மராட்டியத்தில் வரும் 4 ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு!

மராட்டியத்தில் வரும் 4 ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மராட்டியத்தில் சட்டப்பேரவையில் வரும் 4-ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை சபாநாயகர் பதவிக்கான வேட்பு மனு தாக்கல் நடைபெறுகிறது. நாளை மறுநாள் சபாநாயகர் தேர்வாகிறார். நாளை முதல் தொடங்கவிருந்த 2 நாள் சிறப்பு பேரவை கூட்டம் 3, 4-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. புதிய முதல்-மந்திரியாக பதவி ஏற்ற ஏக்நாத் ஷிண்டே வரும் 4-ம் தேதி பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கிறார்.