பழனி முருகன் கோவிலில் நயன்தாரா- விக்னேஷ் சிவன் சாமி தரிசனம்!

பழனி முருகன் கோவிலில் நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதி தங்களது குழந்தைகளுடன் சாமி தரிசனம் செய்தனர்.

தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடியான நடிகை நயன்தாரா- இயக்குனர் விக்னேஷ் சிவன் தம்பதி ‘ரவுடி பிக்சர்ஸ்’ என்ற பெயரில் சினிமா தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி அலங்காரப் பொருட்கள், நாப்கின் விற்பனை உள்பட பல்வேறு தொழில்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இதனிடையே, நயன்தாரா சமீபத்தில் ‘டெஸ்ட்’ படத்தில் நடித்திருந்தார். இந்த படம் நேரடியாக ஓடிடியில் வெளியானது. மேலும், இயக்குனர் விக்னேஷ் பிரதீப் ரங்கநாதனை வைத்து ‘எல்ஐகே’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இப்படி நடிப்பு, இயக்கம் என பிசியாக இருக்கும் இந்த நட்சத்திர தம்பதி தங்கள் குழந்தைகளுடன் நேரம் செலவிடும் தொடர்பான வீடியோவையும் அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பழனி முருகன் கோவிலில் நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதி தங்களது குழந்தைகளுடன் சாமி தரிசனம் செய்தனர். இதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.