என் கணவர் இறப்பு குறித்து தவறான தகவல்களை பரப்பாதீர்கள்: நடிகை மீனா

என் கணவர் இறப்பு குறித்து தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்’ என, நடிகை மீனா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நடிகை மீனா – வித்யாசாகர் திருமணம், 2009ல் நடந்தது. இவர்களுக்கு நைனிகா என்ற பெண் குழந்தை உள்ளது. சென்னை, சைதாப்பேட்டையில் குடும்பத்துடன் வசித்து வந்த மீனாவின் கணவர் வித்யாசாகர், ௪௮, சில மாதங்களாக நுரையீரல் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்தார். சமீபத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வித்யாசாகர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்ததாக, தகவல்கள் வெளியாகின.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மீனா வெளியிட்ட அறிக்கையில், என் கணவரின் இறப்பால், நான் ஆழ்ந்த சோகத்தில் உள்ளேன். பத்திரிகையாளர்கள், இந்த சூழ்நிலையில் எங்கள் தனியுரிமையை மதிக்க வேண்டும். இந்த விஷயத்தில், மேலும் தவறான செய்திகளை பரப்புவதை தயவு செய்து நிறுத்துங்கள். இந்த கடினமான சூழலில், என்னுடன் இருந்த நல் உள்ளங்களுக்கு நன்றி என்று மீனா கூறியுள்ளார்.