சாதியில்லா சமூகம் அமைக்க உறுதியுடன் உழைப்போம்: உதயநிதி ஸ்டாலின்!

‘காலனி’ எனும் சொல்லை திராவிட மாடல் அரசு. நீக்கவிருக்கிறது. சாதியில்லா சமூகம் அமைக்க உறுதியுடன் உழைப்போம் என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளதாவது:-

பெயர்களில் இருந்த சாதி ஒட்டினை ஒழித்த திராவிட இயக்கத்தின் வழியில், ஊர்களில் இருக்கும் ‘காலனி’ எனும் சாதிய அடக்குமுறைச் சொல்லை நீக்கவிருக்கிறது நம் திராவிட மாடல் அரசு.

முதல்-அமைச்சர் மு.க .ஸ்டாலினின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை மனதார வரவேற்கிறோம்.ஈராயிரம் ஆண்டுகள் இறுகிப்போய் இருக்கும் சாதியை வீழ்த்துவதற்கான பயணத்தில் முக்கிய மைல்கல் இது. சமத்துவம் தழைக்க – சாதியில்லா சமூகம் அமைக்க என்றும் உறுதியுடன் உழைப்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.