கமல்ஹாசன் கருத்துக்கு கன்னட நடிகர் சிவராஜ்குமார் ஆதரவு!

சென்​னை​யில் அண்​மை​யில் நடை​பெற்ற ‘தக் லைஃப்’ திரைப்​படத்​தின் இசை வெளி​யீட்டு விழா​வில் நடிகரும் மக்​கள் நீதி மய்​யத்​தின் தலை​வரு​மான கமல்​ஹாசன் பேசும்​போது, “தமிழில் இருந்து பிறந்​தது​தான் கன்​னடம்​”என குறிப்​பிட்​டார். இதற்கு கர்​நாடக முதல்​வர் சித்​த​ராமை​யா, பாஜக மாநில தலை​வர் விஜயேந்​திரா மற்றும் கன்னட அமைப்​பினர் கடும் எதிர்ப்பு தெரி​வித்​தனர்.

இந்​நிலை​யில் நேற்று பெங்​களூரு​வில் நடந்த நிகழ்ச்சி ஒன்​றில் நடிகர் சிவ​ராஜ் குமார் பேசி​ய​தாவது:-

கன்னட மொழி மீதும் பெங்​களூரு மாநகரின் மீதும் கமல்​ஹாசன் மிகுந்த மதிப்பு கொண்​டிருக்​கிறார். நான் அவருடைய பெரிய ரசிகன். இந்தவிவ​காரம் குறித்து 100 சதவீதம் உரிய விளக்​கத்தை கொடுப்​பார். கன்னட மொழி​யின் மீதான‌ பாசம் என்​பது வாழ்க்கை முழு​வதும் இருக்க வேண்​டும். எங்கு சென்​றாலும் கன்​னடத்தை நேசிக்க வேண்​டும். கேமரா முன்​பாக மட்​டும் நேசிக்க கூடாது. வெறும் பேச்​சுக்​காக கன்னட பாசத்தை கேமரா முன்​பாக காட்ட கூடாது.

இங்கே கன்​னடத்​துக்​காக பேசுவ​தாக சொல்​பவர்​கள் கன்னட திரை​யுல​குக்கு என்ன செய்​தார்​கள் என யோசித்து பார்க்க வேண்​டும். பத்​திரி​கை​யாளர்​கள் பெரிய நடிகர்​களின் படத்​துக்கு மட்​டும் ஆதர​வாக செயல்​படு​கிறார்கள். புதிய நடிகர்​களின் படங்​களுக்கு முன்​னுரிமை கொடுக்​கிறார்​களா? கமல்​ஹாசன் ஏற்​கெ​னவே கன்னட திரை​யுல​குக்கு நிறைய பங்​களிப்பு செய்​துள்​ளார். அவரை பற்றி நிறைய பேச வேண்​டிய​தில்​லை. இவ்​வாறு அவர்​ தெரி​வித்​தார்​.