனர். நாம் அதை ஏற்க​வில்லை. உடனே கல்விக்கான நிதி தரமாட்​டோம். என்கிறார்​கள். வேதனை​யுடன் சொல்​கிறேன். குழந்தை​களின் கல்விக்​கும் ஆசிரியர்​களின் சம்பளத்​துக்​கும் நிதி தராத கொடூர மனம் படைத்​தோரின் ஆட்சி அதிகாரம் நடக்கிறது.

எங்கள் மீது இந்தியை திணிக்​காதீர்​கள். தாய்​மொழி தமிழ். உலக தொடர்​புக்கு ஆங்கிலம். இது எங்களுக்​குப் போதும். தேவைப்​பட்​டால் இந்தி மொழி அல்ல; அரபு மொழியைக் கூட கற்றுக்​கொள்​வோம். தமிழக முன்னேற்​றத்​துக்கு இருமொழிக் கொள்​கை​தான் காரணம். இதை வடமாநிலத்​தினர் ஏற்றக்​கொள்​கிறார்​கள். அனைத்து மாநிலங்​களுக்​கும் வழிகாட்​டியாக இருப்பது தமிழகம்​தான். எங்களை மிரட்​டி​னாலும் உங்களால் இந்தியை திணிக்க முடியாது. மிரட்​டலுக்கு ஒருபோதும் திமுக அடங்​கிப்​போ​காது.

தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தமிழகத்​தில் தொகு​தி​களின் எண்ணிக்கை குறைக்க முயற்சி செய்​கிறார்​கள். இப்போது பொத்​தாம் பொதுவாக தமிழகத்​தில் எண்ணிக்கை குறையாது என்கிறார்​கள். மற்ற மாநிலங்​களுக்கு தொகு​திகள் எண்ணிக்கை அதிகரிக்​குமா இல்லையா என்பது தெரி​யாது.

மக்கள்​தொகையை கட்டுப்​படுத்திய மாநிலம் ஏன் பாதிக்​கப்பட வேண்​டும். ஏன் இது விஷயமாக பிரதமர் உறுதி அளிக்க​வில்லை. தற்போதைய மக்கள்​தொகை அடிப்​படை​யில் தொகுதி மறுசீரமைப்பு செய்​யப்​படாது. 1971-ம் ஆண்டு மக்கள்​தொகை அடிப்​படை​யில்​தான் மேற்​கொள்​ளப்​படும் என்று உறுதி கொடுங்​கள். இந்த விவகாரத்​தில் உரிமை குரலை தெலங்​கானா, கர்நாடகா மாநிலங்கள் எழுப்​பி​யுள்ளன. மற்ற மாநிலங்​களும் குரல் கொடுக்க வேண்​டும். இதுதொடர்பான அனைத்து கட்சி கூட்​டத்​தில் தமிழக பாஜக​வும் பங்கேற்று தமிழகத்​துக்கு துணையாக இருக்க வேண்​டும். அதன்​மூலம்​தான் நமது உரிமைகளை வென்​றெடுக்க முடி​யும். இவ்வாறு பேசினார்.

விழா​வில், திரா​விடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழக காங்​கிரஸ் தலைவர் செல்​வப்​பெருந்​தகை, மதிமுக பொதுச்​செய​லாளர் வைகோ, மார்க்​சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ.சண்​முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி​யின் மாநிலச் செயலாளர் இரா.​முத்​தரசன், இந்திய யூனியன் முஸ்​லிம் லீக் தலைவர் கே.காதர்​மொகிதீன், விசிக தலைவர் திரு​மாவளவன், மக்கள் நீதி மய்யம் கட்சி பொதுச்​செய​லாளர் ஆ.அருணாச்​சலம், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச். ஜவா ஹிருல்லா, கொமதேக பொதுச்​செய​லாளர் ஈ.ஆர்​.ஈஸ்​வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்​முரு​கன், திரா​விடர் இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீர​பாண்​டியன் ஆகியோர் பங்கேற்​றனர்.