சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைப்பு!

ஜூன் 2-ம் தேதி தொடங்கவிருந்த சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சென்னை பல்கலைகழகம் மற்றும் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கல்லூரிகளுக்கும் ஜூன் இரண்டாம் தேதி செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த தேர்வுக்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் பல்கலைக்கழக அதிகாரிகள் செய்துவந்தனர். இந்த நிலையில் சற்று முன் சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் ஜூன் இரண்டாம் தேதி தொடங்கவிருக்கும் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த தேர்வுகள் ஜூன் 15ம் தேதி முதல் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பானது சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கலை அறிவியல் கல்லூரிகளுக்கும் பொருந்தும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.