நடிகர் சீயான் விக்ரமுக்கு மாரடைப்பு!

நடிகர் சியான் விக்ரமுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விக்ரமுக்கு மாரடைப்பு ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை ஆழ்வார்பேட்டையில் இருக்கும் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இது குறித்து அறிந்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சீயான் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ளனர். சீயான் மிகவும் ஆரோக்கியமானவர், ஃபிட்னஸ் ஃப்ரீக். அவருக்கு ஒன்றும் ஆகாது. விரைவில் வீடு திரும்புவார் என்கிறார்கள் ரசிகர்கள். விக்ரமுக்கு மாரடைப்பு என்பதையே யாராலும் நம்ப முடியவில்லை. சீயான் எப்படி இருக்கிறார் என்று அப்டேட் கொடுக்குமாறு அவரின் மகன் த்ருவிடம் ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் அதிகப்படியான ரிஸ்க் எடுத்து படங்களில் நடிக்கக்கூடியவர் நடிகர் விக்ரம். தனது உடல் எடையை அதிகரித்தும் குறைத்தும் பல படங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்வித்துள்ளார். நடிகர் விக்ரமுக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகர் சியான் விக்ரமுக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், அவர் உடனடியாக மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகிறார். சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் தான் நடிகர் விக்ரமுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

விக்ரம் இருதயத்திற்கு செல்லும் குழாய்களில் இரண்டு இடங்களில் அடைப்பு ஏற்பட்டு இருப்பதால் ஆஞ்சியோ செய்யப்பட்டதை அடுத்து தற்போது விக்ரம் நலமுடன் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், இன்னமும் நடிகர் விக்ரம் மருத்துவமனையில் தான் ஓய்வில் இருப்பதாகவும், விரைவில் வீடு திரும்புவார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், ரசிகர்கள் பெருமூச்சு விட்டுள்ள்னர். பொன்னியின் செல்வன் டீசர் வெளியீடு இன்று மாலை நடைபெற உள்ள பொன்னியின் செல்வன் டீசர் நிகழ்ச்சியில் சியான் விக்ரம் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அவர் திடீரென உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற்கிற தகவல் ஒட்டுமொத்த திரையுலகையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.