காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்திக்கு கொரோனா!

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்திக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு நேற்று (ஜுன் 2) கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், லக்னோவுக்கு சென்ற அவரது மகள் பிரியங்கா காந்தி, தனது பயணத்தை ரத்து செய்துவிட்டு டெல்லி திரும்புவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. இரண்டு தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பின்பும் சோனியா காந்திவுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் வீட்டீல் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தன் டிவிட்டர் பக்கத்தில் “சிறிய அறிகுறிகளுடன் எனக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. நெறிமுறைகளைப் பின்பற்றி வீட்டில் என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன். என்னுடன் தொடர்பு கொண்டவர்கள் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.