தமிழகம் வர முயன்ற 14 இலங்கை தமிழர்கள் கைது!

தமிழகம் வர முயன்ற 14 இலங்கை தமிழர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து, மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் இலங்கையிலிருந்து தமிழர்கள் அவ்வப்போது, படகு மூலம் தப்பி தமிழகத்துக்கு அகதிகளாக வருகின்றனர்.

இந்நிலையில், இலங்கையில் இருந்து தமிழகம் வர முயன்ற 14 இலங்கை தமிழர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மன்னார் பேசாலைப் பகுதி வழியாக வர முயன்றவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் 14 பேரில், 5 பெண்களும், 5 சிறுவர்களும் அடங்குவர். இதனையடுத்து 14 தமிழர்களையும் மன்னார் போலீசாரிடம் இலங்கை கடற்படை ஒப்படைக்க உள்ளனர்.