சித்து மூசேவாலா கொலை: கோல்டி பிராருக்கு ‘ரெட் கார்னர்’ நோட்டீஸ்!

பஞ்சாப் பாடகர் சித்து மூசேவாலா கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கோல்டி பிராருக்கு எதிராக ‘ ரெட் கார்னர் ‘நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பஞ்சாபில் பிரபல பஞ்சாபி மொழி பாடகர் சித்து மூசேவாலா, மான்சா மாவட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கை, டெல்லி போலீசின் சிறப்பு பிரிவு விசாரித்து வருகிறது. இதில் இரண்டு பேர் கைது செய்ய்பப்ட்டுள்ளனர் .பஞ்சாபை சேர்ந்த நிழல் உலக தாதா லாரன்ஸ் பிஷ்னோய் இந்த கொலை சதியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

இந்த வழக்கில் மற்றொரு குற்றவாளியான கனடாவில் உள்ள கோல்டி பிரார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவருக்கு எதிராக சர்வதேச போலீஸ் அமைப்பான இன்டர் போல் உதவி நாடப்பட்டுள்ளது. இன்டர் போல் அமைப்பு ‘ரெட் கார்னர்’ நோட்டீஸ் அனுப்பியுள்ளது.