விஜயகாந்த் உடல்நலம் குறித்து பிரதமர் மோடி நலம் விசாரிப்பு!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலம் குறித்து பிரேமலதாவிடம் பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்தார்.

நடிகரும் தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ரத்த ஓட்டம் சீராக இல்லாத காரணத்தால் வலது கால் விரல் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக தே.மு.தி.க. வெளியிட்ட அறிக்கையில், நீண்ட ஆண்டுகளாக இருக்கும் நீரிழிவு பிரச்சினையால் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் வலது காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் டாக்டரின் ஆலோசனைப்படி விரல் அகற்றப்பட்டது. மருத்துவர்களின் கண்காணிப்பில் அவர் நலமாக இருக்கிறார். சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் விஜயகாந்த் வீடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலம் குறித்து பிரேமலதாவிடம் பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்தார். விஜயகாந்துக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் பிரதமர் மோடி தொலைபேசியில் கேட்டறிந்துள்ளார். மேலும், விஜயகாந்த் விரைவில் குணமடைந்து ஆரோக்கியமாக வாழ பிரார்த்தனை செய்வதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

மேலும் விஜயகாந்த் விரைவில் பூரண குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்து உள்ளார். விஜயகாந்த் உடல்நிலை குறித்து பிரேமலதா விஜயகாந்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விஜயகாந்தின் உடல்நிலை குறித்தும், சிகிச்சை முறைகள் குறித்தும் கேட்டறிந்தேன். மேலும் விஜயகாந்த் விரைவில் பூரண குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று தெலுங்கானா கவர்னர் மற்றும் புதுச்சேரி துணைநிலை கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்து உள்ளார்.