‘பில்லா’ படத்தில் கவர்ச்சிக்கான காரணத்தை கூறிய நயன்தாரா!

‘கனெக்ட்’ படத்திற்காக பிரபல தொகுப்பாளினி திவ்யத்ர்ஷினிக்கு நயன்தாரா அளித்துள்ள பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்பவர் நயன்தாரா. ரஜினி, விஜய், அஜித் என உச்ச நடசத்திரங்கள் பலருடனும் இணைந்து நடித்துள்ளார். அண்மையில் தனது நீண்ட நாள் காதலரான விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். கடந்த 18 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழும் நயன்தாரா தற்போது பாலிவுட் படங்களிலும் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் தற்போது நயன்தாரா நடிப்பில் மற்றொரு ஹாரர் த்ரில்லராக ‘கனெக்ட்’ என்ற படத்தை இயக்கியுள்ளார் அஷ்வின் சரவணன். சமீபத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான ‘கோல்டு’ படம் எதிர்பார்த்த அளவுக்கு பெயரை பெறவில்லை. இந்நிலையில் நேற்றைய தினம் ‘கனெக்ட்’ படம் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக பிரபல தொகுப்பாளின் டிடி என்கிற திவ்யதர்ஷினிக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார் நயன்தாரா. அதில் பல விஷயங்களை பேசிய அவர் அஜித்தின் ‘பில்லா’ படத்தில் கவர்ச்சியாக நடித்தது தொடர்பாக விளக்கமளித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது:-

பில்லா படம் பண்ணும்போது இயக்குநர் விஷ்ணுவர்தனை தவிர, யாருக்கும் என் மீது நம்பிக்கை இல்லை. முழுக்க முழுக்க கிளாமர் மற்றும் ஸ்டைலிஷாக அதுவரை யாருமே என்னை பார்த்ததில்லை. அந்த நேரம் நிறைய ஹோம்லி கேரக்டர்களில்தான் நடித்துக்கொண்டிருந்தேன். அப்போது விஷ்ணுதான் என் மீது நம்பிக்கை வைத்தார். அவரின் மனைவியும் டிசைனருமான அனுவர்தனும் என்னை அதிகம் நம்பினார். அவர் வடிவமைத்த ஸ்டைலிங்கான காஸ்ட்யூம்ஸ்தான் என்னை வித்தியாசப்படுத்தி காட்டியது. இப்படியும் என்னால் நடிக்க முடியும் என்பதை நிரூபிக்க வேண்டிய இடத்தில் இருந்ததால், அந்த கதாபாத்திரத்தில் என்னால் கிளாமராக நடிக்க முடிந்தது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.