ஆர்த்தி ஸ்கேன் நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை!

ஆர்த்தி ஸ்கேன் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை வடபழனியில் ஆர்த்தி ஸ்கேன் தலைமை அலுவலகம் இயங்கி வருகிறது. இந்நிலையில் இன்று காலை முதல் சென்னை வடபழனி அலுவலகம் உள்பட தமிழகம் முழுவதும் உள்ள 20க்கும் மேற்பட்ட ஆர்த்தி ஸ்கேன் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த அலுவலகங்களில் வரி ஏய்ப்பு நடப்பதாக வந்த புகாரை தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் காலை முதல் சோதனை நடத்தி வருவதாக முதற்கட்டமாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதேப்போல, திருநெல்வேலியில் அமைந்துள்ள 2 ஆர்த்தி ஸ்கேன் சென்டரிலும் 6 அதிகாரிகள் கொண்ட குழுவினர் 2 கார்களில் வந்து தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.