குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்ட பகுதியில் தடை விலக்கப்பட்டது

18 நாட்களாக ராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்ட நஞ்சப்பசத்திரம் பகுதியில் தடை விலக்கப்பட்டது, இயல்பு நிலைக்கு திரும்பியது.

முன்னதாக குன்னூர் அருகே நஞ்சப்பசத்திரம் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 14 போ் பலியானார்கள். ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தை ராணுவத்தினரும் போலீசாரும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து அந்த பகுதியில் பொதுமக்கள் நுழையாதவாறு சீல் வைத்தனர். தற்போது அந்தத் தடை நீக்கப்பட்டுள்ளது.