சர்தார் பட இயக்குநர் பிஎஸ் மித்ரனுக்கு சமூக பொறுப்பு இருக்கு: சீமான்

கார்த்தி நடிப்பில் வெளியாகியுள்ள சர்தார் படத்தை புகழ்ந்து பேசியுள்ளார் சீமான்.

பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்துள்ள திரைப்படம் சர்தார். இந்தப் படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது சர்தார் திரைப்படம். இந்நிலையில் சர்தார் படத்தை இயக்குநரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் புகழ்ந்து பேசியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

சர்தார் படத்தை பார்த்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய சீமான், இதை படம் என்று சொல்ல முடியாது படிப்பு என்றுதான் சொல்ல வேண்டும். இந்த கருத்தை வலியுறுத்தி நான் பேசியிருக்கிறேன். தண்ணீர் மிகப்பெரிய வியாபாரா பொருளா மாற்றப்பட்டு வருகிறது. இது எவ்வளவு பெரிய பேராபத்து என்பது புரியவரும். இந்த படம் அதை அழமாக கூறியிருக்கிறது. இப்படி ஒரு படத்தை தயாரித்தது பெரிய விஷயம். இயக்குநர் பிஎஸ் மித்ரனுக்கு சமூக பொறுப்பு இருக்கு. படத்தில் அனைத்தும் நேர்த்தியாக உள்ளது. கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். அவருக்கும் இது நல்ல படம் என தெரிவித்துள்ளார் சீமான்.