தவறாகிவிட்டது, ஏமாந்துவிட்டார்கள், ஏமாற்றிவிட்டார்கள்: ராகுல் காந்தி

பிரதமரே, இந்தியாவின் வேலையற்ற இளைஞர்கள் உங்கள் பொய்களுக்கு இந்த அன்பார்லிமென்டரி வார்த்தைகளைப் பயன்படுத்தலாமா? என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

நாட்டில் வேலையின்மை திண்டாட்டம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தாக்கி பேசினார். 2017-18 முதல் 2021-22 வரையிலான ஐந்து ஆண்டுகளில் வேலையின்மை இரு மடங்காக அதிகரித்துள்ளதாக இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம் தரவுகளின் அடிப்படையில் ஒரு வரைபடத்தைப் டுவிட்டரில் பகிர்ந்துள்ளார் ராகுல் காந்தி. மேலும் அதனுடன் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

கடந்த ஐந்தாண்டுகளில் வேலையில்லாத் திண்டாட்டத்தின் சதவீதத்தை இந்த வரைபடம் காட்டுகிறது. பிரதமரே, ஆண்டுக்கு 2 கோடி வேலைகள் எங்கே? தவறாகிவிட்டது. ஏமாந்துவிட்டார்கள். ஏமாற்றிவிட்டார்கள். பிரதமரே, இந்தியாவின் வேலையற்ற இளைஞர்கள் உங்கள் பொய்களுக்கு இந்த அன்பார்லிமென்டரி வார்த்தைகளைப் பயன்படுத்தலாமா? என்று குறிப்பிட்டிருந்தார்.