பாதுகாப்புக் கோரி உச்ச நீதிமன்றத்தில் நுபுர் ஷர்மா மனுதாக்கல்!

பாஜகவிலிருந்து நீக்கப்பட்ட நுபுர் ஷர்மா, முகமது நபியைப் பற்றி பேசி தொடுக்கப்பட்ட வழக்குகளில் கைது செய்யப்படுவதில் இருந்து பாதுகாப்புக் கோரி உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தார்.

நுபுர் ஷர்மா ஜூலை 1 அன்று உச்ச நீதிமன்ற அமர்வு தெரிவித்த கருத்துக்களுக்கு விளக்கம் கோரினார். இது வரிசையாக எப்.ஐ.ஆர்.களை இணைப்பதற்கான மனுவைத் திரும்பப் பெற வழிவகுத்தது. நுபுர் ஷர்மா, நபிகள் நாயகத்திற்கு எதிரான அவதூறான அறிக்கைக்காக ஒன்பது எஃப்.ஐ.ஆர்களை எதிர்கொள்கிறார். அவரது கருத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தின் கடுமையான விமர்சனத்திற்குப் பிறகு, தானும் அவரது குடும்பத்தினரும் தொடர்ந்து கற்பழிப்பு மற்றும் கொலை மிரட்டல்களைப் பெறுவதாகக் கூறி உச்சநீதிமன்றம் சென்றார். உச்ச நீதிமன்றம் நுபுர் ஷர்மாவை சரமாரியாக விமர்சித்தது. அவர் நபிக்கு எதிரான கருத்துக்களால் நாட்டைப் பற்றவைப்பதாகவும், சமூக கட்டமைப்பை சேதப்படுத்தியதாகவும் குற்றம் சாட்டியது.

தொலைக்காட்சி விவாதத்தின் போது அவர் கூறிய கருத்துகள் குறித்து பெஞ்ச் கூறியது, “அவர் முழு நாட்டையும் பற்றவைத்த விதம்… இன்னும் அந்தந்த உயர் நீதிமன்றங்களை அணுகுவதற்குப் பதிலாக இந்த நீதிமன்றத்திற்கு வந்து நிவாரணம் கேட்க அவருக்கு தைரியம் உள்ளது. நாடு முழுவதும் பற்றி எரிய இந்தப் பெண் ஒருவரே பொறுப்பு” என்றது நீதிபதிகள் அமர்வு.

இந்நிலையில் முகமது நபியைப் பற்றி பேசி தொடுக்கப்பட்ட வழக்குகளில் கைது செய்யப்படுவதில் இருந்து பாதுகாப்புக் கோரி உச்ச நீதிமன்றத்தில் நேற்று திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தார்.