டெல்லியில் மத்திய அமைச்சர் கட்கரியுடன் அண்ணாமலை சந்திப்பு!

டெல்​லி​யில் மத்​திய அமைச்​சர் நிதின் கட்​கரியை சந்​தித்த அண்​ணா​மலை, தமிழகத்​தில் நடந்​து​வரும் தேசிய நெடுஞ்​சாலை திட்​டங்​கள் தொடர்​பான மக்​களின் கோரிக்​கைகளை தெரி​வித்​தார். மேலும், கூட்​டணி நில​வரம் குறித்து பாஜக மூத்த தலை​வர்​களு​டன் ஆலோ​சனை நடத்​தி​னார்.

தமிழக பாஜக தலை​வர் பொறுப்​பில் இருந்து விடுவிக்​கப்​பட்ட அண்​ணா​மலைக்கு தேசிய அளவில் முக்​கிய பொறுப்பு வழங்​கப்​படும் என்று மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா தெரி​வித்​திருந்​தார். அண்​ணா​மலைக்கு பாஜக​வின் தேசிய பொதுச் செய​லா​ளர் பொறுப்பு வழங்​கப்​படலாம் என்று கட்சி வட்​டாரத்​தில் தொடர்ந்து கூறப்​பட்டு வரு​கிறது. இதற்​கிடையே, தமிழகத்​தில் கட்சி சார்ந்த பல்​வேறு நிகழ்ச்​சிகளி​லும் அண்​ணா​மலை பங்​கேற்று வரு​கிறார்.

இந்​நிலை​யில், அண்​ணா​மலை நேற்று விமானம் மூலம் கோவை​யில் இருந்து சென்னை வந்​து, பின்​னர் டெல்லி புறப்​பட்டு சென்​றார். டெல்​லி​யில் மத்​திய சாலைப் போக்​கு​வரத்​து, நெடுஞ்​சாலைகள் துறை அமைச்​சர் நிதின் கட்​கரியை சந்தித்​தார். திருப்​பூர், ஈரோடு மாவட்​டங்​களில் நடந்து வரும் தேசிய நெடுஞ்​சாலைப் பணி​கள் தொடர்​பாக அப்​பகுதி கிராம மக்​களின் கோரிக்​கைகளை அமைச்​சரிடம் தெரி​வித்​தார். அப்​போது, மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​கன் உள்​ளிட்​டோரும் உடன் இருந்​தனர்.

இதைத் தொடர்ந்​து, கட்​சி​யின் முக்​கிய தேசிய தலை​வர்​களை​யும் அண்​ணா​மலை சந்​தித்​துள்​ளார். இந்த சந்​திப்​பின்​போது, அண்ணா​மலைக்கு வழங்​கப்பட இருக்​கும் தேசிய அளவி​லான பொறுப்​பு, தமிழக அரசி​யல் நில​வரம், ஓ.பன்​னீர்​செல்​வம் மற்​றும் கூட்​டணி விவ​காரங்​கள், பிரதமரின் திரு​வண்​ணா​மலை பயணம் உள்​ளிட்​டவை குறித்து அவர் ஆலோ​சித்​த​தாகக் கூறப்​படுகிறது.

இந்நிலையில் அண்ணாமலை எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது:-

இன்றைய தினம், புதுடெல்லியில், நமது மாண்புமிகு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி அவர்களை, நமது மாண்புமிகு மத்திய இணையமைச்சர் திரு எல். முருகன் அவர்களுடன் சென்று சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திரமோடி அவர்களின் தொலைநோக்குப் பார்வையிலான தலைமையின் கீழ், கடந்த பத்து ஆண்டுகளில், தமிழகம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள் மேம்படுத்தப்பட்டிருப்பதற்கு, எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டோம்.

இந்தச் சந்திப்பில், மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அக்கா திருமதி dk.சரஸ்வதி அவர்கள், ஈரோடு தெற்கு மாவட்டத் தலைவர் திரு SM செந்தில் அவர்கள், முன்னாள் மாவட்டத் தலைவர்கள் திரு. வேதானந்தம் அவர்கள் மற்றும் திரு சிவசுப்பிரமணியம் அவர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

மாண்புமிகு மத்திய அமைச்சர் அவர்களிடம், நமது விவசாயிகள், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் கிராம மக்கள் சார்பாக, ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்கள் வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண் 381A ல் திட்டமிடப்பட்டுள்ள சீரமைப்புப் பணிகளை, பொதுமக்கள் பாதிக்கப்படாதவாறு மறுபரிசீலனை செய்ய, தாழ்மையுடன் கோரிக்கை வைத்தோம்.

தேசிய நெடுஞ்சாலை எண் 381A ல், தற்போதைய திட்டப்படி சீரமைப்புப் பணிகள் மேற்கொண்டால், ஈரோடு மாவட்டத்தில் உள்ள, நஞ்சை ஊத்துக்குளி, கருந்தேவன்பாளையம், சின்னியம்பாளையம், முத்துகவுண்டன்பாளையம், உஞ்சப்பாபாளையம், எம்.வேலம்பாளையம், ஆவரங்காட்டு வலசு, அய்யகவுண்டன் பாளையம், மேட்டுப் பாளையம், முத்தையன் வலசு, எல்லாக்கடை, பாரப்பாளையம், T.R. புதூர், விஜய நகரம், உச்சிமேடு மற்றும் மொல்லப்பாளையம் போன்ற பல கிராமங்கள் வழியாக செல்கிறது. திருப்பூர் மாவட்டத்தில், வெள்ளக்கோவில், சேனாதிபாளையம், வேலம்பாளையம், மேட்டுப்பாளையம், சின்னமுத்தூர் உள்ளிட்ட கிராமங்களும் பாதிக்கப்படுகின்றன.

மாண்புமிகு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி
அவர்களிடம், இவை குறித்த பொதுமக்களின் கவலைகளைத் தெரிவித்தபோது, அவர் மிகுந்த பொறுமையுடன் அனைத்தையும் கேட்டும் கொண்டார். மேலும் பொதுமக்களின் நெடுஞ்சாலை மறுசீரமைப்பு கோரிக்கை தொடர்பாக மறுஆய்வு செய்து பதிலளிப்பதாக உறுதியளித்திருக்கிறார். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.