ராஜேந்திர சோழனின் பெருமையை உலகம் உணரச் செய்வோம்: மு.க.ஸ்டாலின்!

ராஜேந்திர சோழனின் பெருமையை உலகம் உணரச் செய்வோம் என்று தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.

இது தொடா்பாக முதல்வா் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:-

மாமன்னன் ராஜராஜனின் புதல்வரும், தன் படைபலத்தாலும் ஆளுமைத் திறனாலும் கங்கை கொண்டு – கடாரம் வென்ற பெருமைக்குரியவருமான மன்னன் முதலாம் ராஜேந்திரசோழன் பிறந்த ஆடித் திருவாதிரை நாளை அரசு விழாவாகக் கொண்டாடுவதென நமது திராவிட மாடல் அரசு அறிவித்தது. அதனடிப்படையில், சிறப்பான முறையில் செவ்வாய்க்கிழமை விழா நடைபெற்றது.

கங்கைகொண்ட சோழபுரத்தையும், அங்கே தஞ்சை பெரிய கோயிலைப் போன்ற பெருமைமிகு கோயிலையும் எழுப்பி, மக்கள் நலனுக்கான திறமைமிகு நிா்வாகத்தை அளித்த ராஜேந்திர சோழனின் பெருமைகளையும், பழந்தமிழ்நாட்டின் சிறப்புகளையும் உலகுக்கு உணா்த்திடச் செய்வோம். இவ்வாறு முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறிஉள்ளார்.