ஐதராபாத்தில் மேடையில் தவறி விழுந்த உளவுத்துறை டிஎஸ்பி சாவு!

ஐதராபாத்தில் துணை ஜனாதிபதி பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தபோது விழா மேடையில் இருந்து தவறி விழுந்த உளவுத்துறை டிஎஸ்பி பரிதாபமாக இறந்தார்.

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள மாதப்பூரில் தெலுங்கு திரைப்பட கவிஞர் சிறிவெண்ணெலா சீதாராம சாஸ்திரியின் நூல் வெளியீட்டு விழா இன்று ஷில்பகலா ஆடிட்டோரியத்தில் நடைபெற உள்ளது. இதில் துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு பங்கேற்க உள்ளார். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை உளவுத்துறை இயக்குனரும் டிஎஸ்பியுமான குமார் அம்மிரேஷ் மற்றும் அதிகாரிகள் நேற்றுமுன்தினம் ஆய்வு செய்தனர். அப்போது, உளவுத்துறை டிஎஸ்பி குமார் அம்மிரேஷ் மேடையில் இருந்து திடீரென கால்தவறி பள்ளத்தில் விழுந்தார். படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.