எஸ்சி மாணவர் விடுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்: எல்.முருகன்!

தமிழகத்​தில் உள்ள ஆதி​தி​ரா​விடர் மாணவர் விடு​தி​களில் அடிப்​படை வசதி​களை போர்க்​கால அடிப்​படை​யில் மேம்படுத்த வேண்​டும் மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​கன் வலி​யுறுத்தி உள்​ளார்.

இதுகுறித்து எல்​.​முரு​கன் வெளி​யிட்​டுள்ள அறிக்​கையில் கூறியுள்ளதாவது:​-

திரா​விட மாடல் ஆட்​சி​யில், பட்​டியலின மக்​கள் படும் துன்​பங்​கள் ஒன்றா இரண்​டா? எதற்​கு​தான் இது​வரை தீர்வு கிடைத்​துள்​ளது? தமிழகத்​தில் 445 கிராமங்​களில் தீண்​டா​மைக் கொடுமை நில​வுவ​தாக அடை​யாளம் காணப்​பட்​டுள்​ளது. ‘காலனி’ என்ற சொல்லை நீக்​கப் போவ​தாக கூறி முதல்​வர் ஒரு நாடகம் நடத்​தி​னார். இப்​போது சமூக நீதி விடுதி நாடகம் நடத்​துகிறார்.

பள்ளி மற்​றும் கல்​லூரி மாணவர்​களுக்கு விதி​களின்​படி, உணவுப்​படி வழங்க வேண்​டும். இதுத​விர பண்​டிகை காலங்​களில் சிறப்பு உணவு வழங்க சிறப்பு நிதி​யும், சோப்​பு, எண்​ணெய் போன்ற தினசரி பயன்​படுத்​தும் பொருட்​கள் வாங்​கு​வதற்கு மாதம்​தோறும் நிதியும் வழங்க வேண்​டும். ஆனால் நிலைமை என்ன? தமிழகத்​தில் உள்ள விடு​தி​களில் எந்த ஒரு அடிப்​படை வசதி​யும் கிடை​யாது.

விடுதி வசதி சரி​யாக இல்லை என பட்​டியலின பழங்​குடி​யின மாணவ, மாண​வியர் சாலைக்கு வந்து போராடிக் கொண்டிருக்கின்றனர். மத்​திய அரசிடம் இருந்து பட்​டியலின மக்​களுக்கு வரும் மத்​திய நிதி​யை, ஆதி திரா​விடர் நலத்​துறைக்கு முழு​மை​யாகப் பயன்​படுத்​தாமல் ஒவ்​வொரு ஆண்​டும் பெரும்​பாலான நிதி திருப்பி அனுப்​பப்​படு​கிறது.

எனவே, தமிழகம் முழு​வதும் சிறப்​புக் குழு அமைத்​து, ஆதி​தி​ரா​விட மாணவ, மாணவி​களின் விடு​தி​களில் போர்க்​கால அடிப்​படையில் ஆய்​வு​கள் மேற்​கொண்​டு, உணவு, சுகா​தா​ரம் மற்​றும் அடிப்​படை வசதி​களை தமிழக அரசு மேம்​படுத்த வேண்​டும்​. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

இந்நிலையில் மேட்டுப்பாளையத்தில் உள்ள முகாம் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் எல்​.​முரு​கன் கூறியதாவது:-

தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீரழிந்துவிட்டது. முதல்வர் மற்றும் துணை முதல்வரைச் சுற்றியுள்ள நபர்களின் ஆட்சி ராஜ்ஜியம் தான் தமிழகத்தில் நடக்கிறது. டாஸ்மாக், மணல் கொள்ளை, பத்திரப் பதிவு, கனிம வளம் என அவர்களுக்கு பிரித்து வழங்கப்பட்டுள்ளது.

சமூக நீதி விடுதிகள் என பதிவிடும் முதல்வர், இதுவரை எந்த விடுதியையும் நேரில் சென்று பார்வையிடவில்லை. தமிழகத்தில் பல்வேறு குறைபாடுகளுடன் சமூக நல விடுதிகள் இயங்கி வருகின்றன. தவெக தலைவர் விஜய் தற்போது வெளியில் வந்து மூன்று நிமிடங்கள் பேசியுள்ளார். அவரது நடவடிக்கைகளை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி தலைமையில் எங்கள் கூட்டணி வலுவாக உள்ளது. ஆனால், திமுக கூட்டணி விரைவில் உடைந்து விடும்.

தமிழகத்துக்கு வழங்க வேண்டிய அனைத்து நிதிகளையும் முழுமையாக மத்திய அரசு வழங்கியுள்ளது. தமிழக அரசு பெறப்பட்ட நிதியை முறையாக பயன்படுத்தாமல் திருப்பி அனுப்பியுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.