பாஜகவும், அவர்கள் ஏஜென்ட்களுமே மொழி திணிப்பை ஆதரிக்கின்றனர்: முதல்வர் ஸ்டாலின்!

பாஜக ஆட்­சி­யா­ளர்­க­ளும் அவர்­க­ளின் ஏஜென்ட்­டு­க­ளும் மட்­டுமே மொழித் திணிப்பை ஆதரித்து பேசி வருவதாக ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சை குறிப்பிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

எந்த மொழி மீதும் தமி­ழர்­க­ளுக்கும் தமிழகத்துக்கும் தனிப்­பட்ட வெறுப்பு ஒருபோதும் இருந்­த­தில்லை. அதேநேரம், எந்த மொழி­யா­வது திணிக்­கப்­பட்­டால் தமிழகம் போராட்­டக் களம் காணா­மல் இருந்­த­தில்லை, தேசிய கல்­விக் கொள்கை வழி­யாக மும்­மொ­ழித் திட்டம் என்ற பெய­ரில் இந்­தி­யைத் திணிக்­கும் மத்திய பாஜக அர­சின் சதி­யை உணர்ந்­து­தான் ஒட்­டு­மொத்த தமிழகமும் அதனை எதிர்க்­கி­றது.

தமி­ழுக்­கும் தமி­ழர்­க­ளுக்­கும் எதி­ரா­கவே என்­றென்­றும் சிந்­திப்­ப­தை­யும், தமிழகத்தைத் தொடர்ந்து வஞ்­சிப்­பதை­யுமே தமது கொள்­கை­யா­கக் கொண்­டி­ருக்­கிற பாஜக ஆட்­சி­யா­ளர்­க­ளும் அவர்­க­ளின் ஏஜென்ட்­டு­க­ளும் மட்­டுமே மொழித் திணிப்பை ஆதரித்து பேசுகின்றனர். ஆளு­நர் ஆர்.என்.ரவி அதுபோலப் பேசி­யி­ருப்­பது புதி­ய­துமல்ல; பொருட்­ப­டுத்த வேண்­டி­ய­து­மல்ல.

ஆடு நனை­கி­றதே என்று ஓநாய் அழுத கதை­யாக, தமிழகத்தின் இருமொழிக் கொள்­கை­யால் விரும்பிய மொழி­க­ளைப் படிக்­கும் வாய்ப்பு தமிழக இளை­ஞர்­க­ளுக்கு கிடைக்­க­வில்லை என்கிறார் ஆளுநர். உத்­த­ரப்­பி­ர­தே­சம், மத்­தி­யப்­பி­ர­தே­சம், பிஹார் என பாஜகவும், பாஜக கூட்­ட­ணி­யும் ஆட்சி செய்­யும் வடஇந்­திய மாநி­லங்­க­ளில் எத்­தனை வட­இந்­திய மொழி­க­ளைப் பள்­ளி­க­ளில் கற்­றுத் தரு­கி­றார்­கள்? என்றால், ஆளு­ந­ரி­ட­மும், அவரைப் பேச வைப்பவர்களிடமும் பதில் இருக்­காது.

இந்தி ஆதிக்­கத்­தால் தனது சொந்த மாநி­லங்­க­ளி­லேயே 25-க்கும் மேற்­பட்ட வடஇந்­திய மொழி­கள் பேச்­சு ­வழக்­கை­யும், எழுத்து வடி­வத்­தை­யும் இழந்து அழிந்து போன­தை­யும், அழி­வின் விளிம்­பில் இருப்­ப­தை­யும் கூறியிருந்தேன். இதை வடமாநிலங்களைச் சேர்ந்தவர்களே ஆதரித்துள்ளனர்.

அண்ணாவால் கொண்­டு­வ­ரப்­பட்ட இரு­மொ­ழிக் கொள்­கை­யால் தமிழகம் இன்று பல துறை­க­ளி­லும் அடைந்­துள்ள வளர்ச்­சி­யை­யும், தமி­ழர்­கள் உல­க­ளா­விய அள­வில் மிகப்­பெ­ரிய நிறு­வ­னங்­க­ளில் உயர்ந்த பொறுப்­பு­க­ளில் இருப்­ப­தை­யும் பிற மாநில மக்­க­ளும் உணர்ந்து, தங்­கள் முன்­னேற்­றத்துக்கான வழி­யைக் காணும் விழிப்­பு­ணர்­வைப் பெற்று வரு­கின்றனர்.

இந்தி படித்­தால் வட­மா­நி­லங்­க­ளில் தமி­ழர்­க­ளுக்கு வேலை கிடைக்­கும் என்ற பிம்­பத்துக்கு மாறாக, இந்தி மட்­டுமே அறிந்த, அதை மட்­டுமே படித்த வட­மா­நி­லத்தவர், தமிழகத்துக்கு வேலைதேடி வரக்­கூ­டிய வகை­யில் இரு­மொழிக் கொள்கை நம் மாநி­லத்தை உயர்த்­தி­யி­ருக்­கி­றது. ஆளுநரும் தமிழக மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெற்று நிர்வாக வேலை பார்ப்பவர்தான்.

இந்­தி­தான் இந்­தி­யா­வின் தேசிய மொழி என்­றும், சமஸ்­கி­ரு­தமே இந்­தி­யா­வின் முதன்மை மொழி என்­றும் சொல்­லி­ இ­ரண்­டை­யும் திணிக்க நினைக்கின்றனர். அவர்­கள் சொல்­கின்ற இரண்­டுமே வடி­கட்­டிய பொய் என்­பதை வர­லாறு சொல்­கி­றது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.