திருவண்ணாமலையில் தேசியக்கொடி ஏற்றிய இளையராஜா!

திருவண்ணாமலை ரமண மகரிஷி ஆசிரமத்தில் இசையமைப்பாளர் இளையராஜா தேசியக்கொடி ஏற்றி வந்து பாரதியார் பாடலைப் பாடினார்.

கடந்த 1947ம் ஆண்டில் இந்தியா சுதந்திரம் பெற்றதிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஸ்ரீ ரமண மகரிஷி ஆசிரமத்தில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 76வது சுதந்திர தின விழாவையொட்டி மாநிலங்களவை நியமன உறுப்பினரும். இசையமைப்பாளருமான இளையராஜா திருவண்ணாமலை ரமண மகரிஷி ஆசிரமத்தில் தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது பாரதியாரின் பாருக்குள்ளே நல்ல நாடு என்ற பாடலை இளையராஜா பாடினார்.