தேர்தல் வருவதால் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்: எடப்பாடி பழனிசாமி!

தி​முக அரசு 4 ஆண்​டு​களாக மக்​களைப் பற்றி சிந்​திக்​காமல், தேர்​தல் வரு​வ​தால் ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ திட்டத்தை கொண்டு வந்​துள்​ளது என்று அதி​முக பொதுச் செய​லா​ளர் எடப்பாடி பழனி​சாமி கூறி​னார்.

‘மக்​களை காப்​போம், தமிழகத்தை மீட்​போம்’ என்ற பிரச்​சா​ரத்தை மேற்​கொண்டு வரும் அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி, புதுக்​கோட்டை அண்ணா சிலை பகு​தி​யில் நேற்று பொது​மக்​களிடையே பேசி​ய​தாவது:-

அதி​முக ஆட்​சி​யின்​போது கொரோனா பரவல், வறட்​சி, கஜா புயல் பாதிப்பு இருந்​த​போதும் விலை​வாசி கட்​டுக்​குள் இருந்​தது. ஆனால், திமுக ஆட்​சி​யில் விலை​வாசி பன்​மடங்கு உயர்ந்​து ​விட்​டது. மின் கட்​ட​ணம் 67 சதவீதம் உயர்த்​தப்​பட்​டுள்​ளது. இதனால் தமிழகத்​துக்கு வரவேண்​டிய தொழிற்​சாலைகள் அண்டை மாநிலங்​களுக்​குச் சென்​று​விட்​டன. மயி​லாடு​துறை​யில் நேர்மையாகப் பணிபுரிந்த டிஎஸ்பி சஸ்​பெண்ட் செய்​யப்​பட்​டுள்​ளார்.

திருச்​சி​யில் டிஎஸ்பி மன உளைச்சலால் ராஜி​னாமா செய்​யப்​போவ​தாக கூறி​யுள்​ளார். காவல் துறை​யில் பணிபுரிவோருக்கே பாதுகாப்பு இல்லை எனும்போது, பொது​மக்​களின் நிலை என்ன? கடந்த 4 ஆண்​டு​களாக மக்​களைப் பற்றி சிந்​திக்​காமல், தேர்​தல் வரப்​போகிறது என்பதற்காக ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ திட்​டத்​தைக் கொண்​டு​வந்​துள்​ளனர். இவ்​வாறு பழனி​சாமி பேசி​னார்.

தொடர்ந்​து, திரு​ம​யம், விராலிமலை​யில் பிரச்​சா​ரம் மேற்​கொண்​டார். முன்​ன​தாக, புதுக்​கோட்​டை​யில் விவ​சா​யிகள், வணி​கர்​கள், நகைக்​கடை உரிமை​யாளர்​கள், மீனவர்​களை சந்​தித்து கலந்​துரை​யாடி​னார்.