சுந்தர்.சி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் 2 படபூஜை மூலம் தொடங்கியது!

தமிழ் திரையுலகின் முன்னணி படத் தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் ஐவி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், அவ்னி சினிமேக்ஸ் (பி) லிமிடட் நிறுவனம் மற்றும் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் இணை தயாரிப்பில் இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில், நடிகை நயன்தாரா நடிப்பில் ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம் பிரமாண்டமாக உருவாகவுள்ளது. இதற்கான படபூஜை இன்று(மார்ச் 6) நடந்தது. குறிப்பாக,1 கோடி ரூபாயில் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட அரங்கில், படக்குழுவினருடன், திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, இப்படத்தின் பூஜை நடைபெற்றது. இந்நிகழ்வினில் பல முன்னணி பிரபலங்களுடன், படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் முதல் பாகத்தை விட பல மடங்கு பிரமாண்டமாக, இப்படத்தை 100 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கிறார்கள். தனது தனித்துவமான காமெடி எண்டர்டெயினர் படங்கள் மூலம், ரசிகர்களைத் தொடர்ந்து மகிழ்வித்து வரும் இயக்குநர் சுந்தர் சி. இப்படத்தை இயக்குகிறார். இப்படம் அழுத்தமான கதையுடன், வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் காமெடி எண்டர்டெயினராக உருவாகவுள்ளது. இயக்குநர் சுந்தர் சி, நயன்தாரா இருவரும் முதல்முறையாக இணைந்திருப்பது, ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

நயன்தாரா முதன்மை வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் துனியா விஜய், ரெஜினா கஸண்ட்ரா, யோகி பாபு, ஊர்வசி, அபிநயா, ராமச்சந்திர ராஜு, அஜய் கோஷ், சிங்கம்புலி, விச்சு விஸ்வநாத், இனியா, மைனா நந்தினி ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார். தொழில் நுட்பக்குழுவில், கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்ய, ஃபென்னி ஆலிவர் எடிட்டிங் புரிய, வெங்கட் ராகவன் வசனம் மற்றும் கலை இயக்கத்தை பொன்ராஜ் செய்கிறார். குறிப்பாக, சண்டைப்பயிற்சி ராஜசேகர் செய்கிறார்.