மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘பைசன்’ அப்டேட்!

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான பைசன் திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

மாமன்னன், வாழை படங்களைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் கபடி விளையாட்டை மையமாக வைத்து பைசன் என்கிற படத்தை உருவாக்கி வருகிறார். இதில் நாயகனாக துருவ் விக்ரமும் நாயகியாக அனுபமா பரமேஸ்வரனும் நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி சுற்று வட்டாரப் பகுதியில் நடைபெற்று அண்மையில் நிறைவடைந்தது.

இந்த நிலையில், இப்படத்தின் முக்கிய அப்டேட் நாளை (மே. 3) மாலை 6 மணிக்கு வெளியாகும் என மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.