ஜம்மு – காஷ்மீரில் சுரங்கப்பாதை விபத்து; பலி 10 ஆக உயர்வு!

ஜம்மு – காஷ்மீரில் கட்டப்பட்டு வந்த சுரங்கப்பாதையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10ஆக உயர்ந்தது.

ஜம்மு – காஷ்மீரிலிருக்கும் ராம்பன் மாவட்டத்தில், ஜம்மு – ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப்பாதை கட்டப்படுகிறது. இதில், 19ம் தேதி இரவு, தொழிலாளர்கள் கட்டுமான பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, சுரங்கப் பாதையின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் 13 தொழிலாளர்கள் சிக்கினர். விரைந்து வந்த மீட்புக்குழுவினர் பல மணி நேரம் போராடி, படுகாயம் அடைந்த நிலையில் இருந்த மூன்று பேரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இடிபாடுகளில் இருந்து ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். ஒன்பது பேரை தேடும் பணி தொடர்ந்து நடந்தது. இந்நிலையில், நேற்று மேலும் ஒன்பது உடல்கள் மீட்கப்பட்டன. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10ஆக உயர்ந்தது.