ராஜ்யசபா சீட் அளிக்கப்பட வாய்ப்புள்ளதாக வெளியான தகவலை அதானி குழுமம் மறுத்துள்ளது

தொழிலதிபர் கவுதம் அதானி அல்லது அவரது மனைவிக்கு ஆந்திராவில் ராஜ்யசபா சீட் அளிக்கப்பட வாய்ப்புள்ளதாக வெளியான தகவலை அதானி குழுமம் மறுத்துள்ளது.

ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்துக்கான ராஜ்யசபா தேர்தல் அடுத்த மாதம் 10ல் நடக்கிறது. இதில், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் சார்பில் தொழிலதிபர் கவுதம் அதானி அல்லது அவரது மனைவி ப்ரீத்தி அதானிக்கு சீட் வழங்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.

இதை அதானி குழுமம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. ‘அதானி குடும்பத்தை சேர்ந்த யாருக்கும் அரசியலில் சேரவோ, தேர்தலில் போட்டியிடவோ ஆர்வம் இல்லை. இதுபோன்ற தவறான தகவல்களை நம்ப வேண்டாம்’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது.